Song Tags: Tamil Christmas Carol Songs

Kel Jenmitha – கேள் ஜென்மித்த ராயர்க்கே

Kel Jenmitha
1. கேள் ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே
அவர் பாவ நாசகர்
சமாதான காரணர்
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர் போல் கெம்பீரித்து
பெத்லேகேமில் கூடுங்கள்
ஜென்ம செய்தி கூறுங்கள்

கேள் ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே

2. வானோர் போற்றும் கிறிஸ்துவே
லோகம் ஆளும் நாதரே
ஏற்ற காலம் தோன்றினீர்
கன்னியிடம் பிறந்தீர்
வாழ்க நர தெய்வமே
அருள் அவதாரமே
நீர் இம்மானுவேல் அன்பாய்
பாரில் வந்தீர் மாந்தனாய்

3. வாழ்க சாந்த பிரபுவே
வாழ்க நீதி சூரியனே
மீட்பராக வந்தவர்
ஒளி ஜீவன் தந்தவர்
மகிமையை வெறுத்து
ஏழைக்கோலம் எடுத்து
சாவை வெல்லப் பிறந்தீர்
மறு ஜென்மம் அளித்தீர்

Rakalam Bethlehem – ராக்காலம் பெத்லேம்

Rakalam Bethlehem
1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்

2. அவர்கள் அச்சங் கொள்ளவும்
விண் தூதன் திகில் ஏன்
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்

3. தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்

4. இதுங்கள் அடையாளமாம்
முன்னணை மீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்

5. என்றுரைத்தான் அக்ஷணமே
விண்ணோரம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்

6. மா உன்னதத்தில் ஆண்டவா
நீர் மேன்மை அடைவீர்
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்

Bethlehem Oororam – பெத்லகேம் ஊரோரம்

Bethlehem Oororam
1. பெத்லகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி
கர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி

2. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து
சீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்
பாலனான இயேசு நமின் சொத்து

3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்
புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம்
தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம்

4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோ
ஈனக் கோலமிது விந்தையல்லோ

5. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி

6. ஆட்டிடையர் அஞ்சுகின்றார் அவர் மகிமை கண்டு
அட்டியின்றி காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு

7. இந்திரியுடு கண்டரசர் மூவர் நடந்தாரே
சந்திரத் தூபப் போளம் வைத்துச் சுதனைப் பணிந்தாரே
விந்தையது பார்க்கலாம் வா நேரே

1. Bethalakem Oororam Sathirathai Naadi
Karthan Yesu Paalanuku Thuthiyangal Paadi
Bathiyudan Ithinam Vaa Odi.. Odi..

2. Kaalam Niraiverina Poothiyaathiriyin Vithu
Seela Kanni Karpavathil Aaviyaal Upuvithu
Baalanaana Yesu Namin Sothu

3. Ellaiyillaa Njaanaparan – Vella
Malaiyoram Pullannaiyilae
Piranthaar Illamengum Eeram -Thollai
Mikum Avviruttu Naeram… Naeram…

4. Vaan Puvi Vaal Raajanuku – Maattakanthaan
Veedoo Vaanavarku Vaaytha Methai
Vaadina Pul Pootoo – Aana Palang
Kanthai Enna Paatoo… Paatoo…

5. Antharathil Paadukindaar
Thoothar Senai Kooti – Manthai Aayar
Odukindar Paadalkaeta Thedi
Indiravil Enna Intha Modi… Modi…

6. Aattitaiyar Anjukiraar Avar
Magimai Kandu -Andiyindri
Gaapiriyael Sonna Sethi Kondu
Naattamudan Iratchakarai Kandu… Kandu…

Kaarirul Velayil – காரிருள் வேளையில் கடுங்குளிர்

Kaarirul Velayil
காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்த மன்னவனே உம்
மாதயவே தயவு

1. விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமல் மானிடனானது
மாதயவே தயவு – காரிருள்

2. விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மானுடரில் பிரியம் மலர்ந்தது உந்தன்
மாதயவே தயவு – காரிருள்

3. விந்தை விதந்தனில் வந்தவனே,
வானவனே, நாங்கள்
தந்தையின் அன்பைக் கண்டதும் உந்தன்
மாதயவே தயவு – காரிருள்

Kaarirul velayil kadung kulir nearathil
Yealai koalamathaai
Paarinil vantha mannavanee um
Maathayavee thayavu

1. Vinnulakil simmaasanathil
Thootharkal paadidave
veetirukkaamal maanidanaanathu
Maathayavea thayavu – Kaarirul

2. Vinnil theavanukkee magimai
Mannil samaathaanam
Maanudaril piriyam malarnthathu unthan
Maathayavea thayavu – Kaarirul

3. Vinthai vithanthanil vanthavanee
Vaanavanee, naangkal
Thanthaiyin anpai kandathum unthan
Maathayavea thayavu – Kaarirul

Bethalayil Piranthavarai – பெத்தலையில் பிறந்தவரைப்

Bethalayil Piranthavarai
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே – இன்னும்

1. சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில்

2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில்

3. முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே – பெத்தலையில்

4. ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் – பெத்தலையில்

5. இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்தலையில்

Bethalayil Piranthavarai
Potri Thuthi Manamae – Innum

1. Saruvathayum Padaithaanda Saruva Vallavar – Ingu
Thaalmayulla Thaai Madiyil Thalai Saaykalaanaar – Bethalayil

2. Singaasanam Veetirukum Deva Mainthanaar – Ingu
Pangamutta Pasu Thotillil Paduthirukiraar- Bethalayil

3. Munbu Avar Sonnapadi Mudipatharkaaga – Ingu
Moatcham Vittu Thaalchiyulla Munnanaiyile – Bethalayil

4. Aavikalin Poattuthalaal Aananthang Kondoor – Ingu
Aakkalooda Sathathukul Aluthu Piranthaar – Bethalayil

5. Ethadaivaai Anbu Vaitha Emperumaanai – Naam
Ennamudan Poai Thuthika Yegiduvomay – Bethalayil