Karthar En Meiparai Irukindrer – கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்

Karthar En Meiparai Irukindrer
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்
நான் தாழ்ச்சியடைவதில்லை
புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
நான் வெட்கபட்டு போவதில்லை
அமர்ந்த தண்ணீர் அண்டை சேர்க்கின்றீர்
நான் தாகமடைவதில்லை

எந்தன் ஆத்துமாவை உந்தன் நாமம் நிமித்தம்
நீதியின் பாதைகளில் நடத்துகின்றீர்

மரண இருளின் பள்ளத்தாக்கிலே
நடந்தாலும் பயந்திடமாட்டேன்
எந்தன் தேவன் என்னோடு உண்டு
உம் கோலும் உம் தடியும் தேற்றிடுமே

பகைஞறுக்கு முன்பாக நீர் எனக்கு
பந்தியை ஆயத்தம் செய்தீர்
எந்தன் தலையை அபிஷேகம் செய்தீர்
என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது

ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மை கிருபையும்
என்னையே பின்தொடரும்
கர்த்தருடைய வீட்டினிலே
நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *