Song Tags: Christmas Song

Christmas Naalidhae – கிறிஸ்மஸ் நாளிதே

Christmas Naalidhae Ellorum Paadi Kondadi Magilum
கிறிஸ்மஸ் நாளிதே (4)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே

கிறிஸ்மஸ் நாளிதே (4)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே
மேய்ப்பர்கள் வணங்கிட சாஸ்திரிகள்
தொழுதிட பிறந்திட்டார் இயேசு
குடும்பங்கள் சேர்ந்திட இயேசுவை
தொழுதிட பிறந்திட்டார் இயேசு

கிறிஸ்மஸ் நாளிதே (4)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே

பரலோகம் மகிழ்ந்திட தூதர்கள்
துதித்திட பிறந்திட்டார் இயேசு
பூலோகம் மகிழ்ந்திட உலகமே
துதித்திட பிறந்திட்டார் இயேசு

கிறிஸ்மஸ் நாளிதே (4)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே

கிறிஸ்மஸ் நாளிதே (4)
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் நாளிதே

Vinni Oliye Kannin Maniyay – விண்ணின் ஒளியே கண்ணின் மணியாய்

Vinni Oliye Kannin Maniyay
விண்ணின் ஒளியே கண்ணின் மணியாய்
மண்ணில் வந்து உதித்தார்
மண்ணில் மாளும் மாந்தரை மீட்கும்
கோதுமை மணியாய் பிறந்தார்

Happy Christmas, Merry Christmas
Happy Happy Christmas,
Wish you, Merry Merry Christmas

1. விண்மீன் ஜொலிக்க மேய்ப்பர் கண்டு
இயேசு பிறந்ததை அறிந்தார்
நமக்குள் இயேசு பிறந்ததை அறிய
சாட்சியாய் வாழ்ந்து ஜொலிப்போம்

(Happy …)
2. பாவ உலகை பரிசுத்தமாக்க
பரமன் இயேசு பிறந்தார்
பாவி நீயும் தேடி வந்தால்
பரலோகை அறிய செய்வார்
(Happy …)

3. பழையதை கழித்து புதியன தரவே
புதுமைப்பாலகன் பிறந்தார்
புண்ணியரை அறிவிக்கும் புதிய மனிதராய்
புத்தாண்டுக்குள் செல்வோம்
(Happy …)

4. ஏழையை மீட்கும் ஏவலனாக
மாட்டுக்குடிலில் பிறந்தார்
ஏழையின் சிரிப்பில் இயேசுவை காண
சிறந்ததை நாமும் கொடுப்போம்
(Happy …)

En Meetpar Kiristu Piranthar – என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார்

En Meetpar Kiristu

என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார்
எனக்கென்ன ஆனந்தம்
என் மீட்பர் இயேசு உதித்தார்
எனக்கென்ன பேரின்பம்

சரணங்கள்
பூலோகமெங்கும் ஓர் செய்தி
மேலோகமெங்கும் விண் ஜோதி
நரர் வாழ்ந்திடவே பெரும் நீதி
நீர் வாரும் மெய் ஜோதி – என்

1. உந்தன் மகிமையை என்றென்றும் சொல்வேன்
உந்தன் கிருபையின் மேன்மையைக் கண்டேன்
நித்திய ஜீவ கிரீடம் எனதின்றே
பரலோக வாழ்வின்றே – என்

2. ஆ! அல்லேலூயா துதி பாடு
இன்று அமலன் பிறந்தார் பாரு
மோட்ச வாசலை திறந்தார் பாரு
எந் நாளும் புகழ் பாடு – என்

Sarva Valla Devan – சர்வ வல்ல தேவன் பிறந்திட்டார்

Sarva Valla Devan
சர்வ வல்ல தேவன் பிறந்திட்டார்
நமக்காகவே பிறந்திட்டார்
இந்த உலகிலே பிறந்திட்டார்
நம்மை மீட்கவே பிறந்திட்டார்

நம் பாவம் கழுவ
நம் சாபம் சுமக்க
நம் வாழ்வின் ஒளியாய்
இவ்வுலகத்தின் பிள்ளையை

அவர் தேவனே படுவேன்
எல்ஷடாய் உம்மை உயர்த்திடுவேன்

பிறந்தார் (2) நம் இயேசு பிறந்தார்
பிறந்தார் (2) நமக்காகவே அவர் பிறந்தார்
பிறந்தார் (2) தூய தேவன் பிறந்தார்
பிறந்தார் (2) இரட்சகர் அவர் பிறந்தார்

1. தாவீதின் ஊரிலே நமக்காகவே அவர் வந்தாரே
ஏழ்மையின் கோலம் எடுத்து பனி இரவினிலே அவர் வந்தாரே
என் வாழ்வில் சமாதானம் அவர் தந்தாரே (2)
என் வாழ்வில் சந்தோஷம் அவர் தந்தாரே(2)

| அவர் நல்லவர் அழகுள்ளவர் வர்ணிக்க |
| வார்த்தை இலையே |

2. உன்னதத்தில் மகிமை Hey உண்டாகும்படிக்கு அவர் உதித்தாரே
இந்த பூமியில் இரட்சிப்பை நிலைநிறுத்தவே அவர் உதித்தாரே

என் வாழ்நாள் முழுவதும் அவர் பரிசுத்தர்(2)
என்று சொல்லி அவரையே துதித்திடுவேன்(2)

| அவர் நல்லவர் அழகுள்ளவர் வர்ணிக்க |
| வார்த்தை இலையே |

Sarva valla devan pirandhitar
Namakagave pirandhitar
Indha ulagilae pirandhitar
Nammai meetkavae pirandhitar

Nam pavam kaluva
Nam sabam sumakka
Nam valvin oliyai
Evulagathin pillayai

Avar devanae paduvaen
Elshaddai ummai uyarthiduvaen

Pirandhar(2) nam yesu pirandhar
Pirandhar(2) namakagave avar pirandhar
Pirandhar(2) thuya devan pirandhar
Pirandhar(2) ratchagar avar pirandhar

1. Davidin oorilae namakagave avar vandharae
yelmayin kolam eduthu pani eravinilae avar vandharae (2)

En valvil samadhanam avar tharugirar
En valvil sandhosham avar tharugirar (2)
| Avar nallavar alagulavar varnika |
| varthai ilayae (4) |

2. Unadhathil magimai undagumbadiku avar udhitharae
Indha boomiyil ratchipai nilainiruthavae avar udhitharae (2)

En valnal muluvadhum avar parisuthar
Endru soli avarayae nan thudhithiduvaen (2)
| Avar nallavar alagulavar varnika |
| varthai ilayae (4) |

Agora Kasthi Pattorai – அகோர கஸ்தி பட்டோராய்

Agora Kasthi Pattorai

1. அகோர கஸ்தி பட்டோராய்
வதைந்து வாடி நொந்து,
குரூர ஆணி தைத்தோராய்
தலையைச் சாய்த்துக்கொண்டு,
மரிக்கிறார் மா நிந்தையாய்!
துன்மார்க்கர் சாகும் வண்ணமாய்
மரித்த இவர் யாவர்?

2. சமஸ்தமும் மா வடிவாய்
சிஷ்டித்து ஆண்டுவந்த,
எக்காலமும் விடாமையாய்
விண்ணோரால் துதிபெற்ற
மா தெய்வ மைந்தன் இவரோ?
இவ்வண்ணம் துன்பப்பட்டாரோ
பிதாவின் திவ்விய மைந்தன்?

3. அநாதி ஜோதி நரனாய்
பூலோகத்தில் ஜென்மித்து,
அரூபி ரூபி தயவாய்
என் கோலத்தை எடுத்து,
மெய்யான பலியாய் மாண்டார்
நிறைந்த மீட்புண்டாக்கினார்
என் ரட்சகர், என் நாதர்.

Magilnthu Kalikurungal – மகிழ்ந்து களிகூருங்கள்

Magilnthu Kalikurungal
மகிழ்ந்து களிகூருங்கள்
மகிழ்ந்து களிகூறுங்கள் – 2
இயேசு இராஜன் பிறந்ததினால்
மகிழ்ந்து களிகூறுங்கள்

1. விண்ணுலகம் துறந்து மண்ணுலகம் உதித்து
தம்மைத் தாமே வெறுத்து அவர் நம்மை மீட்க வந்தார்

2. பாவமறியா அவரே ஜீவன் தந்திடவே
நித்திய வாழ்வு நமக்களிக்க இயேசு இராஜன் பிறந்தார்

3. வாழ்ந்து காட்டிய வழியை மகிழ்ந்து பின்பற்றியே
வேறுபலரை அவர் மந்தையில் இணைத்து பலன் அடைவோம்

Malarae Malarae – மலரே மலரே வெள்ளி

Malarae Malarae

மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது .. இம்
மண்ணில் பூத்த மலரே – உயர் விண்ணின் வேந்தர் வரவு

1. வானிலே மந்தாப்பு விண் தூதர் மனதில் சிரிப்பு
உலகில் அமைதி வாழும் மகிழ்ச்சி நாளும் நிலவும்

நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க

2. வாழ்விலே வந்தாலும் என்னைமாற்றி அமைக்க வாருமே
உலகம் உம்மைக் காணும் உவகை கொள்ளும் நாளும்

நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க

Malarae Malarae Velli Malarae Pon Manthaarappozhuthu .. Im
Mannil Puuththa Malarae – Uyar Vinnin Vaenthar Varavu

1. Vaanilae Manthaappu Vin Thuuthar Manathil Sirippu
Ulakil Amaithi Vaazhum Makizhssi Naalum Nilavum

Neer Vaalga Nitham Vaalga Vaenthae – 2 Neetuuzhi Kaalam Vaalga

2. Vaazhvilae Vanthaalum Ennaimaarri Amaikka Vaarumae
Ulakam Ummaik Kaanum Uvakai Kollum Naalum

Neer Vaalga Nitham Vaalga Vaenthae – 2 Neetuuzhi Kaalam Vaalga

Mei Bhakathara – மெய் பக்தரே நீர்

Mei Bhakathara
1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,
சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்;
இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,
விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;
கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,
ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார்

2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கே
இம்மானுவேல் தாவீதின் ஊரிலே
பூலோக மீட்பராகப் பிறந்தார்,
எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்
என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே
இராவில் தோன்றி மொழிந்திட்டானே

3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,
ஆனந்தப் பாட்டைப் பாடியும், இசைந்து
விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்
மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,
என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்
தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார்

4. இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு
அற்புத காட்சி காண விரைந்து,
யோசேப்புடன் தாய் மரியாளையும்
முன்னணைமீது தெய்வ சேயையும்
கண்டே, தெய்வன்பை எண்ணிப் போற்றினார்,
ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார்

5. கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம்
உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்;
தம்ஜென்மமுதல் சாவுமட்டுக்கும்
அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்
அன்போடு தியானம் செய்து வருவோம்,
நம் மீட்பர்பின்னே செல்ல நாடுவோம்

6. அப்போது வான சேனைபோல் நாமும்
சங்கீதம் பாடலாம் எக்காலமும்;
இந்தக் கெம்பீர நாள் பிறந்தவர்
அந்நாள் நம்மேல் தம் ஜோதி வீசுவார்;
நம் ராயன் அன்பால் ரட்சிப் படைந்தோம்;
அவரின் நித்திய துதி பாடுவோம்

Nadu Kulir Kalam – நடுக் குளிர் காலம்

Nadu Kulir Kalam
1. நடுக் குளிர் காலம் கடும் வாடையாம்
பனிக்கட்டிபோலும் குளிரும் எல்லாம்,
மூடுபனி ராவில் பெய்து மூடவே;
நடுக் குளிர் காலம் முன்னாளே

2. வான் புவியும் கொள்ளா ஸ்வாமி ஆளவே,
அவர்முன் நில்லாது அவை நீங்குமே;
நடுக் குளிர் காலம் தெய்வ பாலர்க்கே
மாடு தங்கும் கொட்டில் போதுமே

3. தூதர் பகல் ராவும் தாழும் அவர்க்கு,
மாதா பால் புல் தாவும் போதுமானது;
கேருபின் சேராபின் தாழும் அவர்க்கே
தொழும் ஆடுமாடும் போதுமே

4. தூதர் தலைத்தூதர் விண்ணோர் திரளும்
தூய கேரூப்ப சேராப் சூழத் தங்கினும்,
பாக்கிய கன்னித் தாயே நேச சிசு தான்
முக்தி பக்தியோடு தொழுதாள்

5. ஏழை அடியேனும் யாது படைப்பேன்?
மந்தை மேய்ப்பனாயின் மறி படைப்பேன்
ஞானி ஆயின் ஞானம் கொண்டு சேவிப்பேன்;
யானோ எந்தன் நெஞ்சம் படைப்பேன்

Piranthar Or Palagan – பிறந்தார் ஓர் பாலகன்

Piranthar Or Palagan
1. பிறந்தார் ஓர் பாலகன்
படைப்பின் கர்த்தாவே;
வந்தார் பாழாம் பூமிக்கு
எத்தேசம் ஆளும் கோவே.

2. ஆடும் மாடும் அருகில்
அவரைக் கண்ணோக்கும்;
ஆண்டவர் என்றறியும்
ஆவோடிருந்த பாலன்

3. பயந்தான் ஏரோதுவும்
பாலன் ராஜன் என்றே;
பசும் பெத்லேம் பாலரை
பதைபதைக்கக் கொன்றே

4. கன்னி பாலா வாழ்க நீர்!
நன்னலமாம் அன்பே!
பண்புடன் தந்தருள்வீர்
விண் வாழ்வில் நித்திய இன்பே

5. ஆதி அந்தம் அவரே
ஆர்ப்பரிப்போம் நாமே
வான் கிழியப் பாடுவோம்
விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே