Song Category: Tamil

Saruva Logathiba Namaskaram – சருவ லோகாதிபா நமஸ்காரம்

Saruva Logathiba Namaskaram
1. சருவ லோகாதிபா, நமஸ்காரம்
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்
தரை, கடல், உயிர்,
வான், சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்

2. திரு அவதாரா, நமஸ்காரம்
ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்
தரணியில் மனுடர்
உயிர் அடைந்தோங்கத்
தருவினில் மாண்டோர் நமஸ்காரம்

3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம்
பரம சற்குருவே, நமஸ்காரம்
அரூபியாய் அடியார்
அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம்

4. முத்தொழிலோனே, நமஸ்காரம்
மூன்றிலொன்றோனே, நமஸ்காரம்
கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,
நித்திய திரியேகா, நமஸ்காரம்

1. Saruva Lokaathipaa, Namaskaaram!
Saruva Sirushtikanae, Namaskaaram!
Tharai, Kadal, Uyir, Vaan
Sakalamum Padaiththa
Thayaapara Pithaavae, Namaskaaram.

2. Thiru Avathaaraa, Namaskaaram!
Jekath Thiratchakanae, Namaskaaram!
Tharanniyil Manudar
Uyir Adainthongath
Tharuvinil Maandor Namaskaaram.

3. Parisuththa Aavi, Namaskaaram!
Parama Sarguruvae, Namaskaaram!
Aroopiyaay Adiyaar
Akaththinil Vasikkum
Ariyasiththae Sathaa Namaskaaram.

4. Muththozhilonae, Namaskaaram!
Moontrilontronae Namaskaaram!
Karththaathi Karththaa, Karunnaasamuththiraa,
Nithya Thiriyaekaa, Namaskaaram

Namathu Yesu Kristhuvin – நமது இயேசு கிறிஸ்துவின்

Namathu Yesu Kristhuvin
1. நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்
நானிலமெங்கும் ஓங்கிடவே
புனிதமான பரிசுத்த வாழ்வை
மனிதராம் எமக்களித்தார்

பல்லவி

தேவ கிருபை எங்கும் பெருக
தேவனை ஸ்தோத்திரிப்போம்
பாவ இருள் அகல
தேவ ஒளி அடைந்தோம்

2. அவரை நோக்கி கூப்பிடும் வேளை
அறிவிப்பாரே அற்புதங்கள்
எனக்கெட்டாத அறிந்திடலாகா
எத்தனையோ பதிலளித்தார் — தேவ

3. பதறிப்போன பாவிகளாக
சிதறி எங்குமே அலைந்தோம்
அவரை நாம் தெரிந்தறியோமே
அவர் நம்மைத் தெரிந்தெடுத்தார் — தேவ

4. பலத்த ஜாதி ஆயிரமாக
படர்ந்து ஓங்கி நாம் வளர
எளிமையும் சிறுமையுமான
எமக்கவர் அருள் புரிவார் — தேவ

5. நமது கால்கள் மான்களைப் போல
நடந்து ஓடிப் பாய்ந்திடவே
உயர் ஸ்தலத்தில் ஏற்றுகின்றாரே
உன்னதமான ஊழியத்தில் — தேவ

6. பரமனேசு வந்திடும் போது
பறந்து நாமும் சென்றிடுவோம்
பரமனோடு நீடூழி வாழும்
பரம பாக்கியம் பெறுவோம் — தேவ

Anbaram Yesuvin – அன்பராம் இயேசுவின்

Anbaram Yesuvin
அன்பராம் இயேசுவின்
அன்பினை எண்ணியே
அளவில்லா துதிகளுடன்
சந்தோஷ கீதங்களால்
எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
பரமனை ஸ்தோத்தரிப்பேன்

1. ஜீவனுள்ளவரை இயேசு எந்தன் மேய்ப்பர்
கவலை எனக்கு இல்லையே
புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீரண்டையும்
என்னை நடத்திச் செல்லுவார்

காலம் மாறினாலும்
பூமி அழிந்தாலும்
இயேசு என்றும் மாறிடார்

எந்தன் நேசரே எந்தன் அடைக்கலமானவர்
போக்கிலும் வரத்திலும் என்னைக் கரம்பற்றி நடத்துவார் – அன்பராம் இயேசுவின்

2. உலர்ந்த எலும்புகளை உயிர்க்கச் செய்தவரே
உமக்கே நிகரே இல்லையே
சிவந்த சமுத்திரத்தை இரண்டாய் பிளக்கச் செய்து
என்னை நடத்திச் செல்லுவீர்

நல்ல தேவனின்
வல்ல வார்த்தைகளால்
எந்தன் வாழ்வு மலரும்

எந்தன் தேவனே எந்தன் பரிகாரி ஆனவர்
புதிய கிருபைகள் அனுதினமும் தருபவர் – அன்பராம் இயேசுவின்

3. வான சேனைகள் சூழ எக்காளச் சத்தம் முழங்க
மேகமீதில் ஒரு நாள்
மாசற்ற ஜோதியாக மகிமை இராஜனாக
மணவாளன் வந்திடுவார்

ஆயத்தமாகிடுவேன் அன்பரை சந்தித்திட
பரிசுத்தர் கூட்டத்தோடு

அந்த நாள் சமீபமே எந்தன் இதயம் பூரிக்குதே
செல்வேன் அன்பரோடு வாழ்வேன் நித்தியமாய் – அன்பராம் இயேசுவின்

Anbaraam yaesuvin
Anbinai enniyae
Alavillaa thudhigaludan
Sandhoasha geedhangalaal
Ennaalumae paadiyae poatriduvaen
Paramanai sthoatharippaen

Jeevanullavarai yaesu endhan maeippar

Kavalai enakku illaiyae

Pullulla idangalilum amarndha thanneerandaiyum

Ennai nadathi selluvaar

Kaalam maarinaalum

Boomi azhindhaalum

Yaesu endrum maaridaar

Endhan naesarae endhan adaikkalamaanavar

Poakkilum varathilum ennai karampatri nadathuvaar

Ularndha elumbugalai uyirkka seidhavarae

Umakae nigarae illaiyae 

Sivandha samuthirathai irandaai pilakka seidhu

Ennai nadathi selluveer

Nalla dhaevanin
Valla vaarthaigalaal

Endhan vaazhvu malarum

Endhan dhaevanae endhan parigaari aanavar

Pudhiya kirubaigal anudhinamum tharubavar

Vaana saenaigal soozha ekkaala satham muzhanga

Maegameedhil oru naal

Maasatra joadhiyaaga magimai raajanaaga 

Manavaalan vandhiduvaar
a
Ayathamaagiduvaen anbarai sandhithida

Parisuthar koottathoadu

Andha naal sameebamae
Endhan idahayam poorikkudhae

Selvaen anbaroadu vaazhvaen nithiyamaai

Azhaikirar Azhaikirar Itho – அழைக்கிறார் அழைக்கிறார்

Azhaikirar Azhaikirar Itho
அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
நீயும் வா! உந்தன் நேசர்
ஆவலாய் அழைக்கிறார் இதோ

1. பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்
கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத காட்சியே
கண்டிடாய் வேண்டிடாய் பாவ பாரம் நீங்கிடும்

2. நோயையும் ஏற்றவர் பேயையும் வென்றவர்
நீதிபரன் உன் நோயை நிச்சயமாய்த் தீர்த்தாரே
நோயுற்ற உன்னையே நேயமாய் அழைக்கிறார்

3. துன்பம் சகித்தவர் துயரடைந்தவர்
இன்னலுற்ற உன்னையே, அண்ணல் ஏசழைக்கிறார்
துன்புறும் நெஞ்சமே துரிதமாய் நீ வாராயோ

4. அந்தக் கேடடைந்தார் அழகற்றுத் தோன்றினார்
சொந்தமாகச் சேர்த்திட இந்தப் பாடடைந்தாரே
நிந்திக்கும் உன்னையும் சந்திப்பார் நீ வாராயோ

5. கல்லறை திறக்க காவலர் நடுங்க
கஸ்திகளடைந்தாரே கட்டுகளறுத்தாரே
உயிர்த்தார் ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே

6. சாந்த சொரூபனே சத்திய வாசனே
வஞ்சமற் வாயனே வந்தணைக்கும் நேயனே
தஞ்சமே தன்னையே தந்துனை அழைக்கிறார்

Valibane Kanikaye – வாலிபனே கன்னிகையே

Valibane Kanikaye
வாலிபனே கன்னிகையே மயங்கி விடாதே!
வாலிபத்தில் சிருஷ்டிகரை மறந்து விடாதே!

1. நோவா கால மக்களெல்லாம் புறக்கணித்தாரே
புரண்டுவந்த வெள்ளத்தாலே அழிந்து விட்டாரே
சோதோமைப்போல் கொமோராவைப்போல் பாவம் செய்யாதே
சுட்டெரிக்கும் அக்கினியால் சாம்பலாகாதே

2. ஏவாளைப்போல் இச்சையிலே வீழ்ந்துவிடாதே
ஏமாற்றும் பிசாசுக்கு இடம் கொடுக்காதே
தீனாளைப் போல் ஊரை சுற்ற ஆசைப்படாதே
தீட்டுப் பட்டு அழிந்திடுவாய் மறந்துவிடாதே

3. சிம்சோனைப் போல் சிற்றின்பத்தில் சீரளியாதே
சிரித்து உன்னை மயக்கும் இந்த உலகை நம்பாதே
கடமையினை மறந்து விட்ட தாவீதை போல
கணப்பொழுதில் பாவத்திலே விழுந்துவிடாதே

4. பேதுருபோல் இயேசுவை நீ மறுதலிக்காதே
தோமாவைப் போல் அவிசுவாசம் அவர்மேல் கொள்ளாதே
கர்த்தரை நீ மறந்து விட்டு காலம் தள்ளாதே
புத்தியில்லா கண்ணிகைப்போல் கதவைத் தட்டாதே

5. வாலிபத்தில் சிருஷ்டிகரை நினைத்திடுவாயே
இல்லையென்றால் இரட்சிப்பின்றி அழிந்திடுவாயே
காலம் இது கடைசி காலம் உணர்ந்திடுவாயே
கர்த்தர் இயேசு வருமுன்னே திரும்பிடுவாயே

Visuvasa Kappal Ondru – விசுவாசக் கப்பல் ஒன்று

Visuvasa Kappal Ondru
விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்
அசைந்தாடி செல்கின்றது – (2)
அக்கரை நோக்கி – (2)

1. பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது
பாரச்சுமையோடு செல்கின்றது
பரபரப்போடே செல்கின்றது
பரமன் வாழும் பரம் நோக்கி
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

2. ஆழம் நிறை கடலில் செல்கின்றது
அலைவந்து மோதியும் செல்கின்றது
ஆர்ப்பரிப்போடே செல்கின்றது
ஆண்டவர் அதற்கு மாலுமியாம்
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

3. நீடிய பொறுமையோடே செல்கின்றது
நீண்ட பயணமாக செல்கின்றது
நிலைப் பலமாக செல்கின்றது
நிரந்தரமான இடத்தைக் காண
ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

Sutham Panna Padatha – சுத்தம் பண்ணப் படாத

Sutham Panna Padatha
சுத்தம் பண்ணப் படாத தேசமே
சுத்திகரிக்க உன்னைத் தருவாயோ?
ஸ்திரப்படாத தேசமே ..
நீதியின் வஸ்திரம் தரிப்பாயோ?

1. பெலனான வயதுள்ள வாலிபரே
தொலைநோக்க கண்களை ஏறெடுங்கள் (2)
எதிர் காலம் கனவாக மறைவதற்குள்
சுடராக இருளுக்குள் ஒளி கொடுங்கள் (2)

2. தேசத்தை ஆளும் பிரபுக்களே
தாழ்மையின் குரலுக்கு செவிகொடுங்கள் (2)
தேவைக்கு அதிகம் இருப்பதெல்லாம்
ஏழைக்கு தானம் செய்திடுங்கள் (2)

3. வேதத்தை சுமக்கும் சீடர்களே
வேண்டாத சுமைகளை விட்டுவிடுங்கள் (2)
பாவத்தை சுமக்கும் பாரதத்தில்
தூய்மைக்கு மாதிரி காட்டிடுங்கள் (2)

Ootra Pada Vendume – ஊற்றப்பட வேண்டுமே

Ootra Pada Vendume

ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே – 2

எண்ணெய் அபிஷேகமே.. என் தலையை நனைக்க
ஆவியில் நிரப்புமே.. பாத்திரம் வழிந்தோடும்
நீச்சல் ஆழம் மூழ்கியே.. நேசர் அன்பில் மகிழ
அக்கினி அபிஷேகம்.. எந்தன் ஆவல் தீர்த்திடும் (…ஊற்றப்பட)

1. தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே – 2 (…எண்ணெய்)

2. ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்
ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் – 2 (…எண்ணெய்)

3. ஒருமனதோடு கூடி வந்துள்ளோம்
தேவ புத்திரர் என முத்திரை போடும் – 2 (…எண்ணெய்)

4. ஜீவ பலியாக எம்மை ஒப்புவிக்கிறோம்
சகல சத்தியத்திலும் எம்மை நடத்தும் – 2 (…எண்ணெய்)

5. ஆவியின் வரங்களை அருள் செய்யும் தேவா
ஆவியின் கனிகள் என்றும் ஈந்திடவே – 2 (…எண்ணெய்)

Oottrappada Vendume Unnathaththin Aavi
Uyirppikka Vendum Emmai Devaa
Munmaariyaaga Andru Pozhinthitta Aaviyai
Pinmaariyaaga Indru Pozhinthidume – 2

Yennai Abishegame.. En Thalaiyai Nanaikka
Aaviyil Nirappume.. Paaththiram Vazhinthodum
Neechchal Aazham Moozhgiye.. Nesar Anbil Magizha
Akkini Abishegam.. Enthan Aaval Theerththidum (…Oottrappada)

1. Deva Mainthan Yesuvai Visuvaasiththom
Bhothikkum Aaviyaale Niraiththidume – 2 (…Oottrappada)

2. Jeba Venduthalile Thariththiruppom
Jegaththile Saatchiyaaga Emmai Niruththum – 2 (…Oottrappada)

3. Orumanathodu Koodi Vanthullom
Deva Puththirar En Muththirai Podum – 2 (…Oottrappada)

4. Jeeva Baliyaaga Emmai Oppuvikkirom
Sagala Saththiyaththilum Emmai Nadaththum – 2 (…Oottrappada)

5. Aaviyin Varangalai Arul Seyyum Devaa
Aaviyin Kanigal Endrum Eenthidave – 2 (…Oottrappada)

Meghangal Naduve – மேகங்கள் நடுவே வழிபிறக்கும்

Meghangal Naduve
1. மேகங்கள் நடுவே வழிபிறக்கும்
பூதங்கள் நடுவே நடந்து போவோம்
தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

வானத்தில் வானத்தில் நடுவானத்தில்
இயேசுவின் கைகளில் நானிருப்பேன்
பரமன் இயேசுவின் புன்னகை முகம்
என் கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்

2. நாற்றிசையினின்றும் கூடிடுவார்
நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
தோத்திர கீதமே தொனித்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

3. கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்
கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்
கர்த்தரின் வருகை நாளின்போது
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

4. திருடன் வருகை போலிருக்கும்
தீவிரம் அவர் நாள் வெகுசமீபம்
காலையோ மாலையோ நள்ளிரவோ
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

Galeeliya Kadaloram – கலிலேயா கடற்கரையோரம்

Galeeliya Kadaloram
கலிலேயா கடற்கரையோரம்
ஓர் மனிதர் நடந்து சென்றார்
அவர்தான் இயேசு இரட்சகர்
உன் பாவத்தைப் போக்கும் உத்தமர்

1.காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள்
தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும்
பெரும் கலக்கங்கள் பிடித்தாலும்
கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது
உன் கவலையை மாற்றிட துடிக்கிறது

நெஞ்சமே நினைத்திடு அவர்
அன்பினை ருசித்திடு

2.நண்பர்கள் பகைத்தாலும் – இந்த
நானிலம் வெறுத்தாலும்
பெற்றோர்கள் மறந்தாலும் உன்
உற்றார்கள் பிரிந்தாலும்
நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் – அவர்
நமையினால் வழி நடத்திடுவார் – நெஞ்சமே

3.ஏன் இந்த வேதனைகள்
என்று ஏங்கிடும் மனிதர்களே
என் இயேசுவின் போதனையை
ஏன் இன்று மறந்தீர்களோ
வேதனை தீர்த்திடும் வேந்தனவர் – மன
பாரத்தை போக்கிடும் தேவனவர் – நெஞ்சமே