Intha Naal Varaiyil – இந்த நாள் வரையில் என்னை

Innaal Varaiyil

இந்த நாள் வரையில் என்னை நடத்தினார்
இனிமேலும் என்னை நடத்துவார்
ஒன்றுமில்லாத வேளையில் – அவர்
உதவிக்கரம் நீட்டியே உயர்த்தினாரே,
எந்தன் அன்பு இயேசுவே – இந்த

1. தனிமையில் அன்று நாள் தவிக்கையில்
தேடிவந்து அணைத்த எந்தன் தெய்வமே
துன்பம், துக்கம், துயரம் என்னை
சூழ்ந்து கொண்ட வேளையில்
துக்கமெல்லாம் மகிழ்ச்சியாக மாற்றினீர் – இந்த

2. என்னை விட்டு விலகி நீர் போனீரோ?
என்னை மறந்து மறைந்து நீர் போனீரோ?
என்று நான் குழம்பி,
அலைந்து துடித்த வேளையில்
உன்னைவிட்டு விலகவில்லை என்றீரே – இந்த

3. தூற்றுவோரின் நிந்தை அவமானமும்
எங்களை வாட்டின வேளையில்
இனியும் இந்த நிந்தைகள்
பூமியில் இராதபடி
முற்றிலும் நான் நீக்கிடுவேன் என்றீரே – இந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *