Kartharukkaga Porumaiyudan – கர்த்தருக்காக பொறுமையுடன்

Kartharukkaga Porumaiyudan

கர்த்தருக்காக பொறுமையுடன் நான்
காத்திருந்தேன் பல காலங்களாய்
அவர் என்னிடமாய் சாய்ந்து
கூப்பிடும் குரல் கேட்டு
விடுதலை செய்திட்டாரே பாடிடுவேன் – கர்த்தருக்காக

1. சிறியவர்களை அவர் புழுதி விட்டு எடுப்பவர்-2
எளியவர்களை அவர் குப்பைவிட்டு தூக்குபவர்
பிரபுக்களோடும் கூட அமர்ந்திடச் செய்திட்டாரே பாடிடுவேன் – கர்த்தருக்காக

2. மரணக்கட்டுகள் என்னை
சுற்றிக்கொண்ட அறுத்து என்னை (நம்மை)
விடுவித்த தேவன் அவர்
கர்த்தர் எனக்காக செய்த உபகாரங்களுக்காக
உயிருள்ள நாட்களெல்லாம் பாடிடுவேன் – கர்த்தருக்காக

3. ஆத்துமாவை மரணத்திற்கும்
கண்களை என் கண்ணீருக்கும்
கால்களை இடறலுக்கும்
தப்புவித்த தேவன் அவர்
அவருக்கே செய்த எந்தன்
பொருத்தனைகளை எல்லாம்
நிறைவேற்றி சாட்சி சொல்வேன் என்றென்றுமே – கர்த்தருக்காக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *