All Songs by Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்

Iratham Jeyam – இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்

Retham Jeyam
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
கல்வாரி இயேசவின் இரத்தம் ஜெயம்
காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்

1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்
எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்
அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்
அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம்

2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்
சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
சமாதானம் தந்திடும் இரத்தம் ஜெயம்

3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்
வெற்றிமேல் வெற்றிதரும் இரத்தம் ஜெயம்
பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம்

4. நமக்காய் பரிந்துபேசும் இரத்தம் ஜெயம்
நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம்
நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம்
நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம்

5. பிரிவனை நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பிளவுகள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
ஒப்புரவாக்கிடும் இரத்தம் ஜெயம்
ஒருமனமாக்கிடும் இரத்தம் ஜெயம்

6. குற்றமில்லா இயேசுவின் இரத்தம் ஜெயம்
குறைகளை போக்கிடும் இரத்தம் ஜெயம்
விலையேறப் பெற்ற இரத்தம் ஜெயம்
விண்ணகம் நடத்திடும் இரத்தம் ஜெயம்

Iratham Jeyam Iratham Jeyam
Kalvaari Yesuvin Iratham Jeyam
Kaarunya Dheavanin Iratham Jeyam

1. Yethiriyai Thuratthidum Iratham Jeyam
Yennaalum Sugam Tharum Iratham Jeyam
Adhigaaram Thandhidum Iratham Jeyam
Adhiseyam Seidhidum Iratham Jeyam

2. Paavangal Pokkidum Iratham Jeyam
Parisutthamaakkidum Iratham Jeyam
Saabangal Neekkidum Iratham Jeyam
Samaadhaanam Thandhidum Iratham Jeyam – Namakku

3. Vidudhalai Tharugindra Iratham Jeyam
Vettri Mael Vettri Tharum Iratham Jeyam
Belaveenam Neekidum Iratham Jeyam
Belavaanai Maatridum Iratham Jeyam

4. Namakkaai Parindhu Peasum Iratham Jeyam
Naaldhorum Padhukaakum Iratham Jeyam
Needhimaanaakidum Iratham Jeyam
Nitthiya Jeevan Tharum Iratham Jeyam

5. Pirivinai Neekidum Iratham Jeyam
Pilavugal Pokkidum Iratham Jeyam
Oppuravakkidum Iratham Jeyam
Oru Manamaakidum Iratham Jeyam

6. Kutramilla Yesuvin Iratham Jeyam
Kuraivugal Pokidum Iratham Jeyam
Villaiyerapetra Iratham Jeyam
Vinnagam Nadathidum Iratham Jeyam

En Yesu Unnai – என் இயேசு உன்னைத்

En Yesu Unnai
என் இயேசு உன்னைத் தேடுகிறார்
இடமுண்டோ மகனே உன் உள்ளத்தில்

1. கதறிடும் உன்னைப் பார்க்கின்றார்-உன்
கண்ணீரைத் துடைக்க வருகின்றார்
உதவிடும் கரத்தை நீட்டுகிறார்-உன்
உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார்
2. சிலுவை மரணம் உனக்காக
சிந்திய திரு இரத்தம் உனக்காக
உன் பாவம் சுமந்து தீர்த்தாரே – தன்
உயிர் தந்து உன்னை மீட்டாரே
3. மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தாள்
மரித்த லாசரை மீண்டும் கண்டாள்
கலங்கிடும் மனிதா வருவாயா – என்
கர்த்தரின் பாதம் விழுவாயா
4. சகேயு உடனே இறங்கி வந்தான்
சந்தோஷமாக வரவேற்றான்
பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்தான்
பரலோக இன்பம் பெற்றுக் கொண்டான்
5. பேதுரு படகில் இடம் கொடுத்தான்
பெரும் தோல்வி மாறி மகிழ்வடைந்தான்
அதிசய தேவனை கண்டு கொண்டான்-என்
ஆண்டவன் பின்னே நடந்து சென்றான்

Nesikkiren Ummai Thaane – நேசிக்கிறேன் உம்மைத்தானே

Nesikkiren Ummai Thaane
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
நிலையில்லாத இந்த உலகத்திலே
நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா
உம்மைத்தானே இயேசையா

1. ஒவ்வொரு நாளும் எனது கண்முன்
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால் – என்
அசைக்கப்படுவதில்லை – நான்
2. உம்மை அல்லாமல் வேறே விருப்பம்
உள்ளத்தில் இல்லையே
நிம்மதியே நிரந்தரமே – என்
நினைவெல்லாம் ஆள்பவரே
3. ஐயா உம் தாகம் எனது ஏக்கம்
அடிமை நான் கதறுகிறேன்
என் ஜனங்கள் அறியணுமே
இரட்சகர் உம்மை தேடணுமே
4. உமது வேதம் எனது மகிழ்ச்சி
ஓய்வின்றி தியானிக்கின்றேன்
ஆற்றங்கரை மரமாக
அயராமல் கனி கொடுப்பேன்

Devathi Devan Rajathi -தேவாதி தேவன் இராஜாதி

Devathi Devan Rajathi
தேவாதி தேவன் இராஜாதி ராஜன்
வாழ்க வாழ்கவே
கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன்
வாழ்க வாழ்கவே

மகிமை உமக்குத்தான்
மாட்சிமை உமக்குத்தான்
மகிமை உமக்குத்தான்
மாட்சிமை அதுவும் உமக்குத்தான்

1. திசை தெரியாமல் ஓடி
அலைந்தேன் தேடி வந்தீரே
சிலுவையில் தொங்கி இரத்தம் சிந்தி
இரட்சித்து அணைத்தீரே
2. எத்தனை நன்மை எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன்
வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்து
உம் பணி செய்திடுவேன்
3. சோதனை நேரம் வேதனை வேளை
துதிக்க வைத்தீரே
எதிராய் பேசும் இதயங்களை
நேசிக்க வைத்தீரே
4. வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
அதிகமாய் செய்பவரே
மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்த
அணைத்து மகிழ்பவரே
5. உளையான சேற்றில் வாழ்ந்த
என்னை தூக்கி எடுத்தீரே
கன்மலையின் மேல்நிறுத்தி – என்னை
பாட வைத்தீரே

Appa Pithave Anbana Deva – அப்பா பிதாவே அன்பான

Appa Pithave Anbana Deva

அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே – 2

1. எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர் – 2
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறிவிட்டீர் – 2

நன்றி உமக்கு நன்றி – ஐயா (2) (… அப்பா)

2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர் – 2
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர் – 2 (… நன்றி)

3. உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்தீரே – 2
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே – 2 (… நன்றி)

4. இரவும் பகலும் ஐயா கூட இருந்து
எப்போதும் (எந்நாளும்) காப்பவரே – 2
மறவாத தெய்வம் மாறாத நேசர்
மகிமைக்குப் பாத்திரரே – 2 (… நன்றி)

5. ஒன்றை நான் கேட்டேன் அதையே நான் தேடி
ஆர்வமாய் நாடுகிறேன் – 2
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம் பணி செய்திடுவேன் – 2 (… நன்றி)

Appaa Pithaave Anbaana Devaa
Arumai Ratchakare Aaviyaanavare – 2

1. Engo Naan Vaazhnthen Ariyaamal Alainthen
En Nesar Thedi Vantheer – 2
Nenjaara Anaiththu Muththangal Koduththu
Nizhalaai Maarivitteer – 2

Nandri Umakku Nandri – Aiyaa (2) (… Appaa)

2. Thaazhmaiyil Irunthen Thallaadi Nadanthen
Thayavaay Ninaivu Koorntheer – 2
Kalangaathe Endru Kanneerai Thudaiththu
Karampattri Nadaththukireer – 2 (… Nandri)

3. Ulaiyaana Settril Vaazhntha Ennai
Thookki Eduththeere – 2
Kalvaari Raththam Enakkaaka Sinthi
Kazhuvi Anaiththeere – 2 (… Nandri)

4. Iravum Pakalum Aiyaa Kooda Irunthu
Eppothum (Ennaalum) Kaappavare – 2
Maravaatha Dheyvam Maaraatha Nesar
Makimaikku Paaththirare – 2 (… Nandri)

5. Ondrai Naan Ketten Athaiye Naan Thedi
Aarvamaai Naadukiren – 2
Uyirodu Vaazhum Naatkalellaam
Um Pani Seithiduven – 2 (… Nandri)

En Janame Manam – என் ஜனமே மனந்திரும்பு

En Janame Manam
என் ஜனமே மனந்திரும்பு
இயேசுவிடம் ஓடி வா
இறுதிக்காலம் வந்தாச்சு
இன்னமும் தாமதமேன்

1. உன்னை நினைத்து சிலுவையிலே
தாகம் தாகம் என்றார்
உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க
தன்னையே பலியாக்கினார்
2. தூய இரத்தம் உனக்காக
தீய உன் வாழ்வு மாற
காயங்கள் உனக்காக
உன் நோயெல்லாம் தீர
3. உனக்காக பரலோகத்தில்
உறைவிடம் கட்டுகிறார்
உன்னைத் தேடி வருகின்றார்
இன்று நீ ஆயத்தமா – மகனே
4. உன் பாவங்கள் போக்கிடவே
சிலுவையை சுமந்தாரே
உன் சாபங்கள் நீக்கிடவே
முள்முடி தாங்கினாரே

Parisutha Aaviyae – பரிசுத்த ஆவியே பக்தர்கள்

Parisutha Aaviyae
பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே
கூட இருப்பவரே கறைகள் தீர்ப்பவரே

1. தேற்றிடும் தெய்வமே
திடம் தருபவரே
ஊற்றுத் தண்ணீரே
உள்ளத்தின் ஆறுதலே – எங்கள்
2. பயங்கள் நீக்கிவிட்டீர்
பாவங்கள் போக்கிவிட்டீர்
ஜெயமே உம் வரவால்
ஜெபமே உம் தயவால் – தினம்
3. அபிஷேக நாதரே
அச்சாரமானவரே
மீட்பின் நாளுக்கென்று
முத்திரையானவரே – எங்கள்
4. விடுதலை தருபவரே
விண்ணப்பம் செய்பவரே
சாட்சியாய் நிறுத்துகிறீர்
சத்தியம் போதிக்கிறீர் – தினம்
5. அயல் மொழி பேசுகிறோம்
அதிசயம் காண்கிறோம்
வரங்கள் பெறுகிறோம்
வளமாய் வாழ்கிறோம்
6. சத்துரு வரும் போது
எதிராய் கொடி பிடிப்பீர்
எக்காளம் ஊதுகிறோம்
எதிரியை வென்று விட்டோம்

Yesuvale Pidikkappattavan – இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்

Yesuvale Pidikkappattavan
இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்
அவர் இரத்ததாலே கழுவப்பட்டவன்
எனக்கென்று எதுவுமில்லை
இப்பூமி சொந்தமில்ல

எல்லாமே இயேசு…என் இயேசு
எல்லாம் இயேசு இயேசு இயேசு

1. பரலோகம் தாய்வீடு
அதைத் தேடி நீ ஓடு
ஒருவரும் அழிந்து போகாமலே
தாயகம் வர வேண்டும் தப்பாமலே
2. அந்தகார இருளினின்று
ஆச்சரிய ஒளிக்கழைத்தார்
அழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட
அடிமையை தெரிந்தெடுத்தார் – இந்த
3. பாடுகள் அநுபவிப்பேன்
பரலோக தேவனுக்காய்
கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில்
களிர்கூர்;ந்து மகிழ்ந்திருப்பேன் – நான்
4. இலாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகின்றேன்
இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
எல்லாமே இழந்து விட்டேன் நான்
5. பின்னானவை மறந்தேன்
முன்னானவை நாடினேன்
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கித் தொடருகின்றேன்
6. நீதியை விரும்புகிறேன்
அக்கிரமம் வெறுக்கிறேன்
ஆனந்த தைல அபிஷேகத்தால்
அனுதினம் நிரம்புகிறேன்

Anbe Kalvari Anbe – அன்பே கல்வாரி அன்பே

Anbe Kalvari Anbe
அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதய்யா

1. தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் – எங்கள்
பரிகார பலியானீர்

2. காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே

3. அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா இயேசுவே(சுவாமி)
நினைத்து பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதையா

4. நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதையா
மனிதர்கள் மூழ்கணுமே
மறுரூபம் ஆகணுமே

Anbae Kalvaari Anbae
Anbae Kalvaari Anbae
Ummai Paarkaiyilae
En Ullam Udaiyuthaiyaa

1. Thaagam Thaagam Endrer
Enakkaai Aengi Nindeer
Paavangal Sumantheer – Engal
Parikaara Baliyaaneer

2. Kaayangal Paarkinten
Kanneer Vadikkinten
Thooya Thiru Irathamae
Thudikum Thaayullamae

3. Annaikum Karangalilae
Aannigalaa Yesuvae(Suvaami)
Ninaithu Paarkaiyilae
Nenjam Urukuthaiyaa

4. Nenjilae Or Ootru
Nathiyaai Paayuthaiyaa
Manithargal Moolkanumae
Maruroobam Aakanumae

Karthar Mel Barathai – கர்த்தர் மேல் பாரத்தை

Karthar Mel Barathai
கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு
கலங்கித் தவிக்காதே
அவரே உன்னை ஆதரிப்பார்
அதிசயம் செய்வார்
1. நீதிமான் தள்ளாட விடமாட்டார்
நித்தமும் காத்து நடத்திடுவார்
2. நம்மைக் காக்கும் தேவனவர்
நமது நிழலாய் இருக்கின்றவர்
3. தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
அவரே நம்மை அணைத்துக் கொள்வார்
4. கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது
நமக்கு எதிராய் நிற்பவன் யார்
5. வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம்
அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார்
6. என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்
இதய விருப்பம் நிறைவேற்றுவார்