All Songs by Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்

Rajathi Raja Vai Kondaduvom – ராஜாதி ராஜாவை

Rajathi Raja Vai Kondaduvom
ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்
நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம்

1. வந்தாரே தேடி வந்தாரே
தன் ஜீவன் எனக்காய் தந்தாரே
என்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசு
என்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு

2. கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லே
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்
என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார்
நான் பசியாற உணவு ஊட்டி மகிழுவார்

3. வென்றாரே சாத்தானை வென்றாரே
வல்லமைகள் அனைத்தையும் உரிந்தாரே
அந்த சாத்தான் மேலே அதிகாரம் தந்தாரே
என் இயேசு நாமம் சொல்லச் சொல்லி முறியடிப்பேன்

4. கரங்களிலே என்னை பொறித்து உள்ளார்
கண்முன்னே தினம் என்னை நிறுத்தியுள்ளார்
ஏற்ற காலத்திலே உயர்த்துவார் – அவர்
கரங்களுக்குள் அடங்கி நான் காத்திருப்பேன்

5. முடிவில்லாத தம் மகிமையிலே
பங்கு பெற என்னை தெரிந்து கொண்டார்
என்னை சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி நடத்துவார்
பெலப்படுத்தி நிலைநிறுத்தி மகிழுவார்

Raajaadhi raajaavai kondaaduvoam
Naalthoarum thudhipaadi kondaaduvoam

1. Vandhaarae thaedi vandhaarae
Than jeevan enakkaai thandhaarae
Ennai vaazhavaikkum Dheivamthaanae Yaesu
Ennai vazhinadathum dheebamthaanae Yaesu

2. Kalakkam illae enakku kavalai illae
Karthar en maeiparaai irukkiraar
Ennai pasumpul maeichalukku nadathuvaar
Naan pasiyaara unavu ootti magizhuvaar

3. Vendraarae saathaanai vendraarae
Vallamaigal anaithaiyum urindhaarae
Andha saathaan maelae adhigaaram thandhaarae
En Yaesu naamam solli solli muriyadippaen

4. Karangalilae ennai porithu ullaar
Kanmunnae dhinam ennai niruthiyullaar
Aetra kaalathilae uyarthuvaar – Avar
Karangalukkul adangi naan kaathiruppaen

5. Mudivillaadha tham magimaiyilae
Pangu pera ennai therindhu kondaar
Ennai seerpaduthi sthirapaduthi nadathuvaar
Belapaduthi nilainiruthi magizhuvaar

Nallathya Naan Sollavum Seyavum – நல்லதையே நான்

Nallathya Naan Sollavum Seyavum
நல்லதையே நான் சொல்லவும் செய்யவும்
உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா
1. ஆதிமுதல் என்னைத் தெரிந்துகொண்டீர்
அப்பாவை நம்பி மீட்படைய
ஆவியினாலே தூய்மையாக்கி
அதிசயமாய் என்னை நடத்துகிறீர்
அப்பா…நன்றி…நன்றி – 2
2. பாவங்கள் செய்து மரித்துப் போயிருந்தேன்
கிறிஸ்துவோடே கூட உயிர்த்தெழ செய்தீர்
கிருபையினாலே என்னை இரட்சித்தீர்
உன்னதங்களிலே உட்காரச் செய்தீர்
3. ஆண்டவர் கிறிஸ்துவின் மகிமைடைந்திட
அழைத்தீரே நன்றி ஐயா
ஆறுதல் தந்தீர்; அன்பு கூர்ந்தீர்
பரலோகம் எதிர்நோக்கி வாழச்செய்தீர்
4. துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே
பெருமையும் புகழ்ச்சியும் உமக்குத்தானே
ஞானமும் நன்றியும் வல்லமையும்
என்றென்றும் உமக்கே உரித்தாகட்டும்
5. ஆவியினாலே பெலப்படணும்
அன்பிலே வேரூன்றி திடம் பெறணும்
அப்பாவின் அன்பின் அகலம் ஆழம்
அறியும் ஆற்றல் நான் பெறணும்
6. எப்பொழுதும் நான் மகிழ்வுடன் இருந்து
இடைவிடாமல் ஜெபம் செய்யணும்
என்ன நேர்ந்தாலும் நன்றி சொல்லி
இயேசப்பா திருச்சித்தம் நிறைவேற்றணும்

Karthar Karam En Malaga – கர்த்தர் கரம் என் மேலங்க

Karthar Karam En Malaga

கர்த்தர் கரம் என் மேலங்க
கடுகளவும் பயமில்லங்க – 2

1. ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்
இறுதிவரை என்னை நடத்திடுவார் – 2

2. ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்
எதிரி வந்தால் எத்திடுவார் – 2

3. அணைப்பாரே அரவணைப்பாரே
அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே – 2

4. இரத்தத்தாலே கழுவுகிறார்
இரட்சிப்பாலே உடுத்துகிறார் – 2

5. தாலாட்டுவார் சீராட்டுவார்
வாலாக்காமல் தலையாக்குவார் – 2

6. பறித்துக் கொள்ள முடியாதுங்க
ஒருவராலும் முடியாதுங்க – 2

Karththar Karam En Melanga
Kadukalavum Payamillanga – 2

1. Yenthiduvaar Ennaith Thaangiduvaar
Iruthivarai Ennai Nadaththiduvaar – 2

2. Ootiduvaar Thaalaatiduvaar
Ethiri Vanthaal Eththiduvaar – 2

3. Anaippaare Aravanaippaare
Alli Alli Muththam Koduppaare – 2

4. Raththaththaale Kazhuvukiraar
Ratchippaale Uduththukiraar – 2

5. Thaalaattuvaar Seeraattuvaar
Vaalaakkaamal Thalaiyaakkuvaar – 2

6. Pariththuk Kolla Mudiyaathunga
Oruvaraalum Mudiyaathunga – 2

Anaithaiyum Seithu – அனைத்தையும் செய்து

Anaithaiyum Seithu Mudikum
அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றலுல் உள்ளவரே
நீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா
1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்
எனக்கென முன்குறித்த எதையுமே
எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்
உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்
2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய்
எண்ணுவதற்கு
காலைதோறும் கண்ணோக்கி பார்க்கிறீர்
நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர்
3. என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிடுவேன்
நான் போகும் பாதைகளை அறிந்தவரே
உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக்
கொண்டேன்
4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே
காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே
அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே
5. என் மீட்பரே உயிரோடு இருப்பவரே
இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
என் கண்கள்தானே அந்நாளில் காணுமே

எப்போது வருவீரையா
என் உள்ளம் ஏங்குதையா

Kartharukkul Kathirunthu – கர்த்தருக்குள் களிகூர்ந்து

Kartharukkul Kathirunthu
கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே
அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
ஆனந்த பலி ஆனந்த பலி
(என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு-2
1. பாவ, சாபம் எல்லாமே பறந்து போச்சு
பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு-இன்று
2. பயமும், படபடப்பும் ஓஞ்சுப் போச்சு
பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு
3. நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு
பேய்களை விரட்டும் ஆற்றல் வந்தாச்சு
4. நேசக்கொடி என்மேலே பறக்குதையா..என்
நேசருக்காய் பணிசெய்ய துடிக்குதையா
5. கடன்தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து
போச்சு..என்
கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சுப்போச்சு

Pudiya Valu Tharum Punitha Aviae – புதிய வாழ்வு தரும்

Pudiya Valu Tharum Punitha Aviae
புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே
1. இருள் நிறைந்த உலகத்திலே
வெளிச்சமாய் வாருமையா
பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமையா
வரவேண்டும் வல்லவரே
வரவேண்டும் நல்லவரே
வரவேண்டும் வரவேண்டும்
2. தடைகள் நீக்கும் தயாபரரே
உடையாய் வாருமையா
ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி
உற்சாகம் தாருமையா
3. எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே
நிரம்பி வழியணுமே
மண்ணான உடலைவெறுத்து வெறுத்து என்றும்
பண்பாடி மகிழணுமே
4. உலகம் எங்கிலும் சுவைத்தரும் வெண்ணிற
உப்பாய் மாறணுமே
இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்
மரமாய் வளரணுமே
5. துரயம் நீக்கி ஆறுதல் அளிக்கும்
துயவர் வரவேணுமே
புலம்பல் மாற்றி மகிழ்ச்சியூட்டும்
புனிதரே வரவேணுமே

Thuthi Eduthal Sathan Oduvan – துதி எடுத்தால்

Thuthi Eduthal Sathan Oduvan
துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
முறுமுறுத்தால் திரும்பி வருவான்
துதித்துப் பாடி மதிலை இடிப்போம்
மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம்
1. டேவிட்ட பாடினான் சவுலுக்கு விடுதலை
கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது
2. துதிக்கும் தாவீதுக்கோ கொஞ்சமும் பயமில்லை
விசுவாச வார்த்தையால் கோலியாத்தை முறியடிப்போம்
3. ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான்
ஆராதனை வீரனுக்கு Promotion நிச்சயம்
4. மீனின் வயிற்றிலே யோனா துதித்தான்
கட்டளை பிறந்தது போனான் நினிவே
5. வாயிலே எக்காளம் கையிலே திருவசனம்
சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம்
6. கர்த்தரை நம்புவோம் அவர்நம்மை தாங்குவர்
வார்த்தையை நம்புவோம் வருமே விடுதலை
7. பெராக்காவில் கூடுவோம் நன்றி செலுத்துவோம்
கர்த்தர் நல்லவர் கிருபை உள்ளவர்

Idaivida Nandri Umakku Thane – இடைவிடா நன்றி

Idaivida Nandri Umakku Thane
இடைவிடா நன்றி உமக்குத்தான்
இணையில்லா தேவன் உமக்குத்தான்

1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா
நன்றி… நன்றி…

2. தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துகொண்டீரே நன்றி ஐயா

3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரமானீரே நன்றி ஐயா

4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா

5. நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா

6. அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா

7. நித்திய ராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா

Idaividaa nandri umakkuthaanae
Inaiyillaa dhaevan umakkuthaanae (2)

Enna nadandhaalum nandri aiyaa
Yaar kaivittaalum nandri aiyaa (2)
Nandri nandri – Idaividaa

1. Thaedi vandheerae nandri aiyaa
Therindhu kondeerae nandri aiyaa (2)
Nandri nandri – Idaividaa

2. Nimmadhi thandheerae nandri aiyaa
Nirandharam aaneerae nandri aiyaa (2)
Nandri nandri – Idaividaa

3. Ennai kandeerae nandri aiyaa
Kanneer thudaitheerae nandri aiyaa (2)
Nandri nandri – Idaividaa

4. Needhi dhaevanae nandri aiyaa
Vetri vaenthanae nandri aiyaa (2)
Nandri nandri – Idaividaa

5. Anaadhi dhaevanae nandri aiyaa
Arasaalum dheivamae nandri aiyaa (2)
Nandri nandri – Idaividaa

6. Nithiya raajaavae nandri aiyaa
Sathiya dheebamae nandri aiyaa (2)
Nandri nandri – Idaividaa

Thuthiyin Aadai Aninthu – துதியின் ஆடை அணிந்து

Thuthiyin Aadai Aninthu
துதியின் ஆடை அணிந்து துயரம் எல்லாம் மறந்து
துதித்து மகிழ்ந்திருப்போம் – நம்
தூயவரில் மகிழ்ந்திருப்போம்

1. இந்த நாள் கர்த்தர் தந்த நாள்
இதிலே களிகூறுவோம்
புலம்பல் இல்ல இனி அழுகையில்ல
இன்று புசித்து கொடுத்து கொண்டாடுவோம்
துதித்து துதித்து மகிழ்ந்திருப்போம்
துயரம் அனைத்தும் மறந்திருப்போம்

2. கர்த்தருக்குள் நாம் மகிழ்ந்திருந்தால்
அது தானனே நமது பெலன்
எத்தனையோ நன்மை செய்தவரை
இன்று ஏற்றி போற்றி புகழ்ந்திடுவோம்

3. நன்றியோடும் புகழ் பாடலோடும்
அவர் வாசலில் நுழைந்திடுவோம்
நல்லவரே கிருபையுள்ளவரே
என்று நாளெல்லாம் உயர்த்திடுவோம்

4. புலம்பலுக்கு பதில் ஆனந்தமே
இன்று ஆனந்தம் ஆனந்தமே
ஒடுங்கிப் போன ஆவி ஓடிப்போச்சு
இன்று உற்சாக ஆவி வந்தாச்சு

5. துயரத்துக்கு பதில் ஆறுதலே
இன்று ஆறுதல் ஆறுதலே
சாம்பலுக்கு பதில் சிங்காரமே
இன்று சிங்காரம் சிங்காரமே

6. கர்த்தர் தாமே நம்மை உண்டாக்கினார்
அவரின் ஜனங்கள் நாம்
அவர் தாமே நம்மை நடத்துகின்றார்
அவரின் ஆடுகள் நாம்

Thuthiyin Aadai Aninthu
Thuyaram Ellaam Maranthu
Thuthithu Magilnthiruppom – Nam
Thooyavaril Makilnthiruppom

1. Intha Naal Karthar Thantha Naal
Ithilae Kalikooruvom
Pulambal Illa Inni Alugaiyilla
Indru Pusithu Koduthu Konndaaduvom
Thuthithu Thuthithu Makilnthiruppom
Thuyaram Anaithum Maranthiruppom

2. Kartharukkul Naam Makilnthirunthaal
Athu Thaananae Namathu Belan
Ethanaiyo Nanmai Seithavarai
Indru Yetti Potti Pukalnthiduvom

3. Nandriyodum Pugal Paadalodum
Avar Vaasalil Nulainthiduvom
Nallavarae Kirubaiyullavarae
Endru Naalellaam Uyarthiduvom

4. Pulambalukku Pathil Aananthamae
Indru Aanantham Aananthamae
Odungi Pona Aavi Otippochu
Indru Ursaaga Aavi Vanthaachu

5. Thuyarathukku Pathil Aaruthalae
Indru Aaruthal Aaruthalae
Saampalukku Pathil Singaaramae
Indru Singaaram Singaaramae

6. Karthar Thaamae Nammai Undaakinaar
Avarin Janangal Naam
Avar Thaamae Nammai Nadathukindrar
Avarin Aadukal Naam

Nandri Nandri Endru – நன்றி நன்றி என்று

Nandri Nandri Endru
நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்று
நாள்முழுதும் துதிப்பேன்
நாதா உம்மைத் துதிப்பேன்
1. காலையிலும் துதிப்பேன்
மாலையிலும் துதிப்பேன்
மத்தியத்திலும் துதிப்பேன்
இரவினிலும் துதிப்பேன்
2. உண்ணும்போதும் துதிப்பேன்
உறங்கும் போதும் துதிப்பேன்
அமரும்போதும் துதிப்பேன்
நடக்கும் போதும் துதிப்பேன்
3. வாழ்த்தும் போதும் துதிப்பேன்
தாழ்த்தும்போதும் துதிப்பேன்
நெருக்கத்திலே துதிப்பேன் -பிறர்
வெறுக்கும் போதும் துதிப்பேன்
4. சகாயரே தயாபரரே
சிநேகிதரே என் சிருஷ்டிகரே
5. சத்தியமே என் நித்தியமே
என் ஜீவனே நல் ஆயனே
6. உன்னதரே உயர்ந்தவரே
என் பரிகாரியே பலியானீரே