Vanam Pollinthathu – வானம் பொழிந்தது மதகுகள்

Vanam Pollinthathu
வானம் பொழிந்தது மதகுகள் திறந்தன
கனவும் கலைந்தது மடமையும் ஓய்ந்ததே
பணமும் பதவியும் செல்லா காசானதே -2
மனதில் கொண்டோமா? வாழ்வின் நோக்கமதை-2
வாழ்வின் நோக்கமதை -2

1. வங்கி பணமும் வரவில்லை உதவிட
பங்கு விலையும் உதவலை பிரட் வாங்கிட
பவனி வந்த சொகுசு கார்களும-2
அவரே அன்றி அனைத்தும் வீண் என்றனொ -2

2. குடும்ப உறவும் குலைந்து போனதே
குலம் மறந்தோம் கொள்கையும் பறந்ததே
சொல்ல முடியா துக்கமும் துயரமும்.-2
சொல்ல ஒரை ஒரு இடம் கல்வாரியே -2

3. அதிகாரியும் அரசும் முழித்து நின்றனர்
அறியனையை தக்கவே போட்டியும் போட்டனர்
அறியா மாந்தரின் அலறல் நம்மையும் -2
அமர்ந்திரு பாதம் என்றது என் மனம் -2

4. பூமியும் பூதலழும் நடுங்குமே அந்நாள்
பூமகன் இயோசுவின் வருகையின் நாள்
புறப்படு வேகம் (வேதம்) அறிவிக்க
பரலோக குரல் கேட்குதே காலம் இதுவே -2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *