Udainthu Poona Paathiram Naan – உடைந்து போன பாத்திரம் நான்

Udainthu Poona Paathiram Naan
உடைந்து போன பாத்திரம் நான்
காயங்களோடு நிட்கின்றேனே
நீரில்லா உலகில் யாருண்டு ?
என்னை ஆற்றிட தேற்றிட யாருண்டு ?

மாமிச எண்ணங்கள் ஈரத்ததால்
உம் கிருபை அன்பை இழந்தேனே
இன்று என் குறைகளை உணர்ந்துள்ளேன்
தயவாய் என்னை ஏற்றுக்கொள்ளும்
இரவு முழுதும் அழுகின்றேன்
செய்த தவறை உணர்ந்துள்ளேன்
உன் பெலத்தால் என்னை இடைக்கட்டும் பாதை நடக்க தயை செய்யும் .

வியாதியின் பயங்கள் மேற்கொள்ளுதே
மரண இருளோ ஆட்கொள்ளுதே
வேதத்தில் காணும் அற்புதங்கள்
என் ஜெபம் மூலமும் நடக்குமோ?
என் ஜீவன் உள்ள நாட்களெல்லாம்
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் என்பேன்
நிச்சயம் சாட்சியாய் வாழுவேன்
உம் , அன்பின் சின்னமாய் மாறுவேன்

முயற்சி தோல்வியில் முடிந்தாத்தால்
கணுவுகள் எல்லாம் கலைந்ததால்
உறவுகள் என்னை வெறுத்ததே
தனிமையில் நான் நிட்கின்றேனே
சோர்ந்து போய் நான் அழுகின்றேன்
பெலன் இல்லாமல் தவிக்கின்றேன்
நான் எதிர்பார்க்கும் முடிவை நீர்
என்னக்காய் துவங்கி வைப்பீரே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *