All Songs by david

Deva Asirvatham Perugiduthe – தேவ ஆசீர்வதம் பெருகிடுதே

Deva Asirvatham Perugiduthe

தேவ ஆசீர்வதம் பெருகிடுதே
துதிகள் நடுவே கர்த்தர் தங்க
தூதர் சேனை தம் மகிமையோடிறங்க

எழும்பு சீயோனே ஒளி வந்ததே
எரிந்திடும் விளக்கே திருச்சபையே
காரிருளே கடந்திடுதே
கர்த்தரின் பேரோளி வீசிடுதே

நலமுடன் நம்மை இதுவரையும்
நிலைநிறுத்திடுதே அவர் கிருபை
கண்மணிபோல் கடைசிவரை
காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம்

குறித்திடும் வேளை உயர்த்திடுவார்
கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்தவரை
வாழ்வினில் துதித்திட வாய் திறப்போம்

தெரிந்தடுத்தார் தம் மகிமைக்கென்றே
பரிந்துரைத்திடுவார் பிழைத்திடுவோம்
இரட்சிப்பினால் அலங்கரித்தார்
இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம்

பொருந்தொனி கேட்க ஏறிடுவோம்
பரலோகந் திறந்தே அவர் வருவார்
உன்னதத்தில் உயிர் ஸ்தலத்தில்
என்றென்றும் அவருடன் வழ்ந்திடுவோம்

Ellavartariyum Anbinaallae Ennai Azhailaithar – எல்லையற்ற அன்பினாலே என்னை அழைத்தார்

Ellavartariyum Anbinaallae Ennai Azhailaithar
எல்லையற்ற அன்பினாலே என்னை அழைத்தார்
எண்ணிலடங்கா நன்மைகளால் என்னை நிரப்பினார்
துதிப்பேன் போற்றுவேன் பாடுவேன் கெம்பீரிப்பேன் ஆ…..அல்லேலூயா……ஆ……அல்லேலூயா

1. நீர் செய்த நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணி
நித்தமும் உம்மை நான் துதித்திடுவேன்
இதற்கீடாக நான் என்ன செய்வேன்
என் ஜீவனை பலியாக படைக்கிறேன் நான்.

2. உம் அன்பிற்கு இணையேதும் ஒன்றுமே காணேன்
உண்மையாய் உணர ஓர் இதயம் தாரும்
திறந்தருளும் என் மனக்கண்களை
இப்பூவிலே வேறொரு விருப்பமில்லை.

3. புழுதியின்றெம்மை தூக்கியே மீட்டீர்
நறுமணம் நல்கும் நல் மலராக்கினீர்
உம் கல்வாரி அன்பன்றோ மாற்றியது
என் சுயம் வெறுத்து உந்தன் சித்தம் செய்வேன்.

Kartharai Thuthiyungal Karuthai Paadungal – கர்த்தரைத் துதியுங்கள் கருத்தாய் பாடுங்கள்

Kartharai Thuthiyungal Karuthai Paadungal

கர்த்தரைத் துதியுங்கள் கருத்தாய் பாடுங்கள் அவர் நாமம் உயர்த்திடுங்கள் கர்த்தரே பெரியவர் அவரே பரிசுத்தர் அவரையே தொழுதிடுங்கள்

சகல கிருபை நிறைந்தவர் வல்லமையுள்ளவர் கைகொட்டி பாடிடுங்கள்

1. துதிகள் நடுவிலே – வாசம் செய்கின்றார் ஒருமித்து துதித்திட – அற்புதம் நிகழுமே

2. எரிகோ வீழ்ந்திடும் – எளிதாய் சுதந்தரிப்போம் ஓசன்னா முழங்குவோம் – துதி பலி செலுத்துவோம்

3. பவுலும் சீலாவும் – தேவனை துதித்தனர். கட்டுகள் கழன்றது – கதவுகள் திறந்தது

4. யோபு துதித்திட – இன்னல் அகன்றது இரட்டிப்பாய் நன்மைகள் – தேவனால் வந்தது

Mere Man Tu Sada – मेरे मन तु सदा कहता रहे – Bless The Lord Oh My Soul Hindi

Mere Man Tu Sada
मेरे मन तु सदा कहता रहे
प्रभु ही धन्य है
दिल की गहराई से आराधना
उस पवित्र की करे

1. सूरज उगता है
एक नया दिन खिलता है
समय फिर है तेरे गीत गाने का
जहाँ पर मैं रहता और जहाँ से मैं गुजरता हूँ
दिन ढलने पर गाता रहूँ तेरे गीत

2. प्रेम में धनी और धीरज से भरा
तेरा नाम है महान करुणा मिधान
सारी भलाई के लिए मैं गाता हूँ तेरे गीत
हज़ार कारण ढूंढता दिल है मेरा

3. और उस दिन में जब मैं बलहीन जाऊँ
अंत करीब हो समय आ गया
फिर भी मेरा प्राण तेरी स्तुति गायें हरदम
कई हज़ार और हज़ारों साल

Chorus
Mere Man Tu Sada Kahata Rahe
Prabhu Hee Dhany Hai
Dil Kee Gaharaee Se Aaraadhana
Us Pavitr Kee Kare

1. Sooraj Ugata Hai
Ek Naya Din Khilata Hai
Samay Phir Hai Tere Geet Gaane Ka
Jahaan Par Main Rahata Aur Jahaan Se Main Gujarata Hoon
Din Dhalane Par Gaata Rahoon Tere Geet

2. Prem Mein Dhanee Aur Dheeraj Se Bhara
Tera Naam Hai Mahaan Karuna Madhan
Saaree Bhalaee Ke Lie Main Gaata Hoon Tere Geet
Hazaar Kaaran Dhoondhata Dil Hai Mera

3. Aur Us Din Mein Jab Main Balaheen Jaoon
Ant Kareeb Ho Samay Aa Gaya
Phir Bhee Mera Praan Teree Stuti Gaayen Haradam
Kaee Hazaar Aur Hazaaron Saal

Abishekam Seithidum – அபிஷேகம் செய்திடும்

Abishekam Seithidu
அபிஷேகம் செய்திடும்
அபிஷேக தைலத்தால்
அபிஷேகம் செய்திடும்
ஆனந்த தைலத்தால்
அபிஷேகம் செய்திடும்
பரிசுத்த தைலத்தால்

வேறொரு இதயம் தாருமே எனக்கு
உமக்காய் அடையாளமாய் நிற்பேன்
தேவனின் ஆவியே தங்கிடும் எனக்குள்
உமக்காய் அனலாக செயல்படுவேன்

அபிஷேக தைலமே
என்னை நிரப்பிடுதே

பூரண ஆனந்தம் தாருமே எனக்கு
நாள்தோறும் உம்மை நான் துதித்திடுவேன்
துயரங்கள் யாவும் நீக்கிடும் எனக்குள்
நித்திய மகிழ்ச்சி தங்கிடுமே

ஆனந்த தைலமே
என்னை நிரப்பிடுதே

பரிசுத்த ஜீவியம் தாருமே எனக்கு
ஆத்துமா உமக்குள் வாழ்ந்திடுமே
ஆவியின் வரங்கள் தாருமே எனக்கு
உந்தனின் ஊழியம் செய்திடுவேன்

பரிசுத்த தைலமே
என்னை நிரப்பிடுதே

Endrendrum Vanthadaiyum Kanmalaiyum Yesuve – என்றென்றும்‌ வந்தடையும்‌ கன்மலையம்‌ இயேசுவே – Kartharin Naamame Balanamaana Thurugame – கர்த்தரின்‌ நாமமே பலமான துருகமே

Endrendrum Vanthadaiyum Kanmalaiyum Yesuve
என்றென்றும்‌ வந்தடையும்‌ கன்மலையம்‌ இயேசுவே

சரணங்கள்‌

1. என்றென்றும்‌ வந்தடையும்‌ கன்மலையம்‌ இயேசுவே
எந்தனின்‌ தாகம்‌ தீர்க்கும்‌ கன்மலையம்‌ இயேசவே
ஒளிமயமான எதிர்காலம்‌ ஒன்றை நாடியே
உலகெல்லாம்‌ அலைந்தலைந்து தேடியும்‌ நான்‌ காண்கிலேன்‌

பல்லவி
கர்த்தரின்‌ நாமமே பலமான துருகமே
நான்‌ அங்கே ஓடியே சுகமாகத்‌ தங்குவேன்‌
கர்த்தரின்‌ செட்டையின்கீழ்‌ அடைக்கலம்‌ வந்ததால்‌
நிறைவான ஆறுதல்‌ பலனும்‌ அடைவேனே

2. கர்த்தரின்‌ காருண்யம்‌ அதெத்தனை பெரியதே
கர்த்தரின்‌ செளந்தரியம்‌ அதெத்தனை பெரியதே
என்‌ கண்கள்‌ இராஜாவை மகிமையோடு காணுமே
– தூரத்தில்‌ உள்ள தேசமாம்‌ சீயோனைக்‌ காணுமே – கர்த்தரின்‌

Ennai Azhalathavare Ennai Ninaithavare – என்னை அழைத்தவரே

Ennai Azhalathavare

என்னை அழைத்தவரே…

என்னை அழைத்தவரே என்னை நினைத்தவரே என் மேல் அன்பு கூர்ந்து என்னை நடத்தினீரே நீங்க இல்லாமல் நான் வாழமுடியுமா-2 என்னை அழைத்தவரே

1. என்னை அழைத்தவர் நீர்தானய்யா என் மேல் அன்பு கூர்ந்த தெய்வம் நீர் ஐயா – 2 (நீங்க இல்லாமல்)

2. சேற்றில் விழுந்த என்னை தூக்கினீரய்யா நாற்றமெல்லாம் ரத்தத்தாலே மாற்றினீரய்யா – 2 (நீங்க இல்லாமல்)

3. உங்க கிருபை என்னை தாங்கினதய்யா உங்க சமூகம் என்னை நடத்தினதய்யா – 2 (நீங்க இல்லாமல்)

Yuddha Veeruda – యుద్ధ వీరుడా

Yuddha Veeruda
యుద్ధ వీరుడా కదులుముందుకు పాలు తేనెల నగరకు
వెట్టిచాకిరి పోయె వెనుకకు విడుదలిచ్చెగా రక్తం మనలకు
లేదు మనకిక అపజయం యేసు రక్తమె మన జయం
హల్లెలూయ ! హొసన్న ! (3) మనదే విజయం
హల్లెలూయ ! హొసన్న ! (3) మనదే విజయం

1. ఏదేమైన గాని ఎదురేమున్నా గాని ముందుకే పయనము
ఎర్రసంద్రమైన యెరికో గోడలైన మేం వెనుకడుగు వేయము
యేసుడే సత్య దైవం అంటూ సిలువను చాటుతాం
అడ్డుగా ఉన్న సాతాను కోటలన్నిటి కూల్చుతాం

2. పగలు మేఘ స్తంభం రాత్రి అగ్ని స్తంభమై ప్రభువు తోడుండగా
చింతయే లేదుఏ కొదువ లేదు నిస్సత్తువే రాదుగా
ఆకలి తీర్చి మన్నా కురియును యేసుని నీడలో
దాహము తీర్చ బండయే చీలెను కలువరి సిలువలో

3. గొర్రెపిల్ల రక్తం దివ్య వాక్యం మాకిచ్చెను బహుబలం
శక్తిచేత కాదు బలము చేత కాదు ప్రభు ఆత్మతో గెలిచెదం
యేసుని గొప్ప వాగ్ధానములే నింపెను నిబ్బరం
యేసుని యందు వశ్వాసమె మా విజయపు సూచకం

Bayame Nam Vaazhvil – பயமே நம் வாழ்வில் | Yahweh Neer Yendrum Nam – Devanயாவே நீர் என்றும் நம் தேவன்

Bayame Nam Vaazhvil

பயமே நம் வாழ்வில் ஆள்வது இல்லை
நம் காலங்கள் தேவனின் கரங்களிலே
நம்பிக்கை இல்லா நிலை மாறிடும்
புது நம்பிக்கைத்திடன் நம்மில் பெறுகிடுமே – 2

யாவே நீர் என்றும் நம் தேவன்
தலைமுறை தலைமுறையாய்
யாவே நீர் எங்கள் தஞ்சம்
தலைமுறை தலை முறையாய்
நீர் உறங்குவதில்லை
நீர் தூங்குவதில்லை
இஸ்ரவேலை காப்பவர் நீரல்லவோ – 2

1. மரண பயம் நம்மில் மாறிடுமே
சத்ருவின் பயங்கள் எல்லாம் நீங்கிடுமே -2
மரணத்தை ஜெயித்தவர்
சத்ருவை வென்றவர்
சகலத்தையும் என்றும் ஆள்பவரே -2
– யாவே நீர் என்றும்

2. தோல்விகள் எல்லாம் மாறிடுமே
உம் நாமத்தில் வியாதிகள் நீங்கிடுமே – 2
நீர் எங்கள் பரிகாரி
ஜெயமாக நடத்துவீர்
உம்மை அல்லால் வேறு நாமம் இல்லை – 2
– யாவே நீர் என்றும்

Bayame Nam Vaazhvil Aazhvadu Illai
Nam Kaalangal Devanin Karangalilae
Nambikkai Illa Nilai Maaridum
Pudhu Nambikkaithidan Nammil Perugidumae -2

Yahweh Neer Yendrum Nam Devan
Thalaimurai Thalaimuraiyaai
Yahweh Neer Yengal Thanjam
Thalaimurai Thalaimuraiyaai
Neer Uranguvadhillai Neer Thoonguvadhillai
Isravelai Kaapavar Neer Allavo -2

1. Marana Bayam Nammil Maaridumae
Sathruvin Bhayangal Yellaam Neengidumae -2
Maranathai Jeyithavar
Sathruvai Vendravar
Sagalathaiyum Yendrum Aazhbavare -2
– Yahweh Neer Yendrum

2. Tholvigal Yellaam Maaridume
Um Naamathil Vyaadhigal Neengidume
Neer Yengal Parigaari
Jeyamaaga Nadathuveer
Ummai Allaal Veru Naamam Illai -2
– Yahweh Neer Yendrum

Bhayamo Eni Ennil Sthhaanamilla | Yaahe Angennum En Daivam(Malayalam) – https://lyrics.abbayesu.com/malayalam/bhayamo-eni-ennil-sthhaanamilla/

Parisuthar Bavaniyilae – பரிசுத்தர் பவனியிலே

Parisuthar Bavaniyilae
பரிசுத்தர் பவனியிலே (2)
நாதா நான் ஒரு அங்கத்தினனாக
காண வாஞ்சிக்கிறேன்

When The Saints Go Marching By (2)
Lord I want to be among the members
When the saints go marching by