Song Category: Tamil

Antha Naal Vanthidum – அந்த நாள் வந்திடும்

Antha Naal Vanthidum
அந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும்
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும்

1. இந்த நாள் வாழ்பவர் பரிசுத்தத்தில் தேறட்டும்
எக்காளம் எடுத்து எச்சரிக்கை கூறட்டும் – (2)
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் – அந்த நாள்

2. இந்த நாள் வாழ்பவர் திறப்பின் வாசல் நிற்கட்டும்
பாவத்தில் ஊழ்பவர் ஊழ்கிடாமல் தடுக்கட்டும் – (2)
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் – அந்த நாள்

3. இந்த நாள் வாழ்பவர் திறந்த வாசல் காணட்டும்
இராக்காலம் வருமுன்னர் சுதந்தரித்துக் கொள்ளட்டும் – (2)
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் – அந்த நாள்

4. இந்த நாள் வாழ்பவர் ஆத்மாதாயம் செய்யட்டும்
அந்த நாள் வந்ததும் நட்சத்திரமாய் ஜொலிக்கட்டும் – (2)
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும் – அந்த நாள்

Athisayamaana Oli Maya Naadaam – அதிசயமான ஒளிமய

Athisayamaana Oli Maya Naadaam
அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம் – நான் வாஞ்சிக்கும் நாடாம் – என் (2)

1. பாவம் இல்லாத நாடு
ஒரு சாபமும் காணா நாடு
நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
உன்னதத்தில் ஓசன்னா – அல்லேலூயா – அதி

2. வித விதக் கொள்கையில்லை
பலப் பிரிவுள்ள பலகை இல்லை
ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
எங்குமே அன்புமயம் – அன்புள்ளோர் செல்லும் – அதி

3. பிரச்சனை ஏதும் இல்லை
வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை
மொழி நிறம் ஜாதி பற்று உடையோர்
எவருமே அங்கு இல்லை – அன்பே மொழி – அதி

4. இயேசுவின் இரத்தத்தினால்
பாவம் கழுவினால் செல்லலாமே
இத்தனைப் பெரிய சிலாக்கியம் இழப்போர்
இப்பூமியில் எவரும் வேண்டாம் – இன்றே வாரீர் – அதி

Anbin Uruvam Aandavar – அன்பின் உருவம்

Anbin Uruvam Aandavar
1. அன்பின் உருவம் ஆண்டவர்
அழைக்கிறார் நீ அருகில் வா
தொய்ந்துபோன உன் வாழ்வினை
கேட்கிறார் நீ அருகில் வா

ஓடிவா நீ ஓடிவா
கண்கலங்கியே நீயே வா
தூரமாய் நிற்கும் உன்னைத்தான்
அழைக்கிறார் நீ அருகில் வா – 2

2. மனிதர் பலரை நம்பினாய்
பலமுறை தடுமாறினாய்
உற்றார் பெற்றார் அன்பெல்லாம்
கனவு போன்று அகலுமே – ஓடிவா

3. நண்பர் பலரும் இருப்பினும்
நாடும் அன்பைப் பெற்றாயோ
செல்வம் எல்லாம் மாய்கையே
உலகம் கானல் நீராமே – ஓடிவா

4. ஒருமுறை அன்பை ருசித்துமே
விழுந்துபோன நீ எழும்பிவா
பலமுறை துரோகம் செய்ததால்
இயேசுவின் கண்ணீர் துடைக்கவா – ஓடிவா

5. இன்னும் நொந்து போவானேன்
இன்றே அருகில் ஓடிவா
உள்ளம் குமுறும் உன்னையே
தள்ளேன் என்றார் ஓடிவா – ஓடிவா

Anaithu Samayathu Meipporul Yesuvae – அனைத்து சமயத்து

Anaithu Samayathu Meipporul Yesuvae
அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே
வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே
மெய்ப்பொருள் இயேசுவே…

உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும்
அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும் புலனாகும்
மெய்ப்பொருள் இயேசுவே…

1. நோன்பு, நேர்ச்சை பல பிரயாணம் செய்துமே
பாவத்தின் கூர்மையை வெல்ல முடியவில்லை
சோதனை நேரத்தில் உடல் உள்ளம் கறைப்பட
துக்கம் நிறைந்திட வாழ்வெல்லாம் சோக மயம்
நிம்மதி எங்கே? விடுதலை எங்கே?
என்றிடும் வேளையில் கல்வாரி கண்ணில் பட
மெய்ப்பொருள் இயேசுவே…

2. பாவமும் சாபமும் துரத்திடும் வேளையில்
கல்வாரி சிலுவையின் காட்சியில் மூழ்கிட
பலியாடாம் இயேசுவின் இரத்தத்தில் என் பாவம்
மன்னிக்கப்பட்டது, நம்பிக்கைப் பிறந்தது
சோதனை வேளையில் இயேசுவின் துணை கண்டேன்
பரலோக பாதையில் இணையற்ற இன்பம் பெற்றேன்
மெய்ப்பொருள் இயேசுவே…

3. காலமும் கடந்திடும் சீலமும் குறைந்திடும்
மனிதனின் வாழ்வு ஓர் மாபெரும் மாய்கையே
கல்வி, செல்வம், புகழ், பதவி ஆசைகள் பல
மரணம் வரும்போது மறைந்து ஓடிப் போகும்
உன் பாவமோ தூய்மையோ உன்னைத் துரத்திடும்
புதிய மனம் பெற சிலுவை வரை வந்து
மெய்ப்பொருள் இயேசுவே…

Intheeyar Yaar – இந்தியர் யார்

Intheeyar Yaar
இந்தியர் யார்? இந்தியர் யார்?
இந்தியர் யார்? இந்தியர் யார்? – (2)

1. ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்
போராட்டம், வன்முறைக்கு உட்படாதவர்
தேசத்தின் வளர்ச்சிகளை கெடுக்காதவர்
அரசாங்க சட்டங்களை மீறாதவர்
அவரே உண்மை இந்தியர்கள்
உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்?

2. பலவந்தம் செய்து மதம் மாற்றமாட்டார்
ஏமாற்றி கொள்கைகளை விற்கமாட்டார்
பிறரின் உரிமைகளை தடுக்கமாட்டார்
தேசத்தின் நல் எண்ணம் ஓங்கச் செய்வார்
அவரே உண்மை இந்தியர்கள்
உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்?

3. தேசத்தின் உடைமைகளை களவுசெய்யார்
கருப்பு பணங்களை ஏற்கமாட்டார்
கொள்ளை அடித்து குவிக்கமாட்டார்
வரிகளில் வஞ்சம் செய்யமாட்டார்
அவரே உண்மை இந்தியர்கள்
உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்?

4. குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்வார்
குறிப்பிட்ட கடமையில் தவறமாட்டார்
லஞ்சம் எதுவும் வாங்கமாட்டார்
சிபாரிசு, செல்வாக்கு நோக்கமாட்டார்
அவரே உண்மை இந்தியர்கள்
உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்?

5. சுத்தம் சுகாதாரம் பாதுகாப்பார்
சாலை விதிகளை கடைப்பிடிப்பார்
ஒளித்தும் மறைத்தும் ஒன்றும் செய்யமாட்டார்
உண்மை பிரஜையாக செயல்படுவார்
அவரே உண்மை இந்தியர்கள்
உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) – இந்தியர் யார்?

6. ஏழைகள், அகதிகள் நலம் தேடுவார்
தான தர்மங்களில் பங்கெடுப்பார்
விலங்குகள், பறவைகள் பாதுகாப்பார்
தன்னைப்போல் பிறருக்கும் அன்பே செய்வார்
அவரே உண்மை இந்தியர்கள்!
உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! – (2) இந்தியர் யார்?

Vaazhga Vaazhga Bharatha Desam – வாழ்க வாழ்க பாரத

Vaazhga Vaazhga Bharatha Desam
வாழ்க வாழ்க பாரத தேசம்
வாழ்க வாழ்க பாரத தேசம் – (2)

1. கட்சி கொடிகள் பல பல வகையாம்
தேசக் கொடியை காக்கவே அவையாம் – (2)
பாரத தேசம் சுதந்தர தேசம்
எத்தனை சலுகை! எத்தனை உரிமை!

வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

2. நாவின் மொழிகள் பல பல உண்டு
உள்ளத்தில் அனைவரும் இந்தியரல்லோ – (2)
அன்பெனும் மொழியில் அனைவரும் ஒன்றே
ஒற்றுமை, ஐக்கியம் உயர்விற்கு நன்றே

வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

3. நீரோ, பயிரோ நமதென வேண்டாம்
அனைத்து இந்தியர் சமமென வேண்டும் – (2)
ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்போம்
விட்டு நாம் கொடுப்போம், விரைந்து வளருவோம்

வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

4. உழவர், தொழிலாளர், வீரர், ஆசிரியர்
நாட்டின் நான்கு தூண்கள் என்றறிவோம் – (2)
அவர்களின் வாழ்வு அனைவரின் வாழ்வு
சிறப்பும் செழிப்பும் கண்களால் காண்போம்

வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

5. லஞ்சம், வரி ஏய்ப்பு, வேலை நிறுத்தம்
வன்முறை அனைத்தும் அகற்றியே வாழ்வோம் – (2)
கடத்தல் தொழிலில்லை, போதை பொருளில்லை
என்றொரு நாள்வர தீர்மானம் எடுப்போம்

வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

6. ஜாதி, மதம் என்ற சுவர்களை தகர்ப்போம்
மதமல்ல, மனிதனே முக்கியம் அறிவோம் – (2)
சிறுவர், இளைஞர் எதிர்காலம் காப்போம்
அன்பெனும் கயிற்றில் தாய்க்கொடி காண்போம்

வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

7. அனைவர்க்கும் சம அன்பு அருளும் பிதாவே
அனைத்திலும் தாய் பூமி செழித்திடச் செய்யும் – (2)
அதற்கு எங்கள் பங்கை செய்திடச் செய்யும்
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே

வாழ்க வாழ்க பாரத தேசம் – 2

Naam Aaradhikka Vaeroru – நாம் ஆராதிக்க வேறொரு தெய்வம்

Naam Aaradhikka Vaeroru Deivam illai நாம் ஆராதிக்க வேறொரு தெய்வம்
Naan Ummaiyae Aaradhippaen Yesuvae (2)
Naan Aaradhikkum Deivam Ennai Nesikkum Deivam
Naan Aaradhikkum Deivam Ennai Visaarikkum Deivam
Naan Aaradhikkum Deivam EnnaiVanaindhidum Deivam
Naan Aaradhikkum Deivam Ennai Uyarthidum Deivam
Naam Aaradhikka Vaeroru Deivam illai
Naan Ummaiyae Aaradhippaen Yesuvae (2)

Iyarkkayin Mel Adhikaaram Ullavar
Iraiyaadhae Endru Kattalai Koduththavar (2)
Kaattraiyum Kadalaiyum Adakka Vallavar (2)
Kadinamaanadhendru Ondrumilladhavar
Naam Thuthithida Vaeroru Deivam illai
Naan Ummaiyae Thuthikindraen Yesuvae (2)

Manidhargale mel mana vurukkam kondavar
Marithorai Yezhuppi Arputham Seithavar (2)
Maaradha Anbinai Thandha Mannavar (2)
Maandhargal Paninthida Endrum Thagundhavar
Naan Paninthida Vaeroru Deivam illai
Naan Ummaiyae Panigindraen Yesuvae (2)

Voozhiyathil Abishegam Thandhavar
Kirubaigal Thandhu Uyarthivaithavar (2)
Parisutha Vallamai Peruga seidhavar (2)
Aaviyin Varangalaal indrum niraippavar
Naan Uyarthida Vaeroru Deivam illai
Naan Ummaiyae Uyarthuvaen Yesuvae (2)

Naan Paninthida Vaeroru Deivam illai
Naan Ummaiyae Panigindraen Yesuvae

Naam Thuthithida Vaeroru Deivam illai
Naan Ummaiyae Thuthikindraen Yesuvae

Naam Aaradhikka Vaeroru Deivam illai
Naan Ummaiyae Aaradhippaen Yesuvae (4)

Ummai Pola En Yesuvae – உம்மை போல இயேசுவே

Ummai Pola En Yesuvae உம்மை போல இயேசுவே
Ummai Pola en Nesarae
Vaanilum Indha Poovilum
Boomiyin Keel Thanneerilum
Yesuvae Umakkinai Yedhum Illai..
Vaanilum Indha Poovilum
Boomiyin Keel Thanneerilum
Yesuvae Umakkinai Yedhum Illai..

Yesuvae En Jeevanae
Yesuvae En Belanae
Yesuvae En Aandavar Neerae (2)

BGM

Ummai Pola En Yesuvae
Ummai Pola en Nesarae
Anbukkarangalaal Anaiththida
Udhadugallal Muththamida
Yesuvae Umakkinai Yedhum Illai.. (2)

Yesuvae En Naayaga
Yesuvae En Nambikkai
Yesuvae En Nangooram Neerae (2)

Anbukkarangalaal Anaiththida
Udhadugallal Muththamida
Yesuvae Umakkinai Yedhum Illai. (2)

Yesuvae En Alangaaram
Yesuvae En Aishvaryam
Yesuvae En Edhirkaalam Neeram (2)

Yesuvae En Jeevanae
Yesuvae En Belanae
Yesuvae En Aandavar Neerae

Yesuvae En Naayaga
Yesuvae En Nambikkai
Yesuvae En Nangooram Neerae

Aaradhanai Seiyum Neram – ஆராதனை செய்யும் நேரம்

Aaradhanai Seiyum Neram ஆராதனை செய்யும் நேரம்
Appavin Sandhosha Neram (2)
Aarathanai… Aaradhanai..Aarathanai… Aaradhanai.(2)
Aaradhanai Seiyum Neram
Appavin Sandhosha Neram (2)

BGM

Kangalin Viruppamae Aaradhanai..Aaradhanai…
Belaththin Mukkiyamae Aaradhanai..Aaradhanai… (2)
Alangara Magilchiyae Aaradhanai
Aaththuma Vanjaiyae Aaradhanai (2)
Aarathanai… Aaradhanai..Aarathanai… Aaradhanai.(2)

Aaradhanai Seiyum Neram
Appavin Sandhosha Neram (2)

BGM

Aadhara Dhurugamae Aaradhanai Aaradhanai
Adaikkala Pattanamae Aaradhanai Aaradhanai (2)
Aaruyir Thozhane Aaradhanai
Anugoola Thunaiyae Aaradhanai (2)
Aarathanai… Aaradhanai..Aarathanai… Aaradhanai.(2)

Aaradhanai Seiyum Neram
Appavin Sandhosha Neram (2)

BGM

Nesathin Utchidhamae Aaradhanai Aaradhanai
Paasathin Parvadhamae Aaradhanai Aaradhanai (2)
Urukkaththin Sigaramae Aaradhanai
Aaseervadha Mazhaiyae Aaradhanai (2)
Aarathanai… Aaradhanai..Aarathanai… Aaradhanai.(2)

Aaradhanai Seiyum Neram
Appavin Sandhosha Neram (2)
Aarathanai… Aaradhanai..Aarathanai… Aaradhanai.(2)
Aaradhanