Song Tags: Pamalai Songs

Agora Kasthi Pattorai – அகோர கஸ்தி பட்டோராய்

Agora Kasthi Pattorai

1. அகோர கஸ்தி பட்டோராய்
வதைந்து வாடி நொந்து,
குரூர ஆணி தைத்தோராய்
தலையைச் சாய்த்துக்கொண்டு,
மரிக்கிறார் மா நிந்தையாய்!
துன்மார்க்கர் சாகும் வண்ணமாய்
மரித்த இவர் யாவர்?

2. சமஸ்தமும் மா வடிவாய்
சிஷ்டித்து ஆண்டுவந்த,
எக்காலமும் விடாமையாய்
விண்ணோரால் துதிபெற்ற
மா தெய்வ மைந்தன் இவரோ?
இவ்வண்ணம் துன்பப்பட்டாரோ
பிதாவின் திவ்விய மைந்தன்?

3. அநாதி ஜோதி நரனாய்
பூலோகத்தில் ஜென்மித்து,
அரூபி ரூபி தயவாய்
என் கோலத்தை எடுத்து,
மெய்யான பலியாய் மாண்டார்
நிறைந்த மீட்புண்டாக்கினார்
என் ரட்சகர், என் நாதர்.

Magilnthu Kalikurungal – மகிழ்ந்து களிகூருங்கள்

Magilnthu Kalikurungal
மகிழ்ந்து களிகூருங்கள்
மகிழ்ந்து களிகூறுங்கள் – 2
இயேசு இராஜன் பிறந்ததினால்
மகிழ்ந்து களிகூறுங்கள்

1. விண்ணுலகம் துறந்து மண்ணுலகம் உதித்து
தம்மைத் தாமே வெறுத்து அவர் நம்மை மீட்க வந்தார்

2. பாவமறியா அவரே ஜீவன் தந்திடவே
நித்திய வாழ்வு நமக்களிக்க இயேசு இராஜன் பிறந்தார்

3. வாழ்ந்து காட்டிய வழியை மகிழ்ந்து பின்பற்றியே
வேறுபலரை அவர் மந்தையில் இணைத்து பலன் அடைவோம்

Malarae Malarae – மலரே மலரே வெள்ளி

Malarae Malarae

மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது .. இம்
மண்ணில் பூத்த மலரே – உயர் விண்ணின் வேந்தர் வரவு

1. வானிலே மந்தாப்பு விண் தூதர் மனதில் சிரிப்பு
உலகில் அமைதி வாழும் மகிழ்ச்சி நாளும் நிலவும்

நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க

2. வாழ்விலே வந்தாலும் என்னைமாற்றி அமைக்க வாருமே
உலகம் உம்மைக் காணும் உவகை கொள்ளும் நாளும்

நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே – 2 நீடூழி காலம் வாழ்க

Malarae Malarae Velli Malarae Pon Manthaarappozhuthu .. Im
Mannil Puuththa Malarae – Uyar Vinnin Vaenthar Varavu

1. Vaanilae Manthaappu Vin Thuuthar Manathil Sirippu
Ulakil Amaithi Vaazhum Makizhssi Naalum Nilavum

Neer Vaalga Nitham Vaalga Vaenthae – 2 Neetuuzhi Kaalam Vaalga

2. Vaazhvilae Vanthaalum Ennaimaarri Amaikka Vaarumae
Ulakam Ummaik Kaanum Uvakai Kollum Naalum

Neer Vaalga Nitham Vaalga Vaenthae – 2 Neetuuzhi Kaalam Vaalga

Mei Bhakathara – மெய் பக்தரே நீர்

Mei Bhakathara
1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,
சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்;
இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,
விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;
கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,
ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார்

2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கே
இம்மானுவேல் தாவீதின் ஊரிலே
பூலோக மீட்பராகப் பிறந்தார்,
எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்
என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே
இராவில் தோன்றி மொழிந்திட்டானே

3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,
ஆனந்தப் பாட்டைப் பாடியும், இசைந்து
விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்
மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,
என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்
தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார்

4. இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு
அற்புத காட்சி காண விரைந்து,
யோசேப்புடன் தாய் மரியாளையும்
முன்னணைமீது தெய்வ சேயையும்
கண்டே, தெய்வன்பை எண்ணிப் போற்றினார்,
ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார்

5. கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம்
உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்;
தம்ஜென்மமுதல் சாவுமட்டுக்கும்
அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்
அன்போடு தியானம் செய்து வருவோம்,
நம் மீட்பர்பின்னே செல்ல நாடுவோம்

6. அப்போது வான சேனைபோல் நாமும்
சங்கீதம் பாடலாம் எக்காலமும்;
இந்தக் கெம்பீர நாள் பிறந்தவர்
அந்நாள் நம்மேல் தம் ஜோதி வீசுவார்;
நம் ராயன் அன்பால் ரட்சிப் படைந்தோம்;
அவரின் நித்திய துதி பாடுவோம்

Piranthar Or Palagan – பிறந்தார் ஓர் பாலகன்

Piranthar Or Palagan
1. பிறந்தார் ஓர் பாலகன்
படைப்பின் கர்த்தாவே;
வந்தார் பாழாம் பூமிக்கு
எத்தேசம் ஆளும் கோவே.

