Unnatharai Unmaiyai Nesikiren – உன்னதரை உன்னதரை

Unnatharai Unmaiyai Nesikiren
உன்னதரை உன்னதரை
உண்மையாய் உண்மையாய்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
உள்ளத்திலே என் உள்ளத்திலே

1. என் வாழ்க்கையை மலர் போல
மாற்றினவரும் அவரே
நான் பூத்துக் குலுங்கிட
செய்பவரும் அவரே

பாடுவேன் நான் பாடுவேன்
பரம தேவனை உயர்த்திடுவேன்

2. நான் நம்பினதெல்லாமே
வீண் போக விடவில்லையே
நான் நம்பின ஒவ்வொன்றையும்
என் கர்த்தரே தந்தாரே

பாடுவேன் நான் பாடுவேன்
பரம தேவனை உயர்த்திடுவேன்

3. நான் கூனி குறுகாமல்
நான் குறைந்தும் போகாமல்
என் நடைகள் ஒவ்வொன்றையும்
ராஜ நடை போல் மாற்றினிரே

பாடுவேன் நான் பாடுவேன்
பரம தேவனை உயர்த்திடுவேன்

4. இனி யார் தான் எனக்கு உண்டு
என்று கேள்விகள் எழும்பினது
இனி நான் தான் உனக்கு உண்டு
என்று கர்த்தர் தேற்றினார்

பாடுவேன் நான் பாடுவேன்
பரம தேவனை உயர்த்திடுவேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *