Karthave En Belane – கர்த்தாவே என் பெலனே

Karthave En Belane
கர்த்தாவே என் பெலனே
உம்மில் அன்பு கூர்ந்திடுவேன்
துருகமும் நீர் கேடகம் நீர்
இரட்சண்யக் கொம்பும் அடைக்கலம் நீர்

1. மரணத்தின் கட்டுகள் சூழ்ந்த போதும்
துர்ச்சனப் பிரவாகம் புரண்ட போதும்
நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப
உருக்கமாய் வந்து உதவி செய்தார்

2. தயை செய்பவனுக்கு நீர் தயையுள்ளவர்
உத்தமனை நீர் உயர்த்திடுவீர்
புனிதனுக்கு நீர் புனிதரன்றோ
புதிய கிருபையின் உறைவிடமே

3. உம்மாலே ஒர் சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே மதிலைத் தாண்டுவேன்
சத்துருவை நான் தொடர்ந்திடுவேன்
சதா காலமும் ஜெயம் எடுப்பேன்

4. இரட்சண்ய கேடகம் எனக்குத் தந்தீர்
உமது கரம் என்னை உயர்த்தும்
கர்த்தரை அல்லால் தேவன் இல்லை
அவரே எந்தன் கன்மலையே

5. பெலத்தினால் என்னை இடைக்கட்டி
மான்களின் கால்களை போலாக்கி
நீதியின் சால்வையை எனக்குத் தந்து
உயர் ஸ்தலத்தில் என்னை நிறுத்துகின்றார்

2 thoughts on “Karthave En Belane – கர்த்தாவே என் பெலனே

  1. நாளை 03-01-2021 காலை குருப் 1 தேர்வில் தேர்ச்சி அடையவும் தமிழ்நாடு அரசு வேலை கிடைக்கவும் ெஜெபிக்குமாறு அன்போடு கேட்டுக் ெகொள்கிறேன்
    என் ெபெயர் M Shanmathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *