All Songs by Saral Navaroji

Unnadhathai Nokkum Padhai – உன்னதத்தை நோக்கும் பாதை

Unnadhathai Nokkum Padhai

உன்னதத்தை நோக்கும் பாதை இன்னிலத்தை தாண்டுதே
என்னை இயேசு தம் பக்கம் இழுத்து கொள்கின்றார்.

எத்தனையோ பயங்கரங்கள் எந்தன் யாத்திரையில்
அத்தனையும் மேற்கொண்டேன் நான் இயேசு நாமத்திலே
ஆண்டவர் என்னோடிருந்து என்னை அதரித்தார்
ஆவி ஆத்துமா தேகம் யாவும் முற்றும் ஒப்படைத்தேன் – உன்னதத்தை

என்னிலே விசுவாசத்தையும் தொடங்கினார் இயேசு
எப்படியும் வெற்றியாக அதை முடித்திடுவார்
ஓடுகின்றேன் பொறுமையோடு இயேசுவை நோக்கி
ஜீவ கிரீடம் சூடிடுவேன் தேவ சந்நிதியில் – உன்னதத்தை

Keytaal Koduppen – கேட்டால் கொடுப்பேன்

Keytaal Koduppen

கேட்டால் கொடுப்பேன்
கர்த்தர் இயேசு இவ்வாக்களித்தார்
ஜெபித்தால் ஜெயமே
சித்தம் போல் அவர் பதிலளிப்பார்

1. அன்பின் ஆவியினால்
அகமே நிறைந்தே
அனலாக ஜெபித்திடுவோம்
அவிசுவாசங்களோ
அணுகாமலே நாம்
அவர் வார்த்தையை பற்றிக் கொள்வோம்
அவர் அதிசயம் நடத்திடுவார்

2. கர்த்தர் பாதத்திலே
நம்மைத் தாழ்த்திடுவோம்
குற்றம் யாவும் அறிக்கை செய்வோம்
கபடம் இல்லாத
உதட்டில் பிறக்கும்
கிருபை மிகும் ஜெபம் கேட்பார்
கண்ணிர் யாவையும் துடைத்திடுவார்

3. நினையாத நேரம்
இயேசு வந்திடுவார்
நிதம் விழிப்பாய் ஜெபித்திடுவோம்
அஸ்திபாரமுள்ள
மூலைக்கல் சீயோனில்
அழகாகவே ஜொலித்திடுதே
அதை நம்பி ஜெயம் பெருவோம்

Senaikalin Karthar Nallavarae – சேனைகளின் கர்த்தர் நல்லவரே

Senaikalin Karthar Nallavarae

சேனைகளின் கர்த்தர் நல்லவரே
சேதமின்றி நம்மை காப்பவரே
சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்
சோதனை வென்றிட தந்தருள்வார்

எக்காலத்தும் நம்பிடுவோம்
திக்கற்ற மக்களின் மறைவிடம்
பக்கபலம் பாதுகாப்பும் இக்கட்டில் ஏசுவே அடைக்கலம்

1. வெள்ளங்கள் புரண்டுமோதினாலும்
உள்ளத்தின் உறுதி அசையாதே
ஏழு மடங்கு நெருப்புநடுவிலும்
ஏசு நம்மோடங்கு நடக்கின்றார்

2. ஆழத்தினின்றும் நாம் கூப்பிடுவோம்
ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார் கப்பலின் பின்னணி
நித்திரை செய்திடும்
கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன்?

3. காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்
கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம்
ஜீவனானாலும் மரணமானாலும் நம் தேவனின்
அன்பில் நிலைத்திருப்போம்

4. இயேசு நம் யுத்தங்கள் நடத்துவார்
ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி
யாவையும் ஜெயித்து வானத்தில் பறந்து
ஏசுவை சந்தித்து ஆனந்திப்போம்

Senaikalin Karthar Nallavarae
Sethaminti Nammai Kaapavarae
Sornthidum Naerangal Thaettidum Vaakkukal
Sothanai Ventida Thantharulvaar

Ekkaalathum Nambiduvom
Thikkatta Makkalin Maraividam
Pakkapalam Paathukaappum Ikkattil Aesuvae Ataikkalam

1. Vellangal Purandumothinaalum
Ullathin Uruthi Asaiyaathae
Aelu Madangu Neruppunaduvilum
Aesu Nammodangu Nadakkintar

2. Aalathintum Naam Koopiduvom
Aaththiramaay Vanthu Thappuvippaar Kappalin Pinnanni
Niththirai Seythidum
Karthar Nammodundu Kavalai Yen?

3. Kaathirunthu Pelan Pettiduvom
Kartharin Arputham Kanndiduvom
Jeevanaanaalum Maranamaanaalum Nam Thaevanin
Anpil Nilaithiruppom

4. Yesu Nam Yuthangal Nadathuvaar
Aettiduvom Entum Jeyakkoti
Yaavaiyum Jeyiththu Vaanaththilparanthu
Aesuvai Santhithu Aananthippom

Thedungal Kandadiveer – தேடுங்கள் கண்டடைவீர்

Thedungal Kandadiveer
தேடுங்கள் கண்டடைவீர்
தேவ தேவனின் தூய திருமுகம் காண
தேடிடுவோம் அதிகாலமே

1. சென்ற வாழ்நாளெல்லாம் காத்தார் – எந்த
சேதமும் வந்தணுகாமல்
இந்தப் புதுதினம் கண்டடைய
தந்தனரே தமது கிருபை – தேடுங்கள்

2. நல்ல சுகம் பெலன் தந்து – தம்
வல்ல நல் ஆவியும் ஈந்து
வெல்லப் பிசாசை ஜெயமெடுத்து
சொல்ல தம் அன்பென்னிலே பொழிந்தார் – தேடுங்கள்

3. ஊண் உடை தந்தாதரித்து – இந்த
ஊழிய பாதையில் காத்து
கூப்பிடும் வேளை செவிகொடுத்து
கேட்டிடும் யாவையும் ஈந்தனரே – தேடுங்கள்

4. ஜீவனும் உள்ள நாளெல்லாம் – என்
தேவனைக் கீர்த்தனம் பண்ணி
ஓசையுள்ள கைத்தாளத்தோடே
நேசைய்யா இயேசுவை ஸ்தோத்தரிப்போம் – தேடுங்கள்

4. காலையில் ஸ்தோத்திரக் கீதம் – இந்த
வேளையில் வேதத்தின் தியானம்
நல்ஜெப தூபம் எனது இன்பம்
நற்கிரியைகளும் செய்துழைப்பேன் – தேடுங்கள்

5. கர்த்தரை நான் எப்பொழுதும் – என்
கண் முன்னில் நிறுத்தி நோக்க
நாள் முழுதும் அவர் பின் நடக்க
நேர்வழி பாதை காட்டிடுவார் – தேடுங்கள்

En Nesar Yesuvin Mel – என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே

En Nesar Yesuvin Mel
என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே
துன்ப வனாந்தரத்தில் நடந்திட
இன்ப நல் வாழ்வடைந்தேன்

லீலி புஸ்பம் சரோனின் ரோஜா
பாலிலும் வெண்மை தூய பிதா
பூரண ரூப சௌந்தர்யமே
பேர் சிறந்த இறைவா

கன்னியர்கள் நேசிக்கும் தேவா
கர்த்தரின் நாமம் பரிமளமே
இயேசுவின் பின்னே ஓடி வந்தோம்
என்னையும் இழத்துக் கொண்டார்

நேசக்கொடி மேல் பறந்தோங்க
நேசர் பிரசன்னம் வந்திறங்க
கிச்சலி மரத்தின் கீழ் அடைந்தேன்
கர்த்தரின் ஆறுதலே

தென்றலே வா வாடையே எழும்பு
தூதாயீம் நற்கனி தூயருக்கே
வேலி அடைத்த தோட்டமிதே
வந்திங்கு உலாவுகின்றார்

நாட்டினிலே பூங்கனி காலம்
காட்டுப்புறாவின் பாட்டொலிக்கும்
கன்மலை சிகரம் என் மறைவே
இந்நேரமே அழைத்தார்

நித்திரையே செய்திடும் ராவில்
நித்தம் என் ஆத்மா நல் விழிப்பே
என் கதவருகே நின்றழைத்த
இயேசுவை நேசிக்கிறேன்

நேசத் தழல் இயேசுவின் அன்பே
நேசம் மரணம் போல் வலிதே
வெள்ளங்கள் திரண்ட தண்ணீர்களால்
உள்ளம் அணைந்திடாதே

தூய ஸ்தம்பம் போலவே எழும்பி
தேவ குமாரன் வந்திடுவார்
அம்மினதாபின் இரதம் போல
அன்று பறந்து செல்வேன்

En Nesar Yesuvin Mel Saarnthae
Thunba Vanaantharathil Nadanthida
Inba Nal Vaalvatainthaen

Leeli Puspam Saronin Rojaa
Paalilum Vennmai Thooya Pithaa
Poorana Roopa Sauntharyamae
Paer Sirantha Iraivaa

Kanniyarkal Naesikkum Devaa
Kartharin Naamam Parimalamae
Yesuvin Pinnae Odi Vanthom
Ennaiyum Ilathu Konndaar

Nesakkoti Mel Paranthonga
Naesar Pirasannam Vanthiranga
Kichchali Marathin Geel Atainthaen
Karththarin Aaruthalae

Thentalae Vaa Vaataiyae Elumpu
Thoothaayeem Narkani Thooyarukkae
Vaeli Ataiththa Thottamithae
Vanthingu Ulaavukintar

Naattinilae Poongani Kaalam
Kaattuppuraavin Paattalikkum
Kanmalai Sikaram En Maraivae
Innaeramae Alaiththaar

Niththiraiyae Seythidum Raavil
Niththam En Aathmaa Nal Vilippae
En Kathavarukae Nintalaiththa
Yesuvai Naesikkiraen

Naesath Thalal Yesuvin Anpae
Naesam Maranam Pol Valithae
Vellangal Thirannda Thannnneerkalaal
Ullam Annainthidaathae

Thooya Sthampam Polavae Elumpi
Thaeva Kumaaran Vanthiduvaar
Amminathaapin Iratham Pola
Antu Paranthu Selvaen

Yesuvin Naaman Aathisayamaame- இயேசுவின் நாமம் அதிசயமாமே

Yesuvin Naaman Aathisayamaame

இயேசுவின் நாமம் அதிசயமாமே
என்றென்றும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன்
என்னை விசாரிக்கும் அன்புள்ள இயேசுவே
எப்போதும் என்னுள்ளம் ஜீவிக்கின்றார்

1. காடு மலையும் மேடானாலும்
கர்த்தரே வழிகாட்டி நடத்தினார்
இம்மானுவேல் அவா என்னோடிருந்துமே
இம்மட்டும் காத்ததால் ஸ்தோத்திரிப்பேன்

2. போக்கும் வரத்தும் ஆபத்திலும்
காக்கும் தம் பலமான கரங்களே
நம்பிடுவேனே நான் அண்டிடுவேன் நித்தம்
நன்றி மறவாமல் ஸ்தோத்திரிப்பேன்

3. நிந்தை சுமந்த நேரங்களில்
தந்தை தம் பெலமீந்து தேற்றினாரே
என்னென்ன துன்பங்கள் இன்னும்
வந்தாலுமே – மென்மேலும்
இயேசுவை ஸ்தோத்திரிப்பேன்

4. சோதனையான வியாதிகளில்
வேதனை மரண படுக்கையிலும்
சித்தம் நிறைவேற முற்றும் குணமாக்கி
ஜீவன் அளித்ததால் ஸ்தோத்திரிப்பேன்

5. பாக்கியமான இரட்சிப்புமே
பெற்றேன் இக்கனமான அழைப்புமே
ஆனந்த தைலத்தின் வல்ல அபிஷேகம்
அன்போடு ஈந்ததால் ஸ்தோத்திரிப்பேன்

Karthar Uyirthelunthaar – கர்த்தர் உயிர்த்தெழுந்தார்

Karthar Uyirthelunthaar
கர்த்தர் உயிர்த்தெழுந்தார் – இன்னும்
கல்லறை திறந்திருக்க
நற்செய்தி தரிசனங்கள்
சாற்றி கீர்த்தனம் பண்ணிடுவோம்

1. காரிருளில் கண்ணீருடன்
கல்லறை நோக்கியே சென்றனரே
அற்புதக் காட்சியும் கண்டிட ஸ்திரீகள்
ஆச்சர்யம் அடைந்தனரே

2. மரியாளே என்ற சத்தம்
மா திகைப்பாய் அவள் கேட்டிடவே
ரட்சகர் தரிசனம் கண்டு முன்னோடி
ரபூனி என்றழைத்தான்

3. பயந்திடவே சீஷர்களே
பூட்டின உள்ளறை தங்கினரே
மெய்ச் சமாதானத்தின் வாக்குகள் கூறி
மேசியா வாழ்த்தி சென்றார்

Karthar Uyirthelunthaar – Innum
Kallarai Thiranthirukka
Narseythi Tharisanangal
Saatri Keerthanam Panniduvom

1. Kaarirulil Kannnneerudan
Kallarai Nokkiyae Sentanarae
Arputha Kaatchiyum Kantida Sthirekal
Aacharyam Adainthanarae

2. Mariyalae Endra Satham
Maa Thikaipaai Aval Kaetidavae
Ratchakar Tharisanam Kandu Munnodi
Rapooni Endralaithaan

3. Payanthidavae Sesharkalae
Pootina Ullarai Thanginarae
Mei Samaathaanathin Vaakkukal Koori
Messiyaa Vaalthi Sendaar

Orupothum Maravatha Ummai – ஒருபோதும் மறவாத உண்மை

Orupothum Maravatha Ummai
ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
உனக்கென்ன குறை மகனே

சிறுவந்தொட்டுனை யரு
செல்லப் பிள்ளைபோற் காத்த
உரிமைத் தந்தை யென்றென்றும்
உயிரோடிருப்பாருன்னை

கப்பலினடித் தட்டில் களைப்புடன் தூங்குவார்
கதறுமுன் சத்தங்க்கேட்டால் கடல் புசலமர்த்துவார்
எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்
ஏழைப்பிள்ளை உனக்கு ஏற்ற தந்தை நானென்பார்

கடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயே
கடவாதிருக்க வெல்லை கற்பித்தாரவர்சேயே
விடுவாளோ பிள்ளையைத் தாய் மேதினியிற்றனியே
மெய்ப் பரனை நீதினம் விசுவாசித்திருப்பாயே

உன்னாசை விசுவாசம் ஜெபமும் வீணாகுமா
உறக்க மில்லாதவவ்ர் கண் உன்னைவிட் டொழியுமா
இந்நில மதீலுனக் கென்னவந்தாலும் சும்மா
இருக்குமா அவர்மனம் உருக்கமில்லாதே போமா

Orupothum Maravaatha Unnmai Pithaavirukka
Unakkenna Kurai Undu Makanae

Siruvanthottunai Oru
Sella Pillaipor Kaaththa
Urimai Thanthai Yententum
Uyirotiruppaarunnai

Kappalinati Thattil Kalaippudan Thoonguvaar
Katharumun Saththangakaettal Kadal Pusalamarththuvaar
Epperiya Porilum Aetta Aayuthameevaar
Aelaippillai Unakku Aetta Thanthai Naanenpaar

Kadal Thana Kathikaari Kartharen Rarivaayae
Kadavaathirukka Vellai Karpithaaravarseyae
Viduvaalo Pillaiyai Thaai Maethiniyittaniyae
Mei Paranai Neethinam Visuvaasithiruppaayae

Unnaasai Visuvaasam Jebamum Veenaakumaa
Urakka Millaathavavr Kann Unnaivitoliyumaa
Innila Matheeluna Kennavanthaalum Summaa
Irukkumaa Avarmanam Urukkamillaathae Pomaa

Ulaka Paeyudalaasai Unnai Mosam Seyyaathu
Ookkam Vidaathae Thiruvulamunai Maravaathu
Ilakkum Parisuththaavi Elil Varam Oliyaathu
Entum Maaraa Nannpan Iratchakarudan Sernthu

Irangume En Yesuve – இரங்குமே என் இயேசுவே

Irangume En Yesuve
இரங்குமே என் இயேசுவே
இரக்கத்தின் ஐஸ்வரியமே
கூவி கதறியே ராவும் பகலுமே
கெஞ்சும் ஜெபம் கேளுமே

நித்தம் எமக்காய் பரிந்து பேசும்
நள்ளிரவின் நண்பனே – அன்பின்
பிதா முன்னில் இன்று ஜெபித்திடும்
அன்பர் ஜெபங்கேளுமே

அன்று நினிவே அழிவைக் கண்டே
அன்பே இரங்கினீரே – யோனா
உரைத்த தம் ஆலோசனை தந்து
ஏழை ஜெபங்கேளுமே

எத்தனை துன்பம் சகித்து மீட்டீர்
எல்லாமே வீணாகுமோ
அத்தி மரத்திற்கு அன்று இரங்கினீர்
அந்த ஜெபங்கேளுமே

சோதனையினின்று இரட்சித்தீரே
சோதோமின் பக்தனையே
ஆபிரகாம் அன்று வேண்டி ஜெபித்ததோர்
ஆதி ஜெபங்கேளுமே

தாரும் உயிர் மீட்சி சபைதனில்
சோரும் உள்ளம் மீளவே
கர்த்தாவே உம் ஜனம் செத்த நிலை மாற
பக்தர் ஜெபங்கேளுமே

Seeyonile En Thida Asthiparam – சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே

Seeyonile En Thida Asthiparam

சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவே
அவர் நான் என்றும் நம்பும் கன்மலை (2)

1. கலங்கிடுவேனோ ?பதறிடுவேனோ ?
கர்த்தரில் விசுவாசம் இருக்கையிலே
அசையா என் நம்பிக்கை நங்கூரமே
இயேசுவில் மாத்திரமே (2)

2. புயலடித்தாலும் அலை மோதினாலும்
எவர் எனக்கெதிராய் எழும்பினாலும்
எனக்கு எட்டாத உயரத்திலே
எடுத்தவர் நிறுத்திடுவார் (2)

3. வியாதியினாலே காயம் வருந்தி
வாடியே மரண நிழல் சூழினும்
விசுவாசத்தின் கரத்தாலவர்
வாக்கை நான் பற்றிடுவேன் (2)

4. மா பரிசுத்த விசுவாசத்தாலே
மா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவே
திரை வழியாம் தன் சரீரத்தினால்
திறந்தாரே தூய வழி (2)

5. நான் விசுவாசிப்போர் இன்னாரென்றறிவேன்
என்னையே படைத்திட்டேன்
அவர் கரத்தில் முடிவுவரை
நடத்திடுவார் முற்றுமாய் இரட்சிப்பாரே (2)

Seeyoanile En Thida Asthipaaram Kristhuvae – Avar

Naan endrum nambum kanmalai (2)

1. Kalangiduvaenoa? Padhariduvaznoa?
Kartharil visuvaasam irukkaiyilae
Asaiyaa en nambikkai nangooramae
Yaesuvil maathiramae (2)

2. Puyal adithaalum alai moadhinaalum
Evar enakkedhiraai ezhumbinaalum
Enakku ettaadha uyarathilae
Eduthavar niruthiduvaar (2)

3. Vyaadhiyinaalae kaayam varundhi
Vaadiyae marana nizhal soozhinum
Visuvaasathin karathaal Avar
Vaakkai naan pattriduvaen (2)

4. Maa parisutha visuvaasathaalae
Maa parisutha sthalam aegidavae
Thirai vazhiyaam Tham sareerathinaal
Thirandhaarae thooya vazhi (2)

5. Naan visuvaasippoar innar endrarivaen
Ennaiyae padaithittaen Avar karathil
Mudivu varai ennai nadathiduvaar
Muttrumaai ratchippaarae (2)