Devane En Nanbane
தேவனே என் நண்பனே
எனக்காய் மரித்தீரே (2)
சிலுவை நிழலில் நான் தினமும்
மறைந்து இளைப்பாருவேன் (2)
1. சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில்
கிருபையின் கரத்தினில் ஆறுதல் கண்டேன்
தேனினும் இனிய என்நேசரின்
அன்பை நான் எப்படி சொல்லிடுவேன்
தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை
இன்னல்கள் மறந்திடுவேன் என்றும் நான் – தேவனே
2. கார்மேகம் போல் என்பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
என்நாவிலே புதுப்பாடல் தந்து தேற்றினார்
மூழ்கியே தள்ளும் கடல் ஆழத்தை
என் தேவன் அகன்றிட செய்தாரே
சொந்த தன் ஜீவனையும் பாராமல்
எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன் – தேவனே
3. கல்வாரியில் ஜீவன் தந்த நேசர் இயேசுவே
அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார்
அந்த இயேசுவின் அன்பைப் பாடவே
ஆயிரம் நாவுகள் போதாதையா
தேற்றியே ஆற்றி என்னைத் தாங்குவார்
அவரின் அன்பே போதுமே என்றென்றும் – தேவனே
En Nesar Vellai Pola
என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
என் அன்பர் மரிக்கொழுந்து பூங்கொத்து
நான் அவர்க்குள் மலர்ந்து மணக்கும் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே – நான் (2)
1. ஆத்ம நேசரோடு உன்னதங்கள் சென்று
மெய் மறந்து நான் அவர் மார்பில் சாய்ந்த போது – 2
மகிமையின் ஒளியை என் மேல் வீசச் செய்தார்
மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் துள்ளுதே – 2 (…அன்பே)
2. ஆத்ம நேசரோடு அகமகிழ்வேனே
இக்காலத்து பாடுகள் ஓய்ந்தொழிந்து போகும் – 2
மகிமை மகத்துவம் என்னை மூடிக்கொள்ளும்
மறுரூபமாவேன் என் நேசர் சாயலாய் – 2 (…அன்பே)
3. தேவ ஜனத்தோடே நித்ய நித்யமாக
ஆராதிப்பேனே என் நேசர் இயேசுவை – 2
தூதர் பாடும் தேசம் என் சொந்தமான தேசம்
கண்ணீரில்லையே இனி கவலையில்லையே – 2 (…அன்பே)
4. ஆவியானவரே நன்றி நன்றி நன்றி
அக்கினியினால் என்னை நிறைத்திட்டீரே – 2
இன்னும் வேண்டும் என்று கெஞ்சுதே என் ஆவி
நிரப்பும் நிரப்பும் என்று உள்ளம் ஏங்குதே – 2 (…அன்பே)