2. ஆடும் மாடும் அருகில்
அவரைக் கண்ணோக்கும்;
ஆண்டவர் என்றறியும்
ஆவோடிருந்த பாலன்

3. பயந்தான் ஏரோதுவும்
பாலன் ராஜன் என்றே;
பசும் பெத்லேம் பாலரை
பதைபதைக்கக் கொன்றே

4. கன்னி பாலா வாழ்க நீர்!
நன்னலமாம் அன்பே!
பண்புடன் தந்தருள்வீர்
விண் வாழ்வில் நித்திய இன்பே

5. ஆதி அந்தம் அவரே
ஆர்ப்பரிப்போம் நாமே
வான் கிழியப் பாடுவோம்
விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே

Devane Naan Umathandaiyil – தேவனே நான் உமதண்டையில்

Devane Naan Umathandaiyil
தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்
மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் – பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! – தேவனே

2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் – தேவனே

3. நித்திரையினின்று விழித்துக் – காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே

4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் – பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் – தேவனே

Devane Naan Umathandaiyil – Innum Nerungich
Servathae En Aaval Poomiyil
Maavaliya Koramaaka Van Siluvai Meethinil Naan
Kovae, Thonga Naeritinum
Aavalaay Ummanntai Servaen

1. Yaakkopaippol, Pokum Paathaiyil – Poluthu Pattu
Iraavil Irul Vanthu Mootida
Thookkaththaal Naan Kallil Saaynthu Thoonginaalum En Kanaavil
Nnokkiyummai Kittich Servaen, Vaakkadangaa Nalla Naathaa! – Devane

2. Paraththukkaerum Patikal Polavae – En Paathai Thontap
Pannnum Aiyaa, Entan Thaevanae,
Kirupaiyaaka Neer Enakkuth Tharuvathellaam Umathanntai
Arumaiyaay Ennaiyalaiththu Anpin Thoothanaakach Seyyum – Devane

3. Niththiraiyinintu Viliththuk – Kaalai Elunthu
Karththaavae, Naan Ummaip Pottuvaen
Iththaraiyil Unthan Veedaay Enthuyark Kal Naattuvaenae
Entan Thunpaththin Valiyaay Innum Ummaik Kittich Servaen – Devane

4. Aananthamaam Settai Viriththup – Paravasamaay
Aakaayaththil Aerip Poyinum
Vaana Manndalang Kadanthu Paranthu Maelae Sentitinum
Makilvutru Kaalaththilum Naan Maruviyummaik Kittich Servaen – Devane

Kel Jenmitha – கேள் ஜென்மித்த ராயர்க்கே

Kel Jenmitha
1. கேள் ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே
அவர் பாவ நாசகர்
சமாதான காரணர்
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர் போல் கெம்பீரித்து
பெத்லேகேமில் கூடுங்கள்
ஜென்ம செய்தி கூறுங்கள்

கேள் ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே

2. வானோர் போற்றும் கிறிஸ்துவே
லோகம் ஆளும் நாதரே
ஏற்ற காலம் தோன்றினீர்
கன்னியிடம் பிறந்தீர்
வாழ்க நர தெய்வமே
அருள் அவதாரமே
நீர் இம்மானுவேல் அன்பாய்
பாரில் வந்தீர் மாந்தனாய்

3. வாழ்க சாந்த பிரபுவே
வாழ்க நீதி சூரியனே
மீட்பராக வந்தவர்
ஒளி ஜீவன் தந்தவர்
மகிமையை வெறுத்து
ஏழைக்கோலம் எடுத்து
சாவை வெல்லப் பிறந்தீர்
மறு ஜென்மம் அளித்தீர்

Kaarirul Velayil – காரிருள் வேளையில் கடுங்குளிர்

Kaarirul Velayil
காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்த மன்னவனே உம்
மாதயவே தயவு

1. விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமல் மானிடனானது
மாதயவே தயவு – காரிருள்

2. விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மானுடரில் பிரியம் மலர்ந்தது உந்தன்
மாதயவே தயவு – காரிருள்

3. விந்தை விதந்தனில் வந்தவனே,
வானவனே, நாங்கள்
தந்தையின் அன்பைக் கண்டதும் உந்தன்
மாதயவே தயவு – காரிருள்

Kaarirul velayil kadung kulir nearathil
Yealai koalamathaai
Paarinil vantha mannavanee um
Maathayavee thayavu

1. Vinnulakil simmaasanathil
Thootharkal paadidave
veetirukkaamal maanidanaanathu
Maathayavea thayavu – Kaarirul

2. Vinnil theavanukkee magimai
Mannil samaathaanam
Maanudaril piriyam malarnthathu unthan
Maathayavea thayavu – Kaarirul

3. Vinthai vithanthanil vanthavanee
Vaanavanee, naangkal
Thanthaiyin anpai kandathum unthan
Maathayavea thayavu – Kaarirul