All Songs by Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்

Unnathamanavarin – உன்னதமானவர்

Unnathamanavarin
உன்னதமானவர் மறைவினிலே
சர்வ வல்லவர் நிழல்தனிலே
தங்கி உறவாடி மகிழ்கின்றேன்
எங்கும் வெற்றி நான் காண்கின்றேன்
1. ஆண்டவர் எனது அடைக்கலமானார்
நான் நம்பும் கோட்டையும் அரணுமானார்
வேடர் கண்ணிகள் கொள்ளைநோய்கள்
தப்புவித்து காப்பாற்றி தாங்குகிறார்
2. தமது சிறகால் அரவணைக்கின்றார்
இறக்கையின் கீழே அமரச் செய்கின்றார்
சத்திய வசனம் எனது கேடகம்
நிச்சயம் நிச்சயம் விடுதலை உண்டு
3. என் பக்கம் ஆயிரம்பேர் விழுந்தாலும்
பதினாயிரம் பேர்தாக்கினாலும்
பாதுகாப்பவர் என் பக்கத்திலே
பாதிப்பு இல்லையே பயமில்லையே
4. செல்லுமிடமெல்லாம் என்னைக்காக்க
தமது தூதருக்கு கட்டளையிட்டார்
பாதம் கல்லிலே மோதாமலே
கைகளில் ஏந்திடுவார் தாங்கிடுவார்
5. சிங்கத்தின் மீது நான் நடந்திடுவேன்
சீறும் சர்ப்பங்களை மிதித்திடுவேன்
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்
சாத்தானை காலடியில் நசுக்கிடுவார்

Nandri Bali Peedam Kattuvom – நன்றிப்பலிபீடம் கட்டுவோம்

Nandri Bali Peedam Kattuvom
நன்றிபலிபீடம் கட்டுவோம்
நல்லதெய்வம் நன்மை செய்தார்
செய்த நன்மைகள் ஆயிரங்கள்
சொல்லி சொல்லி பாடுவேன்

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

1. ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
பாவம் நீங்கிட கழுவி விட்டீர்
உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
உமது ஊழியம் செய்ய வைத்தீர்

2. பார்க்கும் கண்களை தந்தீரய்யா
பாடும் உதடுகள் தந்தீரய்யா
உழைக்கும் கரங்களை தந்தீரய்யா
ஓடும் கால்களைத் தந்தீரய்யா

3. குற்றம் செய்தால் மரித்திருந்தோம்
இயேசுவோடே கூட எழச்செய்தீர்
கிருபையினாலே இரட்சித்தீரே
உன்னதங்களிலே உட்காரச்செய்தீர்

4. புதிய உடன்பாட்டின் அடையாளமாய்
புனித இரத்தம் ஊற்றினீரே
சத்திய ஜீவ வார்த்தையாலே
மரித்த வாழ்வையே மாற்றினீரே

5. இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர்
உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
உரிமை சொத்தாக வைத்துக் கொண்டீர்

Nandri Bali Peedam Kattuvom
Nalla Deivam Nanmai Seythaar
Seytha Nanmaikal Aayirangal
Solli Solli Paaduvaen

Nandri Thagapanae Nanmai Seytheerae

1. Jeevan Thanthu Neer Anbukoorntheer
Paavam Neengida Kaluvi Vittir
Umakkendru Vaala Piritheduthu
Umathu Ooliyam Seiya Vaitheer

2. Paarkum Kankalai Thantheerayyaa
Paadum Uthadukal Thantheerayyaa
Ulaikum Karangalai Thantheerayyaa
Odum Kaalkalai Thantheerayyaa

3. Kuttam Seythaal Marithirunthom
Yesuvotae Kooda Elachcheytheer
Kirupaiyinaalae Iratchiththeerae
Unnathangalilae Utkaarachcheytheer

4. Puthiya Udanpaatin Adaiyaalamaai
Punitha Iratham Ootrineerae
Sathiya Jeeva Vaarthaiyaalae
Maritha Vaalvaiyae Maatrineerae

5. Irulin Athikaaram Akatrivittir
Yesu Arasukul Serthuvittir
Umakku Sonthamaai Vaangi Konndu
Urimai Sothaaka Vaithu Kondeer

Maraname Un Koor Enge – மரணமே உன் கூர்

Maraname Un Koor Enge
மரணமே உன் கூர் எங்கே ?
பாதாளமே உன் ஜெயம் எங்கே?
மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசு

எனக்குள் வந்துவிட்டர்
சாவை அழித்து அழியா வாழ்வை
எனக்குத் தந்துவிட்டார்

1. சாவுக்கு அதிபதி சாத்தானை – இயேசு
சாவாலே வென்றுவிட்டார்
மரண பயத்தினால் வாடும் மனிதரை
விடுவித்து மீட்டுக் கொண்டார்
பயமில்லையே மரணபயமில்லையே
ஜெயம் எடுத்தார் இயேசு ஜெயம் எடுத்தார்

2. அழிவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்
அழியாமை அணிந்து கொள்ளும்
சாவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்
சாவாமை அணிந்து கொள்ளும்

3. இறந்தோர் மேலும் வாழ்வோர் மேலும்
ஆளுகை செய்திடவே
இயேசு மரித்து உயிர்த்து எழுந்தார்
இன்றைக்கும் ஜீவிக்கிறார்

4. கட்டளை பிறக்க தூதன் குரல் ஒலிக்க
கர்த்தர் இயேசு வந்திடுவார்
கிறிஸ்துவுக்கள் வாழ்வோர் (மரித்தோர்)
எதிர் கொண்டு சென்றிடுவோம்

5. பூமிக்குரிய கூடாரமான இவ்வீடு அழிந்தாலும்
பரமன் கட்டிய நிலையான வீடு
பரலோகத்தில் உண்டு

6. ‘அ’கரமும் ‘ன’கரமும் தொடக்கமும் முடிவும்
நான் தானே என்று சொன்னவர்
அவனவன் கிரியைக்குத் தகுந்த
பரிசு அளிக்க சீக்கிரத்தில் வருகின்றார்

Maranamae Un Koor Engae
Paathaalamae Un Jeyam Engae
Maranaththai Jeyiththa
Mannavan Yesu

Enakkul Vanthuvittar
Saavai Aliththu Aliyaa Vaalvai
Enakku Thanthu Vittar

1. Saavukku Athipathi Saaththaanai Yesu
Saavaalae Ventuvittar
Marana Payaththinaal Vaadum Manitharai
Viduviththu Meettuk Konndaar
Payamillai Marana Payamillai
Jeyameduththaar Yesu Jeyameduththaar.

2. Alivukkuriya Ivvudal Oru Naal
Aliyaamai Anninthu Kollum
Saavukkuriya Ivvudal Oru Naal
Saavaamai Anninthu Kollum

3. Iranthor Maelum Vaalvor Maelum
Aalukai Seythidavae
Yesu Mariththu Uyirththu Elunthaar
Intaikkum Jeevikkiraar

4. Kattalai Pirakka Thoothar Kural Olikka
Karththar Yesu Vanthiduvaar
Kiristhuvukkul Vaalvor
Kiristhuvukkul Mariththor
Ethirkonndu Sentiduvom

5. Poomikkuriya Koodaaramaana
Ivveedu Alinthaalum
Paraman Kattiya Nilaiyaana Veedu
Paralokaththil Unndu

6. Akaramum Nakaramum Thodakkamum Mutivum
Naan Thaanae Entu Sonnavar
Avanavan Kiriyaikkuth Thakuntha Parisu Alikka
Seekkiraththil Varukintar

Nerukkadi Velaiyil Pathilalithu – நெருக்கடி

Nerukkadi Velaiyil Pathilalithu
நெருக்கடி வேலைளில் பதிலளித்து
பாதுகாத்து நடத்திடுவார்
உன்னோடு இருந்து ஆதரித்து
தினமும் உதவிடுவார்
1. நீ செலுத்தும் காணிக்கைகள்
நினைவு கூர்;ந்திடுவார்
நன்றி பலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக்கொள்வார்
2. உன் மனம் விரும்புவதை
உனக்குத் தந்திடுவார்
உனது திட்டங்களெல்லாம்
நிறைவேற்றி முடித்திடுவார்
3. உனக்கு வரும் வெற்றியைக் கண்டு
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
நம் தேவன் நாமத்திலே
வெற்றிக் கொடி நாட்டிடுவோம்
4. இரதங்களை நம்பும் மனிதர்
இடறிவிழுந்தார்கள்
தேவனை நம்பும் நாமோ
நிமிர்ந்து நின்றிடுவோம்

Malaimel Yeruvom – மலைமேல் ஏறுவோம் மரங்களை

Malaimel Yeruvom
மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம்
ஆலயம் கட்டுவோம் அவர்பணி செய்திடுவோம்
நாடெங்கும் சென்றிடுவோம்
நற்செய்தி சொல்லிடுவோம்
சபைகளை நிரப்பிடுவோம்
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
1. தேவனின் வீடு பாழாய்க்கிடக்குதே
நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா
2. திரளாய் விதைத்தும் கொஞ்சமாய்
அறுப்பதேன் வருகின்ற பணமெல்லாம்
வீணாய்ப் போவதேன்
3. மனந்தளராமல் பணியைத் தொடருங்கள்
படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம்;
4. தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை
அற்பமாய் எண்ணாதே அசட்டைபண்ணாதே
5. சாப்பிட்டும் திருப்தியில்லை
குடித்தும் நிறைவில்லை
ஆடை அணிகின்றோம்
குளிரோ போகவில்லை

Ennai Kaakum – என்னைக் காக்கும்

Ennai Kaakum
என்னைக் காக்கும் கேடகமே
தலையை நிமிரச் செய்பவரே
இன்று உமக்கு ஆராதனை
என்றும் உமக்கே ஆராதனை
1. உம்மை நோக்கி நான் கூப்பிட்டேன்
எனக்கு பதில் நீர்தந்தீரய்யா
படுத்து உறங்கி விழித்தெழுவேன்
நீரே என்னைத் தாங்குகிறீர்
ஆராதனை ஆராதனை
அப்பா அப்பா உங்களுக்குத்தான்
2. சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்கு
அஞ்சமாட்டேன் அஞ்சவே மாட்டேன்
விடுதலை தரும் தெய்வம் நீரே
வெற்றிப்பாதையில் நடத்துகிறீர்
3. பக்தியுள்ள அடியார்களை
உமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர்
வேண்டும்போது செவிசாய்க்கிறீர்
என்பதை நான் அறிந்துகொண்டேன்
4. உலகப்பொருள் தரும் மகிழ்வை விட
மேலான மகிழ்ச்சி எனக்கு தந்தீர்
நீர் ஒருவரே பாதுகாப்புடன்
சுகமாய் வாழச் செய்கின்றீர்
5. உமது அன்பில் மகிழ்ந்திருப்பேன்
உம்மோடுதான் நான் வாழ்ந்திடுவேன்
எனக்கு நன்மை செய்தபடியால்
நன்றிப் பாடல் பாடிடுவேன்

Sabaiyorae Ellorum – சபையோரே எல்லோரும்

Sabaiyorae Ellorum
சபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்
ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது
அவரது இரக்கம் என்றும் உள்ளது
1. நம்தேவன் உயர்ந்த செல்வந்தர் அன்றோ
தேவையான அனைத்தையும் மிகுதியாய் தருவார்
அநேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்
கடன் வாங்காமல் வாழச்செய்திடுவார்

2. கர்த்தர் குரல்கேட்கும் ஆடுகள் நாம்
முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார்
ஒருவனும் பறித்துக்கொள்ள முடியாதென்றார்
ஒருநாளும் அழிந்து போகவிடமாட்டார்

3. கர்த்தரோ நமக்கெல்லாம் உறைவிடம் ஆனார்
இன்னல்கள் நடுவிலே மறைவிடம் ஆனார்
விடுதலைகீதங்கள் பாடவைக்கின்றார்
வெற்றிக் கொடி அசைத்து ஆடவைக்கின்றார்

4. சொந்த மகனெறும் பார்க்காமலே
நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே
அவரோடு கூடமற்ற எல்லா நன்மைகளும்
அருள்வார் என்பதும் நிச்சயம்தானே

Manam Irangum Deivam Yesu – மனமிரங்கும்

Manam Irangum Deivam Yesu
மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்
யேகோவா ரஃப்பா..இன்றும் வாழ்கின்றார்
சுகம் தரும் தெய்வம் இயேசு
சுகம் இன்று தருகிறார்
1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் -மாமி
கரத்தைபிடித்துதூக்கினார்
காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று
கர்த்தர் தொண்டுசெய்து மகிழ்ந்தாள்
2. குஷ்டரோகியை கண்டார்-இயேசு
கரங்கள் நீட்டித் தொட்டார்
சித்தமுண்டு சுத்தமாகு -என்று
சொல்லி சுகத்தைத் தந்தார்
3. நிமிர முடியாத கூனி -அன்று
இயேசு அவளைக் கண்டார்
கைகள் அவள்மேலே வைத்தார்-உடன்
நிமிர்ந்து துதிக்கச் செய்தார்
4. பிறவிக்குருடன் பர்திமேயு அன்று
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வையடைந்து மகிழ்ந்தான்-உடன்
இயேசு பின்னே நடந்தான்

Udalai Kodu Ullathai Kodu – உடலைக் கொடு

Udalai Kodu Ullathai Kodu
உடலைக்கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய்
உன்னைக் கொடு ஒப்புக்கொடு சந்தோஷமாய்
இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்
இதிலே தான் மகிமை அடைகிறார்
1. ஒரு மணிநேரம் கொடுத்துப்பாரு
உன்னை தேவன் உயர்த்துவாரு
பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு
கடனில்லாமல் நடத்துவாரு
2. நன்றிப்பாடல் தினமும் பாடு
நல்ல தேவன் வருவார் உன்னோடு
என்ன நடந்தாலும் நன்றி கூறிடு
தீமையை நன்மையால் தினமும்வென்றிடு
3. தேசத்திற்காக தினம் மன்றாடு
பிறருக்காக பிரார்த்தனை செய்திடு
ஆளும் தலைவர்களை ஜெபத்;தில் நினைத்திடு
அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும்
4. விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும்
விசுவாசி என்றும் பதறான் பதறான்
அறிக்கை செய்திடுவோம் எரிகோ பிடித்திடுவோம்
செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும்
5. நாடெங்கும் சென்றிடு நற்செய்தி சொல்லிடு
வீடுகள் தோறும் விடுதலை கூறிடு
சபைகளை நிரப்பிடு சாட்சிகள் எழுப்பிடு
இரட்சகர் வருகைக்கு ஆயத்தமாக்கிடு

Pasumaiyana Pul Veliyil – பசுமையான புல்வெளி

Pasumaiyana Pul Veliyil
பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே
அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே
நோயில்லாத சுகவாழ்வு எனக்கு தந்தவரே
கரம்பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே

என் மேய்ப்பவரே…நல் ஆயனே
எனக்கொன்றும் குறையில்லப்பா

1. கரங்களாலே அணைத்துக் கொண்டு சுமந்து செல்கிறீர்
மறந்திடாமல் உணவு கொடுத்து பெலன் தருகிறீர்

2. புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்
உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய் நடத்தி செல்கிறீர்

3. மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
அப்பா நீங்க இருப்பதாலே எனக்கு பயமில்ல

4. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே
தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே

5. எனது உள்ளம் அபிஷேகத்தால் நிரம்பி வழியுதே
எல்லா நாளும் நன்றிப் பாடல் பாடி மகிழுதே

6. எதிரிகளின் கண் முன்னே விருந்து தருகின்றீர்
எனது தலையில் நறுமணத் தைலம் பூசுகிறீர்

Pasumaiyana Pul Veliyil Padukka Vaippavarae
Amaithiyaana Thanneerandai Alaithu Selpavarae
Noyillatha Sugavaalvu Enakku Thanthavarae
Karampidithu Kadanillaamal Nadathi Selpavarae
En Maeiparae… Nal Aayanae
Enakondrum Kuraiyillappaa

1. Karangalaalae Annaithu Kondu
Sumanthu Selgireer
Maranthidaamal Unavu Koduthu
Belan Tharukireer

2. Puthiya Uyir Thinam Thinam Enakku Tharukireer
Um Peyarukkaerpa Parisuthamaai Nadathi Selkireer

3. Marana Irul Pallathaakil Nadakka Naernthaalum
Appaa Neenga Irupathaalae Enakku Bayamilla

4. Jeevanulla Naatkalellaam Nanmai Thodarumae
Thaevan Veettil Thinam Thinam Thangi Makilvaenae

5. Enathu Ullam Apishaekathaal Nirampi Valiyuthae
Ellaa Naalum Nantip Paadal Paati Makiluthae

6. Ethirikalin Kann Munnae Virunthu Tharukinteer
Enathu Thalaiyil Narumanath Thailam Poosukireer