Song Tags: Tamil Marriage Songs

Tamil Christian Marriage Songs

Aabiragaamai Aasirvathitha – ஆபிரகாமை ஆசீர்வதித்த

Aabiragaamai Aasirvathitha
ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே

1. செல்வி மணமகள் – XXXXXம்
செல்வன் மணமகன் – YYYYYம் -ஆ…
என்றும் ஆசி பெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே
இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
இன்னிசை யெழுப்பி இங்கிதமாய் இனி
இணைந்து வாழவே!

2. கண்ணின் மணிபோல் கணவனும்
இல்லத்தின் விளக்கெனக் காரிகையும் – ஆ…
என்றும் ஆசிப்பெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
இன்னிசை எழப்பி இங்கிதமாயென்றும்
இணைந்து வாழவே (2)

3. அன்பும் அறனும் அங்கு ஓங்குமெனின்
பண்பும் பயனும் உண்டாமே ஆ… ஆ…
இன்பமாக எந்நாளும் அங்ஙனமென்றும் வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
என்றுமிதே இன்பம் கொண்டிவர் வாழவே
நற்புகழடைந்து நண்பருடன் சுற்றம்
நயந்து வாழவே இணைந்து வாழவே

Indha Mangalam Selikavea – இந்த மங்களம் செழிக்கவே

Indha Mangalam Selikavea

இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்
எங்கள் திரித்துவ தேவனே
சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை
கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து

1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மை
ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகி
நிற்க உலகத்தில் விடுத்தாய்
மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்
ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த

2. தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மன
துக்குள் எலியேசா் கொண்டனன்
முக்ய ஆரான் நிலத்தண்டினன் – நினைத்தபடி
சக்கியமதாகக் கண்டனன்
பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாக்குவுக்கு
தக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல

3. சத்திய வேதத்தின் வாசனே – அருளுபரி
சுத்த சுவிசேட நேசனே
பக்தர்கள் பவ விமோசனே – பழுதணுவும்
அற்ற கிறிஸ்தேசுராஜனே
வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்
புத்திர சம்பந்துண்டாக்கி நித்திய சுப சோபனமாய்

Bayanthu Kartharin – பயந்து கர்த்தரின் பக்தி

Bayanthu Kartharin
பயந்து கர்த்தரின் பக்தி வழியில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்
முயன்று உழைத்தே பலனை உண்பான் (2)
முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்

1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் (2)
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்

2. ஓலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போல
மெலிவிலா நல்ல பாலகருன்பாலே (2)
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே

3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதை
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள் (2)
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை

Aabiragamai Aasirvathitha – ஆபிரகாமை ஆசீர்வதித்த

Aabiragamai Aasirvathitha
ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே

1. செல்வி மணமகள் – XXXXXம்
செல்வன் மணமகன் – YYYYYம் -ஆ…
என்றும் ஆசி பெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே
இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
இன்னிசை யெழுப்பி இங்கிதமாய் இனி
இணைந்து வாழவே!

2. கல்லின் மனைபோல கணவனும்
இல்லின் விளக்கென காகையும் – ஆ…
என்றும் ஆசி பெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே
நன்கலமாம் பல நன்மக்களைப் பெற்று
நானிலந்தனிலே நல்லோர் நலம் நாடி
நல்வாழ்வு வாழவே!

Aabiragamai Aasirvathitha
Aabiragaamai Aaseervathiththa Aanndavaa Arulumae

1. Selvi Manamakal – XXXXX im
Selvan Manamakan – YYYYY im – Aaa…
Entum Aasi Pettu Inithu Vaalavae
Vaalavae! Vaalavae!! Vaalavae!!!
Entum Aasipettu Innainthu Vaalavae
Illaramaam Inpa Nallarach Solaiyil
Innisai Yeluppi Ingithamaay Ini
Innainthu Vaalavae!

2. Kallin Manaipola Kanavanum
Illin Vilakkena Kaakaiyum – Aa…
Entum Aasi Pettu Inithu Vaalavae
Vaalavae! Vaalavae!! Vaalavae!!!
Entum Aasipettu Innainthu Vaalavae
Nankalamaam Pala Nanmakkalaip Pettu
Naanilanthanilae Nallor Nalam Naati
Nalvaalvu Vaalavae!

Manavaazhvu Puvi – மணவாழ்வு புவி வாழ்வினில்

Manavaazhvu Puvi
பல்லவி

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு – மங்கள வாழ்வு
வாழ்வினில் வாழ்வு
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு

சரணங்கள்

1. துணை பிரியாது, தோகையிம்மாது
சுப மண மகளிவர் இதுபோது
மனமுறை யோது வசனம் விடாது
வந்தன ருமதருள் பெறவேது – நல்ல

2. ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண வலங்காரா
தேவகுமாரா, திருவெல்லையூரா
சேர்ந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல

3. குடித்தன வீரம் குணமுள்ள தாரம்
கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்
அடக்கமாசாரம் அன்பு, உதாரம்
அம்புவிதனில் மனைக்கலங்காரம் – நல்ல

Mangalam Sezhikka – மங்களம் செழிக்க கிருபை

Mangalam Sezhikka
பல்லவி

மங்களம் செழிக்க கிருபை
அருளும் மங்கள நாதனே

சரணங்கள்

1. மங்கள நித்திய மங்கள நீ
மங்கள முத்தியும் நாதனும் நீ
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
அத்தனுத் கத்தனாம் ஆபிராம் தேவ நீ

2. மங்கள மணமகன் xxxxxx-க்கும்
மங்கள மணமகள் xxxxx-க்கும்
மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத்
துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும்

3. சங்கை நித்திய நாதனும் நீ
பங்கமில் சத்திய போதனும் நீ
மங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும் நீ
இத்தரை இத் திருமணத்தின் இருவர்
ஒத்து நல் இன்பம் உற்றவர் வாழ நடத்தியருளுமே

Mangalam Sezhikka Kirubai Aruzhum
Mangala Naadhane — 2

1. Mangalam Nithiya Mangalame
Mangalam Muthiyum Naadanum nee — (2)
Engal Pungavane, Engal Thungavane
Uthama Sathiya, Nithiya Thathuva, Metha Magathuva
Athanukathanama, Aaviram Thevane — (2) — Mangalam

2. Mangala Manamagan XXXX -ukkum
Mangala Manamagal XXXX – ukkum — (2)
Mannuvelarkum, Maganubavarkum
Bakthiyudan Buthi, Mukthiyalithidum
Nithiyane Ummai, Thuthiyam
Seithidum Sathiya Vetharkum — (2) — Mangalam

Rojapoo Vasamalargal – ரோஜாப்பூ வாசமலர்கள்

Rojapoo vasamalargal
ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)

1. மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
நல்மணமக்கள் மீது நாம்…
எல்லா மலரும் தூவிடுவோம் – ரோஜாப்பூ

2. மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன்
அன்றிலும் தேனும் போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க…
நம் வேண்டுதலோடு தூவிடுவோம் – ரோஜாப்பூ

3. புத்திர பாக்கியம் புகழும் நல் வாழ்வும்
சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம்
நித்திய ஜீவனும் பெற்றிவரென்றும்…
பக்தியை வாழ்ந்திட தூவிடுவோம் – ரோஜாப்பூ

4. கறை திரை அற்ற மணவாட்டி சபையை
இறைவனாம் இயேசு கண்ணுடன் சேர்க்கும்
மங்கள நாளை எண்ணி இப்போ…
நேச மணாளர் மேல் தூவிடுவோம் – ரோஜாப்பூ

Aathumame En Muzhu Ullame – ஆத்துமமே என் முழு உள்ளமே

Aathumame En Muzhu Ullame
ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்
ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த – உன்
ஆண்டவரைத் தொழுதேத்து

சரணங்கள்

1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே

2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே

3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும், மேலான – ஆத்துமமே

4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்த
ஓதரும் தயைசெய் துயிர் தந்த – ஆத்துமமே

5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் – ஆத்துமமே

6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
இதயமே, உள்ளமே, என் மனமே – ஆத்துமமே

Aathumame En Muzhu Ullame
Un Aandavarai Thozhuthethu
Innaal Varai Anbu Vaithaatharitha
Un Aandavarai Thozhuthethu } – 2

1. Potridum Vaanor Poothalaththulor
Saatutharkariya Thanmaiyulla
Potridum Vaanor Poothalaththulor
Saatutharkariya Thanmaiyulla – Aathumame

2. Thalaimurai Thalaimurai Thaangum Vinodha
Ulaga Mun Thondri Ozhiyaatha
Thalaimurai Thalaimurai Thaangum Vinodha
Ulaga Mun Thondri Ozhiyaatha – Aathumame

3. Dhinam Dhinam Ulagil Nee Sei Palavaana
Vinai Poruththarulum Melaana
Dhinam Dhinam Ulagil Nee Sei Palavaana
Vinai Poruththarulum Melaana – Aathumame

4. Vaathai Noi Thunbam Maatri Aanantha
Otharum Thayaisei Thuyir Thantha
Vaathai Noi Thunbam Maatri Aanantha
Otharum Thayaisei Thuyir Thantha – Aathumame

5. Uttrunakkirangi Urimai Paaraatum
Mutrum Kirubaiyinaal Mudi Sootum
Uttrunakkirangi Urimai Paaraatum
Mutrum Kirubaiyinaal Mudi Sootum – Aathumame

