Ummai Pirinthu – உம்மைப் பிரிந்து

Ummai Pirinthu
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா (2)

1. திராட்சை செடியின் கொடியாக
உம்மில் நிலைத்திருப்பேன்
மிகுந்த கனி கொடுப்பேன்
உம் சீடானாயிருப்பேன் – நான்
2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி
உம் கரம் வைக்கின்றீர்
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான்
3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
பயந்து போக மாட்டேன்
துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போகமாட்டேன் – நான்
4. நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னை சூழ்ந்து உள்ளீர்
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
எல்லாம் உம் கிருபை – ஐயா

One thought on “Ummai Pirinthu – உம்மைப் பிரிந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *