All Songs by Jolly Abraham

Thuthipom Alleluya Padi – துதிப்போம் அல்லேலூயா பாடி

Thuthipom Alleluya Padi
துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனைப் போற்றி
மகிமை தேவ மகிமை
தேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா

1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்
தம்மை என்றும் அதற்காகத் தந்தார்
அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்
அடைக்கலம் கொடுத்திடுவார் – துதிப்போம்

2. கூப்பிடும் வேளைகளில் என்னை
தப்புவிக்க ஆத்திரமாய் வந்தார்
சிங்கத்தின் மேலே நடந்திடுவேனே
சர்ப்பங்களை மிதித்திடுவேன் – துதிப்போம்

3. பாதம் கல்லில் என்றும் இடறாமல்
கரங்களில் தாங்கிடுவார் தூதர்
ஒரு போதும் வாதை உன் கூடாரத்தை
அணுகாமல் காத்திடுவார் – துதிப்போம்

4. அஞ்சிடேனே இருளிலே என்றும்
நடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்
பயங்கரத்திற்கும் பறக்கும் அம்பிற்கும்
பயந்திடேன் ஜெயித்திடுவேன் – துதிப்போம்

5. தேவன் எந்தன் அடைக்கலமாமே
ஒரு போதும் பொல்லாப்பு வராதே
சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே
விடுவித்துக் காத்திடுவார் – துதிப்போம்

Oh Parisutha Aaviyae – ஓ பரிசுத்த ஆவியே

Oh Parisutha Aaviyae
ஓ பரிசுத்த ஆவியே
என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன்
இறைவா ஆராதனை செய்கின்றேன்

1. என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்
புது வலுவூட்டி என்னை தேற்றும்
என் கடமை என்னவென்று காட்டும்
அதை கருத்தாய் புரிந்திட தூண்டும்
என்ன நேர்ந்தாலும்
நன்றி துதி கூறி பணிவேன் என் இறைவா
உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் – ஓ பரிசுத்த ஆவியே } – 2