Song Tags: Moses Rajasekar Song Lyrics

Enna Ennaku Illamal Poonallum – என்ன எனக்கு இல்லாமற் போனாலும்

Enna Enakku Illamal Poonalum

என்ன எனக்கு இல்லாமல் போனாலும்
உம் கிருபை எனக்கு போதுமைய்யா
அன்னந்தண்ணி ஆகாரம் இல்லாமல் போனாலும்
உம் மகிமை எனக்கு போதுமைய்யா
என் இயேசு நாதா
உம் மகிமை எனக்கு போதுமைய்யா

சுற்றத்தாரும் உற்றத்தாரும் என்னை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லையே
தாய் மறந்தாலும் தந்தை மறந்தாலும்
உள்ளகையில் என்னை வரைந்தீரே
உம் மகனாக மாற்றி விட்டீரே

சிங்கக்குட்டிகள் தாழ்ச்சி அடைந்து பட்டினியாக கிடைக்கும்
உம்மை நம்பினோருக்கு குறைவுமில்லையே
எளியவனை நீர் மறப்பதில்லை
நம்பினோரை கைவிடுவதில்லை
அவன் உம்மை விட்டு விலகுவதில்லை

உயர்வே ஆனாலும் தாழ்வே ஆனாலும்
அன்பை என்னில் பிரிப்பதில்லையே
மரணமே ஆனாலும் ஜீவனே ஆனாலும்
நீரின்றி எவரும் இல்லையே
உம் துணை இன்றி வாழ்வு இல்லையே

Naan Nirpathum Nirmulam – நான் நிற்பதும் நிர்முலமாகாததும்

Naan Nirpathum Nirmulam
நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும்
கிருபையே தேவகிருபையே தேவகிருபையே தேவகிருபையே -2

1. காலையில் எழுவதும் கர்த்தரை துதிப்பதும்
மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே
போக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும் – 2
பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே – உன் – 2

2. கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில்
துஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே
ஆழியின் நடுவிலும் சீறிடும் புயலினிலும் – 2
நீர்மேல் நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே – 2

Sollal Aguma – சொல்லால் ஆகுமா

Sollal Aguma
சொல்லால் ஆகுமா இதை சொன்னால் புரியுமா
என் இயேசு ராஜன் புகளைச் சொன்னால் உலகம் தாங்குமா
முக்கோடி எழுத்தாலும் தக்கி முக்கி எழுதினாலும்
மன்னவன் புகழ் தனையே எழுதிட முடியுமா

1. மரித்தவன் வீட்டை மிதித்த தேவன் நீத்த உயிரை உயிர்த்து தந்தார்
கதறின குருடனின் கண்களைத் திறந்து வாழ்வை ஒளி மயமாக்கின தேவன்

2. கவலை கண்ணீரோடு கடந்து வந்திடும் யாரையும் வெறுத்து தள்ளாத தேவன்
வாடி நின்றிடும் மக்களின் குரலுக்கு வார்த்தையை அனுப்பி சுகம் தர வல்லவர்