Song Category: Tamil

Yehova Yire Neer En – யெகோவாயீரே நீர் என்

Yehova Yire Neer En

யெகோவாயீரே நீர் என் தேவனாம்
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை

ஆராதனை

இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர்

யெகோவா ரஃபா நீர் என் தேவனாம்
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்

நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
நீர் எந்தன் மருத்துவரே

யெகோவா ரூவா நீர் என் தேவனாம்
என் தேவைகள் நீர் அறிவீர்

என் தேவைகள் நீர் அறிவீர்
நீர் எந்தன் நல் மேய்ப்பரே

Salemin Raja – சாலேமின் ராசா

Salemin Raja
1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா
ஸ்வாமி வாருமேன் – இந்த
தாரணி மீதினில் ஆளுகை செய்திட
சடுதி வாருமேன்
2. சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போன
செல்வக் குமாரனே – இந்த
சீயோனின் மாதுகள் தேடித் திரிகின்ற
சேதி கேளீரோ?
3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்
கண் பூத்துப் போகுதே;- நீர்
சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே
4. நங்கை எருசலேம் பட்டினம் உம்மை
நாடித் தேடுதே ; – இந்த
நானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்
தேடிவாடுதே
5. சாட்சியாக சுபவிசேஷம்
தாரணிமேவுதே; – உந்தன்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே

 

Galileya Endra Ooril – கலிலேயா என்ற ஊரில்

Galileya Endra Ooril
கலிலேயா என்ற ஊரில்
இயேசு ஜனங்களைத் தொட்டார்
குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்
இயேசு குணமாக்கினார்
அல்லேலூயா ராஜனுக்கே அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா இயேசுவுக்கே
1. கரங்களைத் தட்டிப் பாடிடுவோம் – (3)
அல்லேலூயா ராஜனுக்கே
2. கரங்களை அசைத்துப் பாடிடுவோம் – (3)
அல்லேலூயா ராஜனுக்கே
3. கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் – (3)
அல்லேலூயா ராஜனுக்கே

 

Yesu Enakku Jeevan Thanthaare – இயேசு எனக்கு ஜீவன்

Yesu Enakku Jeevan Thanthaare

இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே – 4

துதிப்பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்ந்திடுவேன் – 2

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா – 4

1. சமாதானம் தந்தார் இயேசு – 4 (…துதிப்பாடல்)

2. புது வாழ்வு தந்தார் இயேசு – 4 (…துதிப்பாடல்)

3. விடுதலை தந்தார் இயேசு – 4 (…துதிப்பாடல்)

4. அபிஷேகம் தந்தார் இயேசு – 4 (…துதிப்பாடல்)

5. புதுப் பாடல் தந்தார் இயேசு – 4 (…துதிப்பாடல்)

6. வல்லமை தந்தார் இயேசு – 4 (…துதிப்பாடல்)

Yesu Enakku Jeevan Thanthaare – 4

Thuthippaadal Naan Paadi
Yesuvaiye Pottri
Endrendrum Vaazhnthiduven – 2

Alleluyaa Aamen Alleluyaa – 4

1. Samaathaanam Thanthaar Yesu – 4 (…Thuthippaadal)

2. Puthu Vaazhvu Thanthaar Yesu – 4 (…Thuthippaadal)

3. Viduthalai Thanthaar Yesu – 4 (…Thuthippaadal)

4. Abishegam Thanthaar Yesu – 4 (…Thuthippaadal)

5. Puthuppaadal Thanthaar Yesu – 4 (…Thuthippaadal)

6. Vallamai Thanthaar Yesu – 4 (…Thuthippaadal)

Vazhi Sonnavar – வழி சொன்னவர்

Vazhi Sonnavar

வழி சொன்னவர் வழியுமானவர்
வழி சத்தியம் ஜீவனுமாய் வந்தவர்
வார்த்தை என்றவர் வார்த்தையானவர்
உலகினிலே ஒளியாக உதித்தவர் – இவரே

மண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன்
விண்ணோர் போற்றும் தேவாதி தேவன்
சான்றோர் போற்றும் தூயாதி தூயன்
ராஜாதி ராஜனவர் – இயேசு

1. இயேசுவே தெய்வம் – ஒரே ஒரு தெய்வம்
இயேசுவே தேவன் – மெய்யான தேவன்
இயேசுவே தெய்வம் – தேடி வந்த தெய்வம்
இயேசுவே தேவன் – மீட்க வந்த தேவன்
இயேசுவே ராஜா – ராஜாதி ராஜா (2)

2. இயேசுவே இரட்சகர் – உயிர் தந்த இரட்சகர்
இயேசுவே ஆண்டவர் – உயிர்த்தெழுந்த ஆண்டவர்
இயேசுவே கர்த்தனாம் – கர்த்தாதி கர்த்தனாம்
இயேசுவே ராஜனாம் – ராஜாதி ராஜனாம்
இயேசுவே ராஜா – ராஜாதி ராஜா (2)

Athisayangal Seigiravar – அதிசயங்கள் செய்கிறவர்

Athisayangal Seigiravar
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் ஏசு நமக்குள் வருகிறார் (2)

1. தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் – எகிப்தின்
ஜாடி தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்

2. குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் – பிறவி
ஒரு சொல்லாலே புயல் காற்றினையும் அதட்டினார் அதிசயம்

3. பாவியான என்னையுமே மாற்றினார் அதிசயம் – இந்த
ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்

Appa Um Kirubai Galal – அப்பா உம் கிருபைகளால்

Appa Um Kirubai Galal
அப்பா உம் கிருபைகளால் – என்னை
காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் – என்னை
அணைத்துக் கொண்டீரே

1. தாங்கி நடத்தும் கிருபையிது
தாழ்வில் நினைத்த கிருபையிது – 2
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் கிருபையிது – 2

2. வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை – 2
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை – 2

3. கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
கண்ணீரை மாற்றின தேவ கிருபை – 2
தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
வெற்றியை தந்திட்ட தேவ கிருபை – 2

Yesuvai Nambinor Mandathillai – இயேசுவை நம்பினோர்

Yesuvai Nambinor Mandathillai
1. இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
சிங்கத்தின் வாயினின்றும் இரட்சிப்பார்
பங்கம் வராதென்னை ஆதரிப்பார்

நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் காத்துன்னை நடத்துவார்

2. நாசியில் சுவாசமுள்ள மாந்தரை
நம்புவதல்ல தம் ஆலோசனை
கோர பயங்கரக் காற்றடித்தும்
கன்மலை மேல் கட்டும் வீடு நிற்கும்

3. விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
வறட்சி மிகுந்த காலத்திலும்
பக்தன் வலதுபாரிசத்திலே
கர்த்தர் தாம் நிற்பதால் அசைந்திடான்

4. இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே
ஏகிப் பறந்தோடும் பக்தரோடே
சேர்ந்தென்றும் வாழ்ந்திடும் ஐக்கியத்திலே
ஜெய கெம்பீரமே உனக்குண்டே

5. ஏழை உன் ஆத்மா பாதாளத்தில்
என்றும் அழிந்திடவிட்டு விடார்
தம் சமூகம் நித்ய பேரின்பமே
சம்பூர்ண ஆனந்தம் பொங்கிடுமே

6. அங்கே அனேக வாசஸ் தலங்கள்
அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே
நேர்த்தியான இடங்களில் உந்தன்
நித்திய பங்கு கிடைத்திடுமே

Enge Oduven – எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்

Enge Oduven
எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்
வானத்திற்கோ, நிலவிற்கோ
எங்கே ஓடுவேன்

1. மலைகளே குன்றுகளே
மறைத்துக் கொள்ளுங்களே
நீதிபரர் வருகின்றார்
ஐயோ நான் அதமானேன் – எங்கே ஓடுவேன்

2. என்னிடம் ஓடிவந்தால் பிழைப்பாய்
உந்தன் தஞ்சம் நானே
அழைக்கின்றார் இயேசு ராஜன்
வந்தேன் அடிமை இதோ – எங்கே ஓடுவேன்

ஓடி வந்தேன் இதோ
உம் காயம் என் தஞ்சமே
அடைக்கலம் புகுந்தேன்

Entha Nilayil Naan Irunthalum – எந்த நிலையில் நீ இருந்தாலும்

Entha Nilayil Naan Irunthalum
எந்த நிலையில் நீ இருந்தாலும் – உன்னை
வெறுக்காதவர் இயேசு ஒருவரே – என் தேவன் நடுவரே

1.நோயாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
உன் நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள் – எந்த

2.கடனாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்
கடனதையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள் – எந்த

3.ஏழையாக நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன்
ஏழ்மையையே சொல்லி சொல்லி ஏங்க வைப்பார்கள் – எந்த

4.பட்டப் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள்
உன்னை பட்ட மரம் என்று சொல்லி பரிகசிப்பார்கள் – எந்த

5.அனாதையாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
அன்பை உனக்குத் தருவேன் என்று அலைய வைப்பார்கள் – எந்த