Yesu Ennodu Irupathal – இயேசு என்னோடு இருப்பதால்

Yesu Ennodu Irupathal
இயேசு என்னோடு இருப்பதால் எனக்கு பயமில்லை
என் கர்த்தர் என்னோடு இருப்பதால் கலக்கம் எனக்கில்லை (2)

கலங்கலே நான் கலங்கலே
பயமில்லே எனக்கு பயமில்லே (2)

இயேசு என்னோடு இருப்பதால் எனக்கு பயமில்லை
என் கர்த்தர் என்னோடு இருப்பதால் கலக்கம் எனக்கில்லை (2)

1. கர்த்தரின் பாதத்தில் நித்தம் அமருவேன்
அன்பரின் மார்பினின் சாய்ந்து மகிழுவேன் (2)
துதிப்பேன் நான் துதிப்பேன்
மகிழுவேன் துதித்து மகிழுவேன் (2) – இயேசு என்னோடு

2. இளமையிலே நான் இயேசுவைத் தேடுவேன்
உலக ஆசையை உதறித் தள்ளுவேன் (2)
தள்ளுவேன் உதறித் தள்ளுவேன்
வாழுவேன் உமக்காய் வாழுவேன் (2) – இயேசு என்னோடு

3. பரிசுத்த வாழ்க்கையை நாடி ஓடுவேன்
பிறருக்கு சாட்சியாய் வாழ்ந்து காட்டுவேன் (2)
காட்டுவேன் வாழ்ந்து காட்டுவேன்
ஜீவிப்பேன் சாட்சியாய் ஜீவிப்பேன் (2) – இயேசு என்னோடு

கலங்கலே நான் கலங்கலே
பயமில்லே எனக்கு பயமில்லே (2)

இயேசு என்னோடு இருப்பதால் எனக்கு பயமில்லை
என் கர்த்தர் என்னோடு இருப்பதால் கலக்கம் எனக்கில்லை (2)

அலேலூயா அலேலூயா
அலேலூயா அலேலூயா
அலேலூயா ஆமேன் அலேலூயா
அலேலூயா ஆமேன் அலேலூயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *