Porutkal Melae Kannu – பொருட்கள் மேல கண்ணு

Porutkal Melae Kannu
பொருட்கள் மேல கண்ணு போச்சுனா
போச்சய்யா உன் அபிஷேகம்
ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னான
அப்போதான் உன் அபிஷேகம்

காத்துக் கொள் காத்துக் கொள்
பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை
காத்துக்கொள்

1. பெருமை என்ற வலையில் விழாதே
அது வறுமையைக் கொண்டு வந்திடும்
பணத்திலே மயங்கி விடாதே –உன்னைப்
பாதாளம் கொண்டு போய்விடும்
2. அழிந்து போகும் உலகப்பொருட்களால்
நண்பர்களை சம்பாதித்துக் கொள்
நீ மரித்தால் நித்திய வீட்டில் (உன்னை)
நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள்
3. அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால்
அபிஷேகத்தைக் காத்துக் கொள்ளலாம்
அழைத்தவர் உண்மையுள்ளவர்
அநுதினமும் நடத்திச் செல்வாரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *