All Songs by Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்

Akkini Nerupai Irangi Varum – அக்கினி நெருப்பாய்

Akkini Nerupai Irangi Varum
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து வழிநடத்தும்
1. முட்செடி நடுவே தோன்றினீரே
மோசேயை அழைத்துப் பேசினீரே
எகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரே
எங்களை நிரப்பி பயன்படுத்தும்
2. எலியாவின் ஜெபத்திற்கு பதில்தந்தீரே
இறங்கி வந்தீர் அக்கினியாய்
இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே
எங்களின் குற்றங்களை எரித்துவிடும்
3. ஏசாயா நாவைத் தொட்டது போல
எங்களின் நாவைத் தொட்டருளும்
யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே
எங்களை அனுப்பும் தேசத்திற்கு
4. அக்கினி மயமான நாவுகளாக
அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே
அந்நிய மொழியை பேச வைத்தீரே
ஆவியின் வரங்களால் நிரப்பினீரே
5. இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய்
இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே
இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட
எங்களை நிரப்பும் ஆவியினால்

Kangallai Pathiyavaipom – கண்களை பதிய வைப்போம்

Kangallai Pathiyavaipom
கண்களை பதிய வைப்போம்
கர்த்தராம் இயேசுவின் மேல்
கடந்ததை மறந்திடுவோம்
தொடர்ந்து முன்செல்லுவோம்
1. சூழ்ந்து நிற்கும் சுமைகள்
நெருங்கி பற்றும் பாவங்கள்
உதறித் தள்ளிவிட்டு
ஓடுவோம் உறுதியுடன்
2. இழிவை எண்ணாமலே
சிலுவையை சுமந்தாரே
வல்லவர் அரியணையின்
வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்
3. தமக்கு வந்த எதிர்ப்பை
தாங்கி கொண்ட அவரை
சிந்தையில் நிறுத்திடுவோம் – மனம்
சோர்ந்து போகமாட்டோம்
4. ஓட்டத்தை தொடங்கினவர்
தொடர்ந்து நடத்திடுவார் -நம்
நிறைவு செய்திடுவார்
நிச்சயம் பரிசு உண்டு
5. மேகம் போன்ற சாட்சிகள்
நம்மை சூழ்ந்து நிற்க
நியமித்த ஓட்டத்திலே
ஓடுவோம் பொறுமையோடு

Ummil Naan Valgiren- உம்மில் நான் வாழ்கிறேன்

Ummil Naan Valgiren
உம்மில் நான் வாழ்கிறேன்
உமக்குள்ளே வளர்கிறேன்
1. ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளே
வேர் கொண்டு வளரும் மரம்தானே
படர்ந்திடுவேன் நிழல் தருவேன்
பறவைகள் தங்கும் வீடாவேன்
2. அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல்
அமைந்து உயரும் கட்டடம் நான்
பெருங்காற்று அசைப்பதில்லை
பெருமழையோ பிரிப்பதில்லை
3. இயேசுவே எனது தலையானீர்
நானோ உமது உடலானேன்
உம்நினைவு என் உணவு
உம் விருப்பம் என் ஏக்கம்
4. செடியான உம்மோடு இணைந்துவிட்டேன்
கொடியாய் படர்ந்து கனிதருவேன்
இலைகளெல்லாம் மருந்தாகும்
கனிகளெல்லாம் விருந்தாகும்
5. உமது வார்த்தைகள் எனக்குள்ளே
உந்தன் ஆவி என்னோடே
மீட்பளிக்கும் நறுமணம் நான்
கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன்

Namae Thiruchabai – நாமே திருச்சபை கிறிஸ்துவின்

Namae Thiruchabai
நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்
ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்
1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்
மற்ற அனைத்தும் துன்பப்படும்
கூடவே துன்பப்படும்
உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்
ஓர் உடலாய் செயல்படுவோம்
2. ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்
மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும்
சேர்ந்து மகிழ்ச்சியுறும்
3. இயேசுகிறிஸ்து பாடுபட்டு
பகையை ஒழித்தார்
கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார்
4. பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்
அலகைக்கு இனி இடம் வேண்டாம்
இடமே கொடுக்க வேண்டாம்

Kaakum Deivam Yesu Irukka – காக்கும் தெய்வம்

Kaakum Deivam Yesu Irukka
காக்கும் தெய்வம் இயேசு இருக்க
கலக்கம் ஏன் மனமே கண்ணீர் ஏன் மனமே

1. இதுவரை உன்னை நடத்தின தேவன்
இனியும் நடத்திச் செல்வார்
எபிநேசர் அவர் தானே – 2

2. பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்
கூட சென்றிடலாம்பாடி மகிழ்ந்திடலாம்

3. காண்கின்ற உலகம் நமது இல்லை
காணாத பரலோகம் தான்
நமது குடியிருப்பு

4. சீக்கிரம் நீங்கிடும் உலக பாடுகள்
மகிமையை கொண்டு வரும்
மறவாதே என் மனமே

5. சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்
தெரிந்து கொள்மனமே
சீடன் அவன் தானே

6. மலைகள் விலகும் குன்றுகள் அகலும்
கிருபை விலகாதென்றார் மனது
உருகும் தெய்வம்

Kaakkum dheivam yaesu irukka
Kalakkam aen manamae
Kanneer aen manamae (2)
Kanneer aen manamae

1. Idhuvarai unnai nadathina dhaevan
Iniyum nadathich selvaar
Ebinaesar avardhaanae (2)
Ebinaesar avardhaanae – Kaakkum

2. Paadugal sagithaal paramanin varugaiyil
kooda senridalaam
Paadi magizhndhidalaam (2)
Paadi magizhndhidalaam – – Kaakkum

3. Kaangindra ulagam namadhu illai
kaanaadha paraloagam dhaan
Namadhu kudiyiruppu (2)
Namadhu kudiyiruppu – Kaakkum

4. Seekkiram neengidum ulagappaadugal
Magimaiyai kondu varum
Maravaadhae en manamae (2)
Maravaadhae en manamae – Kaakkum

5. Siluvai sumantdaal subaavam maa’rum
Therindhukol manamae
Seedan avan dhaanae (2)
Seedan avan dhaanae – Kaakkum

6. Malaigal vilagum kundrukal agalum
Kirubai vilagaadhendraar
Manadhu urugum dheivam (2)
Manadhu urugum dheivam – Kaakkum

Andavarai Ekkalamum Potriduven – ஆண்டவரை எக்காலமும்

Andavarai Ekkalamum Potriduven
ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்
அவர்புகழ் எப்போதம் என் நாவில் ஒலிக்கும்
1. என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்
ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம்
நடனமாடி நன்றி சொல்வோம்…
2. ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்
எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார்
3. அவரை நோக்கிப் கார்த்ததால் பிரகாசமானேன்
எனதுமுகம் வெட்கப்பட்டு போகவயில்ல
4. ஏழைநான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே
நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே
5. கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்
அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
6. சிங்கக்குட்டிகள் உணவின்றி பட்டினி கிடக்கும்
ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை
7. கர்த்தர் கண்கள் நீதிமானை நோக்கியிருக்கும்
அவர் செவிகள் அவனுக்கு திறந்திருக்கும்
8. நீதிமான்கள் கூப்பிட்டால் கர்த்தர் கேட்கிறார்
துன்பங்கள் அனைத்தினின்றும் விடுவிக்கிறார்

Ninaivu Koorum Deivamae Nandri – நினைவு கூறும் தெய்வமே

Ninaivu Koorum Deivamae Nandri
நினைவு கூறும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி
நன்றி இயேசு ராஜா (4)
1. நோவாவை நினைவுகூர்ந்ததால்
பெருங்காற்று வீசச்செய்தீரே
தண்ணீர் வற்றியதைய்யா
விடுதலையும் வந்ததைய்யா
2. ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்
லோத்துவை காப்பாற்றினீரே
எங்களையும் நினைவு கூர்ந்து
எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா
3. அன்னாளை நினைவுகூர்ந்தால்
ஆண்குழந்தை பெற்றெடுத்தாளே
மலட்டு வாழ்க்கையெல்லாம்
மாற்றுகிறீர் நன்றி ஐயா
4. கொர்நெலியு தானதர்மங்கள் – ஒரு
தூதனைக் கொண்டு வந்தது
குடும்பத்தையும் நண்பர்களையும்
இரட்சித்து அபிஷேகித்தீரே-அவன்

Bayamilliae Bayamiilae – பயமில்லையே

Bayamilliae Bayamiilae
பயமில்லையே… பயமில்லையே
பயமே எனக்கு இல்ல – இனி

1. அநாதி தேவன் அடைக்கலமானாரே
அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே

2. இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே
எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு

3. சகாயம் செய்யும் கேடகமானாரே
வெற்றி தருகின்ற பட்டணம் ஆனாரே

4. பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்
திராட்சை ரசமும் தானியமும் உண்டு

5. எனது வானம் பனியைப் பெய்திடுமே
மழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே

6. எதிரி என்முன் கூனிக் குறுகிடுவான்
அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன்

Bayamilliae… Bayamiilae
Payamae Enakku Illa – Inni

1. Anaathi Thaevan Ataikkalamaanaarae
Avarathu Puyangal Aathaaramaayitte

2. Iratchikkapatta Baakkiyavaan Naanae
Enakku Oppaana Manithan Yaarundu

3. Saghaayam Seiyum Kaedakamaanaarae
Vetri Tharukindra Pattanam Aanaarae

4. Paathukaapudan Sukamaai Vaalnthiduvaen
Thiraatcha Rasamum Thaaniyamum Unndu

5. Enathu Vaanam Paniyai Peythidumae
Malaiyai Polinthu Thaesathai Nirappidumae

6. Ethiri Enmun Kooni Kurukiduvaan
Avan Thalai Maelae Aeri Mithithiduvaen

Namaku Oru Thagappan Undu – நமக்கொரு தகப்பன்

Namaku Oru Thagappan Undu
நமக்கொரு தகப்பன் உண்டு
அவரே நம் தெய்வம்
எல்லாமே அவரிலிருந்து வந்தன
நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம்
1. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்
தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்
உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார்
அப்பா…அப்பா…தகப்பனே
என்று கூப்பிடுவோம்
2. ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்
உருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வொருநாளும்
கேட்பதை கொடுத்திடுவார்
தட்டும்போது திறந்திடுவார்
3. இரக்கம் நிறைந்த தந்தை அவர்
ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்
கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் அவர்
தானே
4. குழந்தையாய் இருக்கும்போதே நேசித்தவர்
எகிப்திலிருந்து என்னை அழைத்துக்
கொண்டார்
கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப்
பழக்குகிறார்

Indru Mudhal Nan Unnai Aasirvadhipen – இன்று முதல் நான்

Indru Mudhal Nan Unnai Aasirvadhipen
இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன்
1. பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன்
உமது பெயரை நான் உயர்த்திடுவேன்
ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய்
2. செல்லும் இடமெல்லாம்
காவலாய் நான் இருப்பேன்
சொன்னதை செய்திடுவேன்
கைவிடமாட்டேன்
நீ வாழும் இந்த தேசம் உனக்கு தந்திடுவேன்
3. பரவி பாய்கின்ற ஆறுகள் நீதானே
நதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானே
வாசனை தருகின்ற சந்தனமும் நீதானே
4. பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால்
வானத்தின் பலகனிகள் திறந்திடுவேன்
இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன்
5. எனது சாயலாய் உருவாக்கி நடத்துகிறேன்
பலுகி பெருகிடுங்கள் பூமியெல்லாம்
நிரம்பிடுங்கள்
உயிர் வாழும் அனைத்தின் மேல்
ஆளுகை செய்திடுங்கள்