All Songs by Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்

Yesu Pothume – இயேசு போதுமே

Yesu Pothume
இயேசு போதுமே
எனக்கு போதுமே – 2

1. இயேசு கைவிடார் உன்னை கைவிடார்
இன்றும் கைவிடார் அவர் என்றும் கைவிடார்

2. இயேசு வல்லவர் எனக்கு வல்லவர்
இன்றும் வல்லவர் அவர் என்றும் வல்லவர்

3. இயேசு நல்லவர் எனக்கு நல்லவர்
இன்றும் நல்லவர் அவர் என்றும் நல்லவர்

4. இயேசு வாழ்கின்றார் என்னில் வாழ்கின்றார்
இன்றும் வாழ்கின்றார் அவர் என்றும் வாழ்கின்றார்

Devane En Deva – தேவனே என் தேவா

Devane En Deva
தேவனே என் தேவா
உம்மை நோக்கினேன்
தண்ணீரில்லா நிலம்போல
தாகமாய் (உமக்காய்) ஏங்கினேன்
1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்
ஓடி வருகிறேன்
உம் வல்லமை மகிமை கண்டு
உலகை மறக்கின்றேன்
2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை
எனக்குப் போதுமே
உதடுகளாலே துதிக்கின்றேன்
உலகை மறக்கின்றேன்
3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தியானிக்கிறேன்
உம் சிறகுகளின் நிழல்தனிலே
உலகை மறக்கின்றேன்
4. எனது ஆன்மா தொடர்ந்து உம்மை
பற்றி கொண்டது
உம் வலக்கரமோ என்னை நாளும்
தாங்கிக் கொண்டது
5. வாழ்நாளெல்லாம் உம் நாமம்
வாழ்த்திப் பாடுவேன்
சுவையான உணவை உண்பதுபோல்
திருப்தி அடைகின்றேன்

Saronin Raja – சாரோனின் ராஜா

Saronin Raja
சாரோனின் ராஜா இவர்
பரிபூரண அழகுள்ளவர்
அன்புத் தோழனென்பேன் – ஆற்றும்
துணைவன் என்பேன்
இன்ப நேசரை நான் கண்டேன்
காடானாலும் மேடானாலும்
கர்த்தரின் பின்னே போகத்துணிந்தேன
1. சீயோன் வாசியே தளராதே
அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்
அன்பின் தேவன் மறக்கமாட்டார்
ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார்
2. மலைகள் பெயர்ந்து போகலாம்
குன்றுகள் அசைந்து போகலாம்
மாறா தேவனின் புதுகிருபை
காலை தோறும் நமக்கு உண்டு
3. நேசரை அறியா தேசமுண்டு
பாசமாய் செல்ல யார்தானுண்டு
தாகமாய் வாடிடும் கர்த்தருக்காய்
சிலுவை சுமந்து பின்செல்வோர் யார்

Engal Devan Vallavare – எங்கள் தேவன்

Engal Devan Vallavare
எங்கள் தேவன் வல்லவரே
இன்றும் என்றும் காப்பவரே
வல்லவர் சர்வ வல்லவர்
நல்லவர் என்றும் நல்லவர் – அல்லேலூயா
1. தீயின் நடுவே நடந்தாலும்
எரிந்து போகமாட்டோம்
கடலின் நடுவே நடந்தாலும்
மூழ்கிப் போகமாட்டோம்

2. சோதனை துன்பம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போவதில்லை
வேதனை வியாதி நெருக்கினாலும்
வெற்றி சிலுவையுண்டு

3. அலகை அனுதினம் தாக்கினாலும்
ஆண்டவர் வார்த்தையுண்டு
உலகம் நம்மை வெறுத்தாலும்
உன்னதர் கரங்களுண்டு

Anbin Devan Yesu – அன்பின் தெய்வம்

Anbin Devan Yesu
அன்பின் தெய்வம் இயேசு
ஆறுதல் தருபவர்
மார்பில் சாய்கின்றேன்
மகிழ்ந்து பாடுவேன் – 2
1. பாதை இழந்த ஆடாய் பாரினில் ஓடினேன்
சிலுவை அன்பினாலே திசையும் புரிந்தது
வாழ்வது நானல்ல என்னில்
இயேசு வாழ்கின்றார்
2. இயேசு பேசும்போது – என்
உள்ளம் உருகுதே அவர்
வார்த்தை படிக்கும் போது என்
வாழ்வு மாறுதே
வேதம் ஏந்துவேன் வெல்வேன்
அலகையை – தினம்
3. கண்ணீர் சிந்தும்போது – மனக்
கண்ணில் தெரிகின்றார்
கவலை நெருங்கும்போது – அவர்
கரத்தால் அணைக்கின்றார்
ஆவி பொழிகின்றார்
ஆற்றல் தருகின்றார் – எனக்கு

Immattum Kaivida Devan – இம்மட்டும் கைவிடா தேவன்

Immattum Kaivida Devan
இம்மட்டும் கைவிடா தேவன்
இணியும் கைவிடமாட்டார்
தாயின் வயிற்றில் தாங்கினார்
ஆயுள் முழுதும் தாங்குவார்
தாங்குவார் தப்புவிப்பார்
ஏந்துவார் என் தெய்வம்

1. ஆயன் இயேசு ஆடு நான்
ஆதலால் பயமில்லை
சாத்தான் பறிக்க முடியாது
சபிக்கின்றேன் இயேசு நாமத்தில்

2. இயேசு கிறிஸ்து வசனத்தால்
எல்லா நாளும் சந்தோஷம்
வியாதி வறுமை வேதனை
எது தான் பிரிக்க முடியுமோ

3. கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
கலக்கம் எனக்கு இனியில்லை
துதித்து துதித்து நாளெல்லாம்
துரத்திடுவேன் சத்துருவை

Yaar Vendum Natha – யார் வேண்டும் நாதா

Yaar Vendum Natha
யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
பாழாகும் லோகம் வேண்டாமையா
வீணான வாழ்க்கை வெறுத்தேனையா

1. உலகத்தின் செல்வம்நிலையாகுமோ
பேர் புகழ் கல்வி அழியாததோ
பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
பதில் என்ன சொல்வேன் நீரே போதும்

2. சிற்றின்ப மோகம் சீக்கிரம் போகும்
பேரின்ப நாதா நீர் போதாதா
யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
எங்கே நான் போவேன் உம்மையல்லால்

3. என்னைத் தள்ளினால் நான் எங்கே போவேன்
அடைக்கலம் ஏது உம்மையல்லால்
கல்வாரி இன்றி கதியில்லையே
கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்

Yaar vendum naadha neeralavo
Edhuvendum naadha anbalavo
Paazhagum logam vendaamayya
Veenaana vaazhkai veruthenayya

1.Ulagathin selvam nilayaagumo
Paer pugazh kalvi ayizhyaadhadho
Pin aen neer keteer ikkaelviyai
Padhil enna solven neerae podhum

2.Sitrinnba mogam seekiram pogum
Paerinba naadha neer pothaadha
Yaar vendum endru aen kaeteero
Engae naan poven ummaiyallal

3.Ennai thallinaal naan engae poven
Adaikalam aedhu ummaiyallal
Kalvari indri gadhi illaiye
Karthar ninpadham saranadaindhen

Andavar Enakai – ஆண்டவர் எனக்காய்

Andavar Enakai
ஆண்டவர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார் அச்சமே எனக்கில்லை
அல்லேலூயா

1. என்னை நடத்தும் இயேசுவினாலே
எதையும் செய்திடுவேன்
அவரது கிருபைக்கு காத்திருந்து
ஆவியில் பெலனடைவேன்

2. வறுமையோ வருத்தமோ வாட்டிடும்
துன்பமோ
அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து
ஆண்டவர் பின் செல்வேன்

En Deivam Yesu – என் தெய்வம் இயேசு

En Deivam Yesu
என் தெய்வம் இயேசு
என்னோடு பேசுவார்
எனக்கு சந்தோஷமே
அல்லேலூயா – 4

1. கனவின் வழியாய் பேசுவார்
கலக்கம் நீங்கப் பேசுவார்
காட்சி தந்து பேசுவார்
சாட்சியாக நிறுத்துவார்

2. வேதம் வழியாய் பேசுவார்
விளக்கம் அனைத்தும் போதிப்பார்
பாதம் அமர்ந்து தியானிப்பேன்
பரலோகத்தை தரிசிப்பேன்

Parisuthamae Paran – பரிசுத்தமே பரன்

Parisuthamae Paran
பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம்
பக்தர்கள் தேடும் தேவாலயம்

1. கர்த்தர் மலைமேல் ஏறிக்சென்று
நிற்கக் கூடியவன் யார் ?
மாசற்ற செயல் தூய உள்ளம்
உடைய மனிதனே

2. நாமெல்லாம பரிசுத்தராவதே
தெய்வத்தின் திருச்சித்தம்
பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும்
தரிசிக்க முடியாது

3. பரிசுத்தரென்றே ஓய்வின்றிப் பாடும்
பரலோக கூட்டத்தோடு
வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி
எந்நாளும் பாடுவேன் – 2