Ennai Kaakum – என்னைக் காக்கும்

Ennai Kaakum
என்னைக் காக்கும் கேடகமே
தலையை நிமிரச் செய்பவரே
இன்று உமக்கு ஆராதனை
என்றும் உமக்கே ஆராதனை
1. உம்மை நோக்கி நான் கூப்பிட்டேன்
எனக்கு பதில் நீர்தந்தீரய்யா
படுத்து உறங்கி விழித்தெழுவேன்
நீரே என்னைத் தாங்குகிறீர்
ஆராதனை ஆராதனை
அப்பா அப்பா உங்களுக்குத்தான்
2. சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்கு
அஞ்சமாட்டேன் அஞ்சவே மாட்டேன்
விடுதலை தரும் தெய்வம் நீரே
வெற்றிப்பாதையில் நடத்துகிறீர்
3. பக்தியுள்ள அடியார்களை
உமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர்
வேண்டும்போது செவிசாய்க்கிறீர்
என்பதை நான் அறிந்துகொண்டேன்
4. உலகப்பொருள் தரும் மகிழ்வை விட
மேலான மகிழ்ச்சி எனக்கு தந்தீர்
நீர் ஒருவரே பாதுகாப்புடன்
சுகமாய் வாழச் செய்கின்றீர்
5. உமது அன்பில் மகிழ்ந்திருப்பேன்
உம்மோடுதான் நான் வாழ்ந்திடுவேன்
எனக்கு நன்மை செய்தபடியால்
நன்றிப் பாடல் பாடிடுவேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *