All Songs by Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்

Ekkalam Oothiduvom – எக்காளம் ஊதிடுவோம்

Ekkalam Oothiduvom
எக்காளம் ஊதிடுவோம்
எரிக்கோவை தகர்த்திடுவோம்
கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்
கல்வாரிக் கொடி ஏற்றுவோம்

1. கிதியோன்களே புறப்படுங்கள்
எதிரிகளை துரத்திடுங்கள்
தீபங்களை ஏந்திடுங்கள்
தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள்
2. சிம்சோன்களே எழும்பிடுங்கள்
வல்லமையால் நிரம்பிடுங்கள்
சீறிவரும் சிங்கங்களை
சிறைபிடித்து கிழித்திடுங்கள்
3. தெபோராக்களே விழித்திடுங்கள்
உபவாசித்து ஜெபித்திடுங்கள்
எஸ்தர்களே கூடிடுங்கள்
இரவுகளை பகலாக்குங்கள்
4. அதிகாலையில் காத்திருப்போம்
அபிஷேகத்தால் நிரம்பிடுவோம்
கழுகுபோல பெலனடைந்து
கர்த்தருக்காய் பறந்திடுவோம்

Iyya Um Thirunamam – ஐயா உம் திருநாமம்

Iyya Um Thirunamam
ஐயா உம்திரு நாமம்
அகில மெல்லாம் பரவ வேண்டும்
ஆறுதல் உம் வசனம்
அனைவரும் கேட்க வேண்டும்

1. கலங்கிடும் மாந்தர்
கல்வாரி அன்பை
கண்டு மகிழ வேண்டும்
கழுவப்பட்டு வாழ வேண்டும்
2. இருளில் வாழும் மாந்தர்
பேரொளியைக் கண்டு
இரட்சிப்பு அடைய வேண்டும்
இயேசு என்று சொல்ல வேண்டும்
3. சாத்தானை வென்று சாபத்தினின்று
விடுதலை பெற வேண்டும்
வெற்றி பெற்று வாழ வேண்டும்
4. குருடரெல்லாம் பார்க்கணும்
முடவரெல்லாம் நடக்கணும்
செவிடரெல்லாம் கேட்கணுமே
சுவிசேஷம் சொல்லணுமே

En Devane En Yesuve – என் தேவனே என் இயேசுவே

En Devane En Yesuve
என் தேவனே என் இயேசுவே
உம்மையே நேசிக்கிறேன்

1. அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்

2. என் உள்ளமும் என் உடலும்
உமக்காகத்தான் ஏங்குதையா

3. துணையாளரே உம் சிறகின்
நிழலில் தானே களிகூருவேன்

4. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஸ்தோத்தரிப்பேன் துதிபாடுவேன்

5. உலகம் எல்லாம் மாயையையா
உம் அன்பு தான் மாறாதையா

6. படுக்கையிலும் நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தியானிக்கின்றேன்

En Devane En Yesuve
Ummaiyae Nesikiraen

1. Athikaalamae Thaedukiraen
Aarvamudan Naadukiraen

2. En Ullamum En Udalum
Umagaakathaan Yenguthaiyaa

3. Thunnaiyaalarae Um Sirakin
Nilalil Thaanae Kalikooruvaen

4. Jeevanulla Naatkalellaam
Sthotharippaen Thuthipaaduvaen

5. Ulakam Ellaam Maayaiyaiyaa
Um Anbu Thaan Maaraathaiyaa

6. Padukaiyilum Ninaikindren
Iraachamathil Thiyaanikinten

Pithavae Arathikindrom – பிதாவே ஆராதிக்கின்றோம்

Pithavae Arathikindrom
பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்

ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம் – உம்மை

1. மகனாக தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க வைத்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியர்களும் நாங்களே

2. சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே

3. ஸ்தோத்திரமும் கனமும
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும்

4. பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே

5. உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள்
உமது வழிகளெல்லாம்
சத்தியமானவைகள்

Pidhaavae Aaraadhikindroam
Yesuvae Aarparikindroam
Aaviyaanavarae Anbu Seigindroam

Aaraadhikindroam
Aarparikindroam
Anbu Seigindroam – Ummai

1. Maganaaga Therindhu Kondeer
Marubadi Pirakka Vaitheer
Raajaakalum Naangalae
Aasaariyargalum Naangalae

2. Sagalamum Padaithavarae
Sarva Vallavarae
Magimaikku Paathirarae
Mangaadha Pragaasamae

3. Sthoathiramum Ganamum
Vallamaiyum Belanum
Maatchimaiyum Thudhiyum
Epoadhum Undaagattum

4. Parisuthar Parisutharae
Paraloaga Raajaavae
Eppoadhum Iruppavarae
Inimaelum Varubavarae

5. Umadhu Seyalgalellaam
Adhisyamaanavaigal
Umadhu Vazhigallellaam
Sathiyamaanavaigal

Ratha Kottai Kulle – இரத்தக் கோட்டைக்குள்ளே

Ratha Kottai Kulle
இரத்தக்கோட்டைக்குள்ளே
நான் நுழைந்துவிட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்தத் தீங்கும் தீண்டாது

1. நேசரின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய் சிலுவையில் பலியானார்
பாவத்தை வென்று விட்டார்

2. இம்மட்டும் உதவின எபினேசரே
இனியும் காத்திடுவார்
உலகிலே இருக்கும் அவனை விட
என் தேவன் பெரியவரே

3. தேவனே ஒளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவரே என் வாழ்வின் பெலனானார்
யாருக்கு பயப்படுவேன்

4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவாத என் நேசரே
ஆயனைப் போல நடத்துகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர் – என்னை

5. மலைகள் குன்றுகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர்
அணைத்து சேர்த்துக் கொண்டீர்

Ratha Kottai Kulle
Naan Nulainthu Vittaen
Inni Ethuvum Anukaathu
Entha Theengum Theendaathu

1. Iratham En Maelae
Nerungaathu Saathaan
Paasamaai Siluvaiyil Paliyaanaar
Paavathai Vendru Vittar

2. Immattum Uthavina Ebinesare
Iniyum Kaathiduvaar
Ulakilae Irukkum Avanai Vida
En Devan Periyavarae

3. Devanae Oliyum Meetpumaanaar
Yaarukku Anjiduvaen
Avarae En Vaalvin Belanaanaar
Yaarukku Payapaduvaen

4. Thaai Than Pillaiyai Maranthaalum
Maravaatha En Nesarae
Aayanai Pola Nadathukireer
Abishaekam Seykindrer

5. Malaikal Kundrugal Vilakinaallum
Maaraathu Um Kirubai
Anaathi Sinaekathaal Iluthu Konder
Annaithu Serthu Konder

Ennai Nirappum – என்னை நிரப்பும் இயேசு

Ennai Nirappum
என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்

1. பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும்
பெலனே வாருமே
பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும்
வல்லமையே வாருமே
2. தேற்றரவாளர் பரிசுத்த ஆவி
தேற்றிட வாருமே
ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்
ஆவியே வாருமே
3. வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்
வள்ளலே வாருமே
கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்
கருணையே வாருமே
4. கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்
சாந்தமே வாருமே
பாவங்க்ள கழுவிப் பரிசுத்தமாக்கம்
பரமனே வாருமே

Umakku Magimai – உமக்கு மகிமை தருகிறோம்

Umakku Magimai
உமக்கு மகிமை தருகிறோம்
உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம் அல்லேலூயா

1. தாழ்மையில் அடிமையை
நோக்கிப் பார்த்தீரே
உயர்த்தி மகிழ்ந்தீரே
ஒரு கோடி ஸ்தோத்திரமே
2. வல்லவரே மகிமையாய்
அதிசயம் செய்தீர்
உந்தன் திருநாமம்
பரிசுத்தமானதே
3. வலியோரை அகற்றினீர்
தாழ்ந்தோரை உயர்த்தினீர்
பசித்தோரை நன்மைகளால்
திருப்தியாக்கினீர்
4. கன்மலையின் வெடிப்பில் வைத்து
கரத்தால் மூடுகிறீர்
என்ன சொல்லிப் பாடுவேன்
என் இதய வேந்தனே

Unnaiye Veruthuvittal – உன்னையே வெறுத்து

Unnaiye Veruthuvittal
உன்னையே வெறுத்துவிட்டால்
ஊழியம் செய்திடலாம்
சுயத்தை சாகடித்தால்
சுகமாய் வாழ்ந்திடலாம்

1. சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும்
நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதிவரும்
2. பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே
கிறிஸ்து வளரட்டுமே நமது மறையட்டுமே
3. நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே
இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார்
4. சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான்
கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார்
5. தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம்
இயேசுவில் இருந்த சிந்தை என்றுமே இருக்கட்டுமே

Trachai Chadiya – திராட்சை செடியே

Trachai Chadiya
திராட்சை செடியே இயேசு ராஜா
உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள்
உமக்காய் படருகின்ற கொடி நாங்கள்
திராட்சை செடியே இயேசு ராஜா

1. பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரே
பரிசுத்தமானவரே – ஐயா
உள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால்
கள்ளம் நீங்குதையா – எனக்கு
2. குயவன் கையில் உள்ள களிமண்நாங்கள்
ஏந்தி வனைந்திடுமே ஐயா
சித்தம் போல் உருவாக்கும்
சுத்தமாய் உருமாற்றம்
நித்தம் உம் கரத்தில் – நாங்கள்
3. வார்த்தையில் நிலைத்திருந்து தினமும்
கனி கொடுக்கும் சீடர்கள் நாங்கள்
வேதத்தை ஏந்துகிறோம்
வாசித்து மகிழுகின்றோம்
தியானம் செய்கின்றோம் – நாங்கள்

Eppadi Naan Paaduven – எப்படி நான் பாடுவேன்

Eppadi Naan Paaduven
எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன் -உம்மை

1. இரத்தம் சிந்தி மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே

2. அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே

3. உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன்

4. என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர்தானையா

5. வருகையில் எடுத்துக் கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர்

6. உளையான சேற்றினின்று
தூக்கி எடுத்தவரே

7. உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
உம் விருப்பம் செய்திடுவேன்

Eppadi naan paaduvaen
Enna solli naan thudhippaen -ummai

1. Rattham sindhi meettavarae
Irakkam niraindhavarae

2. Abishaegithu anaippavarae
Aarudhal naayaganae

3. Undhan paadham amarndhirundhu
Oayaamal muththam seigiraen

4. Ennai vittu edupadaadha
Nalla pangu neerthaanaiyaa

5. Varugaiyil eduthu kolveer
Koodavae vaithu kolveer

6. Ulaiyaana saetrinindru
Thookki eduthavarae

7. Undhan naamam uyarthiduvaen
Um viruppam seidhiduvaen