Anandamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரை

Anandamaga Anbarai Paduven
1.ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
ஆசையவரென்னாத்துமாவிற்கே
ஆசீகளருளும் ஆனந்தனந்தமாய்
ஆண்டவர் இயேசுபோல் ஆருமில்லையே

இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறெங்குமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் வேறெங்குமில்லையே

2.தந்தை தாயும் உன்சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாங்கிடுவேன் என் நீதியின் கரத்தால்
தாபரமும் நல்ல நாதனுமென்றார்

3.கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தார்
ஜீவன் அழியாமை வெளியாக்கினால்

4.ஒப்பில்லாத மகிமை நம்பிக்கை சந்தோஷமும்
தப்பறு தேசின் கிரீடமாகவே
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
ஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம்

5.அழுகையின் தாழ்வில் நடப்பவரே
ஆழிபோல் வான்மழை நிறைக்குமே
சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
ஜெயத்தின்மேல் ஜெயமடைந்திடுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *