Thuthigal Mathiyil Vaasam – துதிகள் மத்தியில் வாசம்

Thuthigal Mathiyil Vaasam
துதிகள் மத்தியில் வாசம் செய்கிறீர் ஸ்தோத்திரம்
தூயாதி தூயவரே ஸ்தோத்திரம்

1. எனக்குள்ளே இருப்பவரே ஸ்தோத்திரம்
என்னோடு வருபவரே ஸ்தோத்திரம்
காயப்படுத்தும் கள்வர் நடுவில்
காயங்கட்டும் கர்த்தர் உண்டு
கலங்காதே என்றவரே ஸ்தோத்திரம்
(துதிகள் மத்தியில்…….)

2. பயப்படாதே என்றவரே ஸ்தோத்திரம்
நீ திகையாதே என்றவரே ஸ்தோத்திரம்
அக்கினி நடுவே நடந்தாலும்
சிங்கக்கெபியில் விழுந்தாலும்
நான் உன்னோடு என்றவரே ஸ்தோத்திரம்
(துதிகள் மத்தியில்…….)

3. வாக்குத்தத்தம் தந்தவரே ஸ்தோத்திரம்
வார்த்தையாலே நடத்துகிறீர் ஸ்தோத்திரம்
வாதை நோயும் வந்தாலும்
Lock down ஆகி நின்றாலும்
வழி நடத்திய தேவனே ஸ்தோத்திரம்
(துதிகள் மத்தியில்…….)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *