All Songs by Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்

Boomiyin Kudigale – பூமியின் குடிகளே

Boomiyin Kudigale
பூமியின் குடிகளே வாருங்கள்
கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்

1. மகிழ்வுடனே கர்த்தருக்கு
ஆராதனை செய்யுங்கள்
ஆனந்த சப்தத்தோடே
திருமுன் வாருங்கள் – அவர்
2. கர்த்தரே நம் தேவனென்று
என்றும் அறிந்திடுங்கள்
அவரே நம்மை உண்டாக்கினார்
அவரின் ஆடுகள் நாம்
3. துதியோடும் புகழ்ச்சியோடும்
வாசலில் நுழையுங்கள்
அவர் நாமம் துதித்திடுங்கள்
ஸ்தோத்திர பலியிடுங்கள்
4. நம் கர்த்தரோ நல்லவரே
கிருபை உள்ளவரே
அவர் வசனம் தலைமுறைக்கும்
தலைமுறைக்கும் உள்ளது

Yesuvin Karangalai – இயேசுவின் கரங்களை

Yesuvin Karangalai
இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் நான்
இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன்
எதற்கும் பயமில்லையே
இனியும் கவலை எனக்கில்லையே அல்லேலூயா (4)

1. இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன்
இனிவரும் பலன்மேல் நோக்கமானேன்
அழிந்து போகும் பாராட்டு வேண்டாமே
அரவணைக்கும் இயேசு போதும்போதுமே
2. அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்
அதிகமான கனமகிமை உண்டாக்கும்
காண்கின்ற எல்லாமே அநித்தியம்
காணாதவைகளோ நித்தியம்
3. பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்
வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன்
சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன்
தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன்
5. ஆட்கொண்ட தேவனை நம்புகிறேன்
அவருக்குள் வேர் கொண்டு வளருகிறேன்
கோடைக்காலம் வந்தாலும் அச்சமில்லையே
வறட்சிக் காலம் வந்தாலும் கவலையில்லையே
6. வேதத்தில் இன்பம் காண்கின்றேன்
விரும்பி தியானம் செய்கின்றேன்
வாய்க்காலில் நடப்பட்ட மரம் நான்
வாழ்க்கையெல்லாம் தவறாமல் கனி கொடுப்பேன்

Karthar Namam En – கர்த்தர் நாமம்

Karthar Namam En

கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன் – 2

1. யெகோவா யீரே
எல்லாமே பார்த்துக் கொள்வீர் – 2
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா (2)

2. யெகோவா நிசியே
எந்நாளும் வெற்றி தருவீர் – 2
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே (2)

3. யெகோவா ரஃப்பா
சுகம்தரும் தெய்வமே – 2
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா (2)

4. யெகோவா ரூவா
எங்கள் நல்ல மேய்ப்பரே – 2
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே (2)

5. யெகோவா ஷம்மா
கூடவே இருக்கிறீர் – 2
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா (2)

6. யெகோவா ஷாலோம்
சமாதானம் தருகின்றீர் – 2
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே (2)

Karththar Naamam En Pugalidame
Karuththodu Thuthiththiduven – 2

1. Yekovaa Yeere
Ellaame Paarthuk Kolveer – 2
Kalangalappaa Naanga Kalangalappaa (2)

2. Yekovaa Nisiye
Ennaalum Vettri Tharuveer – 2
Sthothirame Appa Sthothirame (2)

3. Yekovaa Raafhaa
Sugamtharum Theivame – 2
Kalangalappaa Naanga Kalangalappaa (2)

4. Yekovaa Roovaa
Engal Nalla Meyppare – 2
Sthothirame Appa Sthothirame (2)

5. Yekovaa Shammaah
Koodave Irukkireer – 2
Kalangalappaa Naanga Kalangalappaa (2)

6. Yekovaa Shaalom
Samaathaanam Tharukintreer – 2
Sthothirame Appa Sthothirame (2)

 

Natha Um Thirukarathil – நாதா உம் திருக்கரத்தில்

Natha Um Thirukarathil
நாதா உம்திருக் கரத்தில் இசைக்கருவி நான்
நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல்

1. ஐயா உம் பாதம் என் தஞ்சமே
அனுதினம் ஓடி வந்தேன்
ஆனந்தமே ஆனந்தமே – 2
2. எங்கே நான் போக உம் சித்தமோ
அங்கே நான் சென்றிடுவேன்
உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்
3. புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்
பரவசமாகிடுவேன்
எக்காளம் நான் ஊதிடுவேன்
4. நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
கிருபை ஒன்றே போதுமைய்யா
5. ஊரெல்லாம் செல்வேன் பறைசாற்றுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்

Devanuke Magimai – தேவனுக்கே மகிமை

Devanuke Magimai

தேவனுக்கே மகிமை
தெய்வத்திற்கே மகிமை – 2
தேடி வந்து மீட்டவரே
தினம் உமக்கே மகிமை – என்னை – 2

ஐயா வாழ்க வாழ்க
உம் நாமம் வாழ்க – 2 (…தேவனுக்கே)

1. உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும் – 2
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் – இந்த – 2 (…ஐயா)

2. செவிகளை நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம் – 2
புவிதனிலே உம் விருப்பம்
பூரணமாகட்டுமே – இந்த – 2 (…ஐயா)

3. எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே – 2
ஒளிமயமே துணையாளரே
உள்ளத்தின் ஆறுதலே – எங்கள் – 2 (…ஐயா)

4. தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும் – 2
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே – இன்று – 2 (…ஐயா)

5. குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே – 2
கறை போக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே – பாவ – 2 (…ஐயா)

Dhevanukke Makimai
Dheivaththirkke Makimai – 2
Thedi Vanthu Meettavare
Thinam Umakke Makimai – Ennai – 2

Aiyaa Vaazhka Vaazhka
Um Naamam Vaazhka – 2 (… Dhevanukke)

1. Unnathaththil Dhevanukke
Makimai Undaakattum – 2
Poomiyile Samaathaanamum
Piriyamum Undaakattum – Intha – 2 (… Aiyaa)

2. Sevikalai Neer Thiranthu Vitteer
Seyvom Um Siththam – 2
Puvithanile Um Viruppam
Pooranamaakattume – Intha – 2 (… Aiyaa)

3. Elimaiyaana Engalaiye
Entrum Ninaippavare – 2
Olimayame Thunaiyaalare
Ullaththin Aaruthale – Engal – 2 (… Aiyaa)

4. Thedukira Anaivarume
Makizhnthu Kalikoorattum – 2
Paadukira Yaavarume
Parisuththam Aakattume – Intru – 2 (… Aiyaa)

5. Kurai Neekkum Vallavare
Kodi Sthoththirame – 2
Karai Pokkum Karththaave
Kalvaari Naayakane – Paava – 2 (… Aiyaa)

Unthan Aavi Enthan – உந்தன் ஆவி எந்தன்

Unthan Aavi Enthan
உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும்
எந்த நாளும் உந்தன் நாமம் பாட வேண்டும்

1. உள்ளம் எல்லாம் அன்பினாலே பொங்கவேண்டும்
கள்ளம் நீங்கி காலமெல்லாம் வாழவேண்டும்
2. பாவமான சுபாவம் எல்லாம் நீங்க வேண்டும்
தேவ ஆவி தேற்றி என்றும் நடத்த வேண்டும்
3. ஜீவதண்ணீர் நதியாகப் பாய வேண்டும்
சிலுவை நிழலில் தேசமெல்லாம் வாழவேண்டும்
4. வரங்கள் கனிகள் எல்லா நாளும் பெருக வேண்டும்
வாழ்நாளெல்லாம் பணிசெய்து மடியவேண்டும்
5. ஏதேன் தோட்ட உறவு என்றும் தொடர வேண்டும்
இயேசு கிறிஸ்து குரலைக் கேட்டு மகிழ வேண்டும்

Alinthu Pokindra – அழிந்து போகின்ற

Alinthu Pokindra
அழிந்து போகின்ற ஆத்துமாக்களை
தினமும் தினமும் நினைப்பேன்
அலைந்து திரிகின்ற ஆட்டைத்தேடியே
ஓடி ஓடி உழைப்பேன்

தெய்வமே தாருமே
ஆத்தும பாரமே

1. இருளின் ஜாதிகள் பேரொளி காணட்டும்
மரித்த மனிதர்மேல் வெளிச்சம் உதிக்கட்டும்
2. திறப்பின் வாசலில் தினமும் நிற்கின்றேன்
சுவரை அடைக்க நான் தினமும் ஜெபிக்கின்றேன்
3. எக்காள சப்தம் நான் மொளனம் எனக்கில்லை
சாமக்காவலன் சத்தியம் பேசுவேன்
4. கண்ணீர் சிந்தியே விதைகள் தூவினேன்
கெம்பீர சத்தமாய் அறுவடை செய்கிறேன்
5. ஊதாரி மைந்தர்கள் உம்மிடம் திரும்பட்டும்
விண்ணகம் மகிழட்டும் விருந்து நடக்கட்டும்

Yesu Kristu En Jeevan – இயேசுகிறிஸ்து என் ஜீவன்

Yesu Kristu En Jeevan
இயேசு கிறிஸ்து என் ஜீவன்
சாவது ஆதாயமே
வாழ்வது நானல்ல இயேசு என்னில் வாழ்கின்றார்
1. இயேசுவை நான் ஏற்றுக்கொண்டேன்
அவருக்குள் நான் வேர்கொண்டேன்
அவர்மேல் எழும்பும் கட்டடம் நான்
அசைவதில்லை தளர்வதும் இல்லை
2. என்ன வந்தாலும் கலங்கிடாமல்
இடுக்கண் நேரம் ஸ்தோத்தரிப்பேன்
அறிவைக் கடந்த தெய்வீக அமைதி
அடிமை வாழ்வின் கேடயமே
3. எனது ஜீவன் கிறிஸ்துவுடனே
தேவனுக்குள்ளே மறைந்தது
ஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில்
மகிமையில் நான் வெளிப்படுவேனே
4. கிறிஸ்துவுக்குள்ளே இரத்தத்தினாலே
பாவமன்னிப்பின் மீட்படைந்தேன்
அவரை அறியும் அறிவிலே வளர்வேன்
அவரின் விருப்பம் செய்தே மகிழ்வேன்

Nesare Um Thiru Paadam – நேசரே உம் திருபாதம்

Nesare Um Thiru Paadam
நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்
நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித்துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே
அடைக்கலமே அதிசயமே ஆராதனை ஆராதனை

1. உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதையா
நல்லவரே நன்மை செய்தவரே
நன்றி நன்றி ஐயா
வல்லவரே நல்லவரே ஆராதனை ஆராதனை

2. பலியான செம்மறி பாவங்கள் எல்லாம்
சுமந்து தீர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே
பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை

3. எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்
உம்மைப் பிரியேன் ஐயா
இரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வேன்
நிச்சயம் நிச்சயமே
இரட்சகரே இயேசு நாதா ஆராதனை ஆராதனை

Naesarae um thiru paadham amarndhaen
Nimmadhi nimmadhiyae
Aarvamudanae paadithudhipaen
Aanandham aanandhamae
Adaikkalamae adhisayamae aaraadhanai aaraadhanai

1. Um valla seyalgal ninaithu ninaithu
Ullamae pongudhaiyaa
Nallavarae nanmai seidhavarae
Nandri nandri aiyaa
Vallavarae nallavarae aaraadhanai aaraadhanai

2. Baliyaana semmari paavangal ellaam
Sumandhu theerthavarae
Parisutha ratham enakkaaga alloa
Baakkiyam baakkiyamae
Parisutharae padaithavarae aaraadhanai aaraadhanai

3. Ethanai innalgal En vaazhvil vandhaalum
Ummai piriyaen aiyaa
Rathamae sinthi saatchiyaai vaazhvaen
Nichayam nichayamae
Ratchagarae yaesu naadhaa aaraadhanai aaraadhanai

Vathai Unthan Koodarathai – வாதை உந்தன் கூடாரத்தை

Vathai Unthan Koodarathai
வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே

ஆமென் ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா

1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய்
அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய்

2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம்
ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு

3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது
அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம்

4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார்
ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார்

5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு
வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம்

6. அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே
தொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதை செய்திடுவார்

7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல ஆவியினால் ஆகும்
சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்
துணையாளர் முன் செல்கிறார்