Deva Devane Yesu Rajane

தேவ தேவனே இயேசு ராஜனே
உம்மைக் காணும் இருதயம் மகிழும்
எனது எஜமானரே என்
மனதின் மணவாளரே

என் இதய சிங்காசனத்தினிலே
வீற்றிருக்கும் என் ராஜாவே
வானாதி வானங்கள் உமக்கிருக்க
இந்த இதயம் தான் உம் வீடானதோ
என்னில் நீர் வாழ்ந்திட
என்ன நான் செய்தேனோ

நான் உம்மை மறந்து பிரிந்திட்ட போதும்
நினைத்து நினைத்து ஏங்கினீரே
நான் உம்மை வெறுத்து ஓடின போதும்
நீர் என்னை உயிராய் நேசித்தீரே
இது தான் இயேசுவே அநாதி சிநேகமோ

நான் என்னை உயிராய் நேசிப்பதைவிட
நீர் என்னை அதிகமாய் நேசிக்கின்றீரே
பாவியில் நான் பெரும்பாவியாய் வாழ்ந்தும்
பாசமாய் உயிரையே கொடுத்தீரே
இது தான் இயேசுவே அன்பின் எல்லையோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *