Naan Ummai Nooki Kangalai
(நான் உம்மை நோக்கி
கண்களை ஏறெடுக்கின்றேன்
உம் திவ்ய நாமம்
சர்வ வல்லமை கொண்டதால்) x 2
வழியில் விழவே அனுமதிக்க மாட்டீர்
பொல்லாங்கு ஒன்றும் என்னை தொடுவதில்லை
சேனைப்போல் அரணாய் வந்து நிற்கும்
ஒரு தூதர் கூட்டம் என்னோடு உள்ளதால்
நான் உம்மை நோக்கி
கண்களை ஏறெடுக்கின்றேன்
உம் திவ்ய நாமம்
சர்வ வல்லமை கொண்டதால்.
1.(நன்மையும் கிருபையும் என் ஆயுளில்
ஆயுளும் ஆரோக்கியமும் என் தேவனால்) x 2
(உம்மில் நிலையாய் நிற்க நான் வேண்டி நின்றேன்) x 2
(தேவனே உம்மோடு சேர்ந்திருப்பேன்) x 2
நான் உம்மை நோக்கி
கண்களை ஏறெடுக்கின்றேன்
உம் திவ்ய நாமம்
சர்வ வல்லமை கொண்டதால்.
2. (தண்ணீரின் மீதே நீர் நடந்தீர்
என்னையும் நீரே வழிநடத்தும்) x 2
(உம் நிறைவில் நிற்க நான் வேண்டி நின்றேன்) x 2
(தேவனே உம்மோடு கூட வாழ்வேன்) x 2
நான் உம்மை நோக்கி
கண்களை ஏறெடுக்கின்றேன்
உம் திவ்ய நாமம்
சர்வ வல்லமை கொண்டதால்.
வழியில் விழவே அனுமதிக்க மாட்டீர்.
பொல்லாங்கு ஒன்றும் என்னை தொடுவதில்லை.
சேனைப்போல் அரணாய் வந்து நிற்கும்
ஒரு தூதர் கூட்டம் என்னோடு உள்ளதால்.
நான் உம்மை நோக்கி
கண்களை ஏறெடுக்கின்றேன்.
உம் திவ்ய நாமம்
சர்வ வல்லமை கொண்டதால்
Parisuthar Kootam Yesuvai Potri
பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி
பாடி மகிழ்ந்தாடி அங்கே கூடிட
பரமானந்த கீதமங்கெழும்ப
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
2.ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய
அண்டினோரெவரும் அவரைச் சேர
அன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
3. பேதுரு பவுலும் யோவானும் அங்கே
பின்னும் முற்பிதாக்கள் அப்போஸ்தலரும்
இரத்த சாட்சிகளும் திரளாய்க் கூட
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
4. ஜெகத்தில் சிலுவை சுமந்தோரெல்லாம்
திருமுடியணிந்திலங்கிடவும்
தேவ சேயர்களாயெல்லாரும் மாற
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
5. சோதனைகளை வென்றவர் எவரும்
துன்பம் தொல்லைகளைச் சகித்தவரும்
ஜோதி ரூபமாய் சொர்கலோகில் ஜொலிக்க
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
6. கன்னிகையைப் போல் கர்த்தர் சபையன்று
மன்னர் மணாளனேசுவை மணந்து
பின்னும் சொல்லரிதாம் நிலை ருசிக்க
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
நான் அங்கிருப்பேனே நான் அங்கிருப்பேனே
நான் அங்கிருப்பேனே என் யேசுவுடன்