Aasirvathiyum Karthare – ஆசீர்வதியும் கர்த்தரே

Aasirvathiyum Karthare
1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
வீசீரோ வானஜோதி கதிரிங்கே
மேசியா எம் மணவாளனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசீர்வதித்திடும்

2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே
உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால்
இம்மணமக்கள் மீதிறங்கிடவே
இவ்விரு பேரையுங் காக்கவே
விண் மக்களாக நடக்கவே
வேந்தா நடத்துமே – வீசீரோ

3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோடென் பாக்கி சூட்சமே
உம்மிலே தங்கித்தரிக்க
ஊக்கம் அருளுமே – வீசீரோ

4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம்
உற்றவான் ராயர் சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே – வீசீரோ

5. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்து துதித்தும்மை என்றும் பிரஸ்தாபிக்க
ஆ தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன் – வீசீரோ

6. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே
வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை
ஆனந்தமாகவே தூய தன்மையதை
ஆடையாய் நீர் ஈயத்தரித்து
சேனையோடே நீர் வரையில்
சேர்ந்து நீர் சுகிக்கவே – வீசீரோ

1. Aaseervathiyum Kartharae Aanandha Migavae
Naesaa Udhiyum Suththarae Niththam Magizhavae
Veeseeroa Vaanajoadhi Kadhiringae
Maesiyaa Em Manavaalanae
Aasaariyarum Vaan Raajanum
Aaseervadhithidum

2. Im Manaveetil Vaareeroa Yaesu Rayarae
Um Manam Veesa Seiyeeroa Oangum Naesamadhaal
Immanamakkal Meedhirangidavae
Ivviru Paraiyung Kaakavae
Vin Makkalaaga Nadakkavae
Vaendhaa Nadathumae – Veeseerao

3. Im Manamakkaloadendrum Endrendrum Thangidum
Ummaiyae Kandum Pinsendrum Oanga Seidharulum
Immaiyae Maotchamaakkum Vallavarae
Inbathoaden Baakki Sootchamae
Ummilae Thangitharikka
Ookam Arulumae – Veeseeroa

4. Otrumaiyaakkum Ivarai Oodaaga Neer Nindrae
Patroadum Meedhu Saaindhumae Paaril Vasikkavae
Vetri Petroangum Ivar Nenjathilae
Veetraalum Neer Yaesu Raajanaam
Utravaan Raayar Saeyarkae
Oppaai Ozhugavae – Veeseerao

5. Poodhala Aaseervadhathaal Pooranamaagavae
Aadharitharulum Kartharae Aaseervadhithidum
Maathiralaaga Ivar Sandhadhiyaar
Vandhu Thudhithemmai Endrum Prasthaabikka
Aa Dhaeva Kirubai Theermaanam
Aam Poal Arulumaen – Veeseerao

6. Gnaana Vivaagam Eppozhudhum Gnaabagamaagavae
Vaana Manaalan Vaanjithu Vaazhga Manaiyaalai
Aanandhamaagavae Thooya Thanmaiyadhai
Aadaiyaai Neer Eeyatharithu
Senaiyoadae Neer Varaiyil
Saerndhu Neer Sugikkavae – Veeseerao

Aasirvathikum Dhevan – ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை

Aasirvathikum Dhevan unnai asirvathipare
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே

1. ஆபிரகாமை ஆசிர்வதித்தவர் ஆசிர்வதிப்பாரே
ஈசாக்கை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2)

2. ஆகாரை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே
அன்னாளை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2)

3. யாக்கோபை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே
யாபேசை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2)

துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே

Aasirvadhikkum dhaevan unnai aasirvadhippaarae
Aasirvadhikkum dhaevan unnai aasirvadhippaarae
Thudhi sthoathram yaesunaadhaa thudhi umakae endrumae
Thudhi sthoathram yaesunaadhaa thudhi umakae endrumae
Aasirvadhikkum dhaevan unnai aasirvadhippaarae

1. Aabiragaamai aasirvadhithavar aasirvadhippaarae
Eesaakkai aasirvadhitha dhaevan aasirvadhippaarae (2)
Aasirvadhikkum dhaevan unnai aasirvadhippaarae (2)

2. Aagaarai aasirvadhitha dhaevan aasirvadhippaarae
Annaalai aasirvadhitha dhaevan aasirvadhippaarae (2)
Aasirvadhikkum dhaevan unnai aasirvadhippaarae (2)

3. Yaakoabai aasirvadhitha dhaevan aasirvadhippaarae
Yaabaesai aasirvadhitha dhaevan aasirvadhippaarae (2)
Aasirvadhikkum dhaevan unnai aasirvadhippaarae (2)

Thudhi sthoathram yaesunaadhaa thudhi umakae endrumae
Thudhi sthoathram yaesunaadhaa thudhi umakae endrumae
Aasirvadhikkum dhaevan unnai aasirvadhippaarae