Oru Kodi Paadalgal – ஒரு கோடிப்பாடல்கள்

Oru Kodi Paadalgal
ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் – அதைப்
பாமாலையாக நான் சூடுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் – உந்தன்
புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்

1. இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே – அங்கு
விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே (2)
அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் – வந்து
கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் (2) – ஆதியும்…

ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை இயேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை இயேசுவே

2. மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் – அதில்
மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய் (2)
என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே – அதில்
எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *