All Songs by Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்

Ummodu Irukanume – உம்மோடு இருக்கணுமே

Ummodu Irukanume
உம்மோடு இருக்கணுமே ஐயா
உம்மைப் போல் மாறணுமே
உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து
வெளிச்சம் கொடுக்கணுமே

1. ஓடும் நதியின் ஓரம் வளரும்
மரமாய் மாறணுமே
எல்லா நாளும் இலைகளோடு
கனிகள் கொடுக்கணுமே
2. உலகப் பெருமை இன்பமெல்லாம்
குப்பையாய் மாறணுமே
உம்மையே என் கண்முன் வைத்து
ஓடி ஜெயிக்கணுமே
3. ஆத்ம பார உருக்கத்தோடு
அழுது புலம்பணுமே
இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்
மேய்ப்பன் ஆகணுமே – நான்
4. பேய்கள் ஓட்டும் வல்லமையோடு
பிரசங்கள் பண்ணணுமே
கடினமான பாறை இதயம்
உடைத்து நொறுக்கணுமே – நான்
5. வார்த்தை என்னும் வாளையேந்தி
யுத்தம் செய்யணுமே
விசுவாசம் என்னும் கேடயத்தால்
பிசாசை வெல்லணுமே – நான்

En Pavangal En Yesu – என் பாவங்கள் என் இயேசு

En Pavangal En Yesu
என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்
தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார்

1. இனி நான் பாவியல்ல
பரிசுத்தமாகிவிட்டேன்
நேசரின் பின் செல்வேன் – நான்
திரும்பி பார்க்க மாட்டேன்
2. ஆழ்கடலில் எறிந்துவிட்டார்
காலாலே மிதித்து விட்டார்
நினைவுகூர மாட்டார் – என்
நேசரைத் துதிக்கின்றேன் – இனி
3. கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
மறுபடி பிறந்துவிட்டேன்
பழையன கழிந்தனவே – நான்
புதியன படைப்பானேன்

Isravele Bhayapadathe – இஸ்ரவேலே பயப்படாதே

Isravele Bhayapadathe
இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே

1. உன்னை நானே தெரிந்துகொண்டேனே
உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன் – வழியும்
2. தாய் மறந்தாலும் நான் மறவேனே
உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை
3. துன்பநேரம் சோர்ந்துவிடாதே
ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு
4. தீயின் நடுவே நீ நடந்தாலும்
எரிந்து நீயும் போகமாட்டாய்
ஆறுகளை நீ கடக்கும் போது
மூழ்கி போக மாட்டாய்

Yaar Ennai Kaivittalum – யார் என்னைக் கைவிட்டாலும்

Yaar Ennai Kaivittalum
யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்
1. தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார்
2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே
3. எனக்காகவே மனிதனானார்
எனக்காகவே பாடுபட்டார்
4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே
5. ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே
6. எனக்காகவே காயப்பட்டார்
என் நோய்கள் சுமந்து கொண்டார்

Singa Kuttigal Pattini Kidakkum – சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்

Singa Kuttigal Pattini Kidakkum
சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

1. புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டை கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்

2. எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகிறார்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்

3. ஆத்துமாவை தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்

4. என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார்

Singa kuttigal pattini kidakkum
Aandavarai thaeduvorkku Kuraiyillaiyae
Kuraiyillaiyae kuraiyillaiyae
Aandavarai thaeduvorkku Kuraiyillaiyae

1. Pullulla idangalilae yennai meikindraar
Thaneerandai kooti sendru thaagam theerhindraar

2. Yedhirigal munn virunthondrai aayathapaduthugiraar
Yen thalaiyai ennaiyinaal abishaegam seigindraar

3. Aathumaavai thaetrugindrar aavi pozhigindraar
Jeevanulla naatkalellaam kirubai ennai thodarum

4. Yen dhaevan thammudaiya magimai selvathinaal
Kuraigalaiyae kristhuvukkul niraivaakki nadathiduvaar

Yesu Raja Ezhai En Ullam – இயேசு ராஜா ஏழை என்

Yesu Raja Ezhai En Ullam
இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
தேடி வந்தீரே
1. என் நேசர் நீர்தானையா
என்னை தேற்றிடும் என் தேசையா
சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே
சீக்கிரம் வாருமையா – ஐயா
2. உளையான சேற்றினின்று என்னை
உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்
அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது
அன்பாலே அணைத்துக் கொண்டீர் – ஐயா
3. ஆபத்து காலத்திலே நல்ல
அநுக்கிரகம் துணையும் நீரே
அன்பே என்றீர் மகளே என்றீர்
மணவாட்டி நீதான் என்றீர்
4. பரிசுத்த ஆவியினால் என்னை
அபிஷேகம் செய்தீர்
பயங்களை நீக்கி பலத்தையே தந்து
பரிசுத்த மகளாக்கினீர்

Nandri Nandri Nandri Endru- நன்றி நன்றி நன்றி என்று

Nandri Nandri Nandri Endru
நன்றி நன்றி நன்றி என்று
நாள்தோறும் பாடிடுவோம்

1. வல்லவரே நல்லவரே

2. காண்பவரே காப்பவரே

3. பாவங்களைப் போக்கிவிட்டீர்

4. நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர்

5. ஆவியினால் அபிஷேகம் செய்தீர்

6. புதுவாழ்வு எனக்குத் தந்தீர்
அல்லேலூயா (2) ஆமென்

Kirusthukul Valum Ennaku – கிறிஸ்துவுக்குள் வாழும்

Kirusthukul Valum Ennaku
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு
வெற்றி உண்டு -3

1. என்னென்ன துன்பம் வந்தாலும்
நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும்
நான் சோர்ந்து போகமாட்டேன்

2. என் ராஜா முன்னே செல்கிறார்
வெற்றிப் பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து
நான் ஓசன்னா பாடிடுவேன்

3. சாத்தானின் அதிகாரமெல்லாம்
என் நேசர் பறித்துக் கொண்டார்
சிலுவையில் அறைந்து விட்டார்
காலாலே மிதித்து விட்டார்

4. பாவங்கள் போக்கிவிட்டார்
சாபங்கள் நீக்கி விட்டார்
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன்

5. மேகங்கள் நடுவினிலே
என் நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்

Kristhuvukkul vaazhum enakku
Eppoadhum vetri undu
Vetri undu -3

1. Ennenna thunbam vandhaalum
Naan kalangidavae maattaen
Yaar enna sonnaalum
Naan soarndhu poagamaattaen

2. En raajaa munnae selgiraar
Vetri pavani selgiraar
Kuruththoalai kaiyil eduththu
Naan oasannaa paadiduvaen

3. Saaththaanin adhigaaramellaam
En naesar pariththu kondaar
Siluvaiyil araindhu vittaar
kaalaalae mithiththu vittaar

4. Paavangal poakkivittaar
Saapangal neekki vittaar
yaesuvin thazhumbugalaal
Sugamaanaen sugamaanaen

5. Maegangal naduvinilae
En naesar varappoagiraar
Karampidiththu azhaiththu selvaar
Kanneerellaam thudaippaar

En Meiparae Yesaiya – என் மேய்ப்பரே இயேசையா

En Meiparae Yesaiya
என் மேய்ப்பரே இயேசையா
என்னோடு இருப்பவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2
1. பசும்புல் மேய்ச்சலிலே
இளைப்பாறச் செய்கின்றீர்
2. அமர்ந்த தண்ணீரண்டை
அநுதினம் நடத்துகிறீர்
3. ஆத்துமா தேற்றுகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர்
4. கோலும் கைத்தடியும்
தினமும் தேற்றிடுமே
5. நீதியின் பாதையிலே
நித்தமும் நடத்துகிறீர்
6. இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
நடந்தாலும் பயமில்லையே
7. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்

Enthan Yesu Kai Vidamattar – எந்தன் இயேசு கைவிடமாட்டார்

Enthan Yesu Kai Vidamattar
எந்தன் இயேசு கைவிடமாட்டார்
என்னை மறந்திட மாட்டார்
அல்லேலூயா – 8

1. நிந்தனை போராட்டத்தில்
நேசர் எனைத் தாங்கினார்
சோதனை வந்த போதெல்லாம்
தப்பிச் செல்ல வழி காட்டினார்
2. கடந்ததை மறக்கின்றேன்
கண்முன்னால் என் இயேசுதான்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகைப் போல் எழும்பிடுவேன்
3. சீக்கிரம் வரப்போகின்ற
நேசருக்காய் காத்திருப்பேன்
எரியும் விளக்கேந்தியே
இயேசுவின் பின் செல்லுவேன்
4. ஆயிரம் துன்பம் வந்தாலும்
அச்சம் எனக்கில்லையே
அரணும் கோட்டையும் அவர்
அத்தனையும் தகர்த்திடுவாரே