Song Tags: Keerthanai Songs

Devane Naan Umathandaiyil – தேவனே நான் உமதண்டையில்

Devane Naan Umathandaiyil
தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்
மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் – பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! – தேவனே

2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் – தேவனே

3. நித்திரையினின்று விழித்துக் – காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே

4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் – பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே

Devane Naan Umathandaiyil – Innum Nerungich
Servathae En Aaval Poomiyil
Maavaliya Koramaaka Van Siluvai Meethinil Naan
Kovae, Thonga Naeritinum
Aavalaay Ummanntai Servaen

1. Yaakkopaippol, Pokum Paathaiyil – Poluthu Pattu
Iraavil Irul Vanthu Mootida
Thookkaththaal Naan Kallil Saaynthu Thoonginaalum En Kanaavil
Nnokkiyummai Kittich Servaen, Vaakkadangaa Nalla Naathaa! – Devane

2. Paraththukkaerum Patikal Polavae – En Paathai Thontap
Pannnum Aiyaa, Entan Thaevanae,
Kirupaiyaaka Neer Enakkuth Tharuvathellaam Umathanntai
Arumaiyaay Ennaiyalaiththu Anpin Thoothanaakach Seyyum – Devane

3. Niththiraiyinintu Viliththuk – Kaalai Elunthu
Karththaavae, Naan Ummaip Pottuvaen
Iththaraiyil Unthan Veedaay Enthuyark Kal Naattuvaenae
Entan Thunpaththin Valiyaay Innum Ummaik Kittich Servaen – Devane

4. Aananthamaam Settai Viriththup – Paravasamaay
Aakaayaththil Aerip Poyinum
Vaana Manndalang Kadanthu Paranthu Maelae Sentitinum
Makilvutru Kaalaththilum Naan Maruviyummaik Kittich Servaen – Devane

Baktharudan Paaduvaen – பக்தருடன் பாடுவேன்

Baktharudan Paaduvaen

பல்லவி

பக்தருடன் பாடுவேன் – பரமசபை
முக்தர்குழாம் கூடுவேன்

அனுபல்லவி

அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்
இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் – பக்தருடன்

சரணங்கள்

1. அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே
அன்பர் என் இன்பர்களும்,
பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்
என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் – பக்தருடன்

2. இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க் – கு
அகமும் ஆண்டவன் அடியே,
சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,
இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே – பக்தருடன்

3. தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்
சேயன் கண் மூடுகையில்,
பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி,
தூயா, திருப்பாதத் தரிசனம் தந்தருள் – பக்தருடன்

Ivare Peruman – இவரே பெருமான்

Ivare Peruman

பல்லவி
இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான் – இவரே பெருமான்

சரணங்கள்

1. கவலைக் கிடங்கொடுத் தறியார் – வேறு
பவவினை யாதுமே தெரியார் – இப்
புவனமீது நமக்குரியார் – இவரே

2. குருடர்களுக் குதவும் விழியாம் – பவக்
கரும இருளை நீக்கும் ஒளியாம் – தெய்வம்
இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் – இவரே

3. பலபிணி தீர்க்கும் பரிகாரி – சொல்லும்
வலமையில் மிக்க விபகாரி – எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி – இவரே

4. அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் – கொடு
மறம்விடு பவர்க்கருள் முத்தன் – இங்கே
இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன் – இவரே

5. அலகை தனை ஜெயித்த வீரன் – பவ
உலகை ரட்சித்த எழிற்பேரன் – விண்
ணுலகு வாழ் தேவ குமாரன் – இவரே

6. பொன்னுலகத் தனில்வாழ் யோகன் – அருள்
துன்ன உலகில் நன்மைத் தேகன் – நம்பால்
தன்னை யளித்த ஓர் தியாகன் – இவரே

Neer Illatha Naalellam – நீ இல்லாத நாளெல்லாம்

Neer Illatha Naalellam
நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா

1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்
உண்மையின் வழியே நீ ஆவாய்
உறவின் பிறப்பே நீ ஆவாய்
உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்

2. எனது ஆற்றலும் நீ ஆவாய்
எனது வலிமையும் நீ ஆவாய்
எனது அரணும் நீ ஆவாய்
எனது கோட்டையும் நீ ஆவாய்

3. எனது நினைவும் நீ ஆவாய்
எனது மொழியும் நீ ஆவாய்
எனது மீட்பும் நீ ஆவாய்
எனது உயிர்ப்பும் நீ ஆவாய்

Neer Illatha Naalellam Naalaguma
Nee illatha vaalvuellam vaalva aguma

1. Uyirin uttrae nee aavai
Unmaiyin valiye nee aavai
Uravin pirape nee aavai
Ulathil magilve nee aavai

2. Yenathu aatralum nee aavai
Yenathu valimaiyum nee aavai
Yenathu aranum nee aavai
Yenathu kottaiyum nee aavai

3. Yenathu ninaivum nee aavai
Yenathu mozhiyum nee aavai
Yenathu meetpum nee aavai
Yenathu uyirupum nee aavai

Elunthar Iraivan – எழுந்தார் இறைவன்

Elunthar Iraivan
எழுந்தார் இறைவன் – ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்

1. சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க – இப்
பூவின் மீதுசபை செழிக்க – எழுந்தார்

2. செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்
நித்திய ஜீவனை அளிக்கத் – தேவ
பக்தர் யாவரும் களிக்க – எழுந்தார்

3. விழுந்தவரைக் கரையேற்றப் – பாவத்
தழுந்து மனுக்குலத்தை மாற்ற – விண்ணுக்
கெழுந்து நாம் அவரையே போற்ற – எழுந்தார்

4. கருதிய காரியம் வாய்க்கத் – தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்
இரு திறத்தாரையும் சேர்க்க – எழுந்தார்

5. ஏதுந் தீவினை செய்யாத் தூயன் – எப்
போதுமே நன்மைபுரி நேயன் – தப்
பாது காத்திடும் நல்லாயன் – எழுந்தார்

Elunthaar Iraivan – Jeyamae Jeyamenavae
Elunthaar Iraivan

Chorus

1. Saavin Payangaraththai Olikkak – Ketta
Aaviyin Vallamaiyai Alikka – Ip
Poovinmeethu Sapai Selikka – Elunthaar

2. Seththavar Meenndumae Pilaikka – Uyar
Niththiya Jeevanai Alikkath – Deva
Pakthar Yaavarum Kalikka — Elunthaar

3. Vilunthavarai Karaiyaetta – Paavath
Thelunthu Manukkulaththai Maatta – Vinnnuk
Kelunthu Naam Avaraiyae Potta – Elunthaar

4. Karuthiya Kaariyam Vaaykkath – Thaeva
Suruthi Molikalellaam Kaakka – Nam
Iru Thiraththaaraiyum Serkka – Elunthaar

5. Yethuthivenai Seiyathuvan – Ep
Pothumae Nanmaipuri Noyan – Thap
Pakathidum Nallayan – Elunthaar

Enge Oduven – எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்

Enge Oduven
எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்
வானத்திற்கோ, நிலவிற்கோ
எங்கே ஓடுவேன்

1. மலைகளே குன்றுகளே
மறைத்துக் கொள்ளுங்களே
நீதிபரர் வருகின்றார்
ஐயோ நான் அதமானேன் – எங்கே ஓடுவேன்

2. என்னிடம் ஓடிவந்தால் பிழைப்பாய்
உந்தன் தஞ்சம் நானே
அழைக்கின்றார் இயேசு ராஜன்
வந்தேன் அடிமை இதோ – எங்கே ஓடுவேன்

ஓடி வந்தேன் இதோ
உம் காயம் என் தஞ்சமே
அடைக்கலம் புகுந்தேன்

Anbin Devan Yesu Unnai Azhaikirar – அன்பின் தேவன் இயேசு

Anbin Devan Yesu Unnai Azhaikirar
அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார்
அவரின் குரலைக் கேட்ட பின்னும் தயக்கமேன்
கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோ
கவலையேன் கலக்கமேன் கர்த்தர் இயேசு அழைக்கிறார்
உன்னை எண்ணி உள்ளம் நொந்து அணைக்க இயேசு துடிக்கிறார்

1. மனிதர்கள் அன்பு மாறலாம்
மறைவாக தீது பேசலாம்
அன்பு காணா இதயமே
அன்பின் தேவனை அண்டிக்கொள்

2. வியாதிகள் தொல்லைகள் தோல்வியோ
வாழ்க்கையில் என்ன ஏக்கமோ
கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ
கலங்காதே – மன்னன் இயேசு பார்

3. வேலை வசதிகள் இல்லையோ
வீட்டினில் வறுமை தொல்லையோ
மரண பயமும் நெருங்குதே
மரணம் வென்ற இயேசு பார்