All Songs by Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்

Kalangathe Megane – கலங்காதே மகனே

Kalangathe Megane

கலங்காதே மகனே
கலங்காதே மகளே – 2
கன்மலையாம் கிறிஸ்து
கைவிடவே மாட்டார் (3)

1. மலைகள் பெயர்ந்து போகலாம்
குன்றுகள் அசைந்து போகலாம் – 2
மனதுருகும் தேவன்
மாறிடவே மாட்டார் (3) (…கலங்காதே)

2. உலகம் வெறுத்துப் பேசலாம்
காரணமின்றி நகைக்கலாம் – 2
உன்னை படைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்துவார் (3) (…கலங்காதே)

3. தீமை உன்னை அணுகாது
துன்பம் உறைவிடம் நெருங்காது – 2
செல்லும் இடமெல்லாம்
தூதர்கள் காத்திடுவார் (3) (…கலங்காதே)

4. வியாதி வறுமை நெருக்கலாம்
சோதனை துன்பம் சூழலாம் – 2
உன்னை மீட்டவரோ
உன்னைக் காத்துக் கொள்வார் (3)

Kalangaathe Magane
Kalangaathe Magale – 2
Kanmalaiyaam Kristhu
Kaividave Maattaar (3)

1. Malaigal Peyarnthu Pogalaam
Kundrugal Asainthu Pogalaam – 2
Manathurugum Devan
Maaridave Maattaar (3) (…Kalangaathe)

2. Ulagam Veruththu Pesalaam
Kaaranamindri Nagaikkalaam – 2
Unnai Padaiththavaro
Ullangkaiyil Yendhuvaar (3) (…Kalangaathe)

3. Theemai Unnai Anugaathu
Thunbam Uraividam Nerungaathu – 2
Sellum Idamellaam
Thoothargal Kaaththiduvaar (3) (…Kalangaathe)

4. Vyaathi Varumai Nerukkalaam
Sothanai Thunbam Soozhalaam – 2
Unnai Meettavaro
Unnai Kaaththuk Kolvaar (3)

Sonnapadi Uyirthelunthaar – சொன்னபடி உயிர்த்தெழுந்தார்

Sonnapadi Uyirthelunthaar
சொன்னபடி உயிர்த்தெழுந்தார்
சொல்தவறா நம் இயேசு
அல்லேலூயா ஆனந்தமே
அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார்

1. சாவே உன் வெற்றி எங்கே
சாவே உன் கொடுக்கு எங்கே
சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது
சகல அதிகாரம் நமக்கு உண்டு

2. விண்ணும் ஒழிந்து போகும்
மண்ணும் மறைந்து போகும்
ஆண்டவர் வாக்கோ இன்றும் என்றும்
அழியாதது மாறாதது

3. கிறிஸ்து உயிர்த்ததினால்
நாமும் உயிர்த்தெழுவோம்
ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோ
அபிஷேகம் பெற்று காத்திருப்போம்

Sonnapadi Uyirthelunthaar
Solthavaraa Nam Yesu
Alleluyaa Aananthamae
Anpar Yesu Uyirthelunthaar

1. Saavae Un Vetti Engae
Saavae Un Kodukku Engae
Saavu Veelnthathu Vetti Kitaiththathu
Sakala Athikaaram Namakku Unndu

2. Vinnnum Olinthu Pokum
Mannnum Marainthu Pokum
Aanndavar Vaakko Intum
Entum Aliyaathathu Maaraathathu

3. Kiristhu Uyirthathinaal
Naamum Uyirththeluvom
Aanndavar Varukai Seekkiram Anto
Apishaekam Pettu Kaaththiruppom

Siluvayil Thongum – சிலுவையில் தொங்கும்

Siluvayil Thongum
சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்
திரு இரத்தம் சிந்தும் தேவனைப் பார்

1. முள்முடி தலையில் பாருங்களேன்
முகமெல்லாம் இரத்தம் அழகில்லை
கள்வர்கள் நடுவில் கதறுகிறார் – 2
கருணை தேவன் உனக்காக

2. கைகால் ஆணிகள் காயங்களே
கதறுகிறார் தாங்க முடியாமல்
இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர்
என்றே அழுது புலம்புகின்றார்

Naan Bayapadum – நான் பயப்படும்

Naan Bayapadum
நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்
1. உங்களில் இருப்பவர் பெரியவரே
பரிசுத்தமானவரே
அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
நித்திய காலமெல்லாம் நம்மையே
2. நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
உறங்குவதும் இல்லை
அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
என் கூப்பிடுதல் அவர் செவியினிலே

Kankindra Devan – காண்கின்ற தேவன்

Kankindra Devan
காண்கின்ற தேவன் நம் தேவன்
காலமும் அவரைத் துதித்திடுவோம்
அல்லேலூயா – அல்லேலூயா (2)
1. தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்
தரணியில் எவரேனும் உண்டோ
கர்த்தர் இயேசு காண்கின்றார்
கருத்தாய் அவரை தேடிடுவோம்
2. ஆவியிலே நொறுக்கப்பட்டு
ஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிற
அன்பு இதயம் காண்கின்றார்
அணுகிடுவோம் நாம் கண்ணீரோடு
3. உத்தம இதயம் கொண்டிருப்போம்
உன்னத வல்லமை பெற்றிடுவோம்
கர்த்தரின் கண்கள் பூமியெங்கும்
கருத்தாய் நோக்கிப் பார்க்கின்றன
4. ஆண்டவர் வார்த்தைக்குப் பயந்து
அவரது கிருபைக்கு காத்திருந்தால்
பஞ்ச காலத்தில் உணவளிக்க
பரிவாய் நம்மைப் பார்க்கின்றார்.

Visuvaasaththinaal Neethiman- விசுவாசத்தினால்

Visuvaasaththinaal neethiman
விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே
கலங்காதே திகையாதே விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே

1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை
சொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார்

2. பிறர்வசை கூறி துன்புறுத்தி
இல்லாதது சொல்லும்போது
நீ மகிழ்ந்து களிகூரு
விண் கைமாறு மிகுதியாகும்

3. கொடும் வறுமையில் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும்
அன்று எலியாவை போஷித்தவர்
இன்று உன் பசி ஆற்றிடாரோ