Anbu Kuruntha En Yesuvinal – அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே

Anbu Kuruntha En Yesuvinal

அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே ரோமர் 8:37
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
வேதனை துன்பம் இன்னல் இடர்கள் ரோமர் 8:36
எதுவும் பிரிக்க முடியாது
கிறிஸ்துவின் அன்பிலிருந்து

  1. எனது சார்பில் கர்த்தர் இருக்க ரோமர் 8:31
    எனக்கு எதிராய் யார் இருப்பார்?
    மகனையே தந்தீரையா
    மற்ற அனைத்தையும் தருவீரையா! ரோமர் 8:32
  2. தெரிந்துகொண்ட உம் மகன் நான்
    குற்றம் சாட்ட யார் இயலும்? ரோமர் 8:33
    நீதிமானாய் மாற்றினீரே
    தண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே!
  3. கிறிஸ்து எனக்காய் மரித்தாரே
    எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே ரோமர் 8:34
    பரலோகத்தில் தினம் எனக்காய்
    பரிந்து பேசி ஜெபிக்கின்றார்
  4. நிகழ்வனவோ வருவனவோ
    வாழ்வோ சாவோ பிரித்திடுமோ ரோமர் 8:38
    முற்றிலும் நான் ஜெயம் பெறுவேன்
    வெற்றி மேல் வெற்றி நான் காண்பேன்
  5. கிறிஸ்துவின் சாயலாய் உருமாற
    முன்குறித்தாரே பிறக்குமுன்னே ரோமர் 8:29
    சகலமும் நன்மைக்கே
    நன்மைக்கு ஏதுவாய் நடத்திச் செல்வார் ரோமர் 8:28

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *