Oadivaaroyo Nanbaa – ஓடி வாராயோ நண்பா உன்

Oadivaaroyo Nanbaa
ஓடி வாராயோ நண்பா உன்
நேசர் அழைக்கிறார் இன்றே
இன்றே திரும்புவாய் கண்டு

1. ஆழ்ந்த கடலில் அமிழும் போது
அணைத்துக் காப்பதும் அவர் கரம் – அன்பின்
குரலின் பெயரை அழைத்தே
தாவி அணைப்பதும் அவர் கரம் – ஓடி

2. கள்ளமற்ற அன்பை வார்த்தே
காத்துக் கொள்வதும் அவர் கரம்
ஒன்றுமில்லா தூசி நம்மை
உயர்த்துவதும் அவர் கரம் – ஓடி

3. சீறும் புயலின் தீமை நின்றே
மறைத்து காப்பதும் அவர் கரம்
பாதை மாறிய கால்களுக்கு தீபம்
காட்டும் அவர் கரம் – ஓடி

4. உற்ற உறவும் கைவிட்டாலும்
உரிமை கொள்ளும் அவர் கரம்
உண்மை அறிவும் சிறந்த ஞானமும்
ஏந்தி தருவதும் அவர் கரம் – ஓடி

5. மாமுடி மன்னர் வருகைக்காக
காத்திருக்கும் தாசர்கள்
அன்பின் பிணைப்பில் ஆறுதல் பெற்றே
அழைத்துக் காப்பதும் அவர் கரம் – ஓடி

6. எங்கு பார்த்தாலும் காயம் காயம் தோய்ந்த
ஒளியின் கரங்கள் காணுதே
வந்து பலத்த மார்பில்
சாய்ந்து கொள்ள மாட்டாயோ – ஓடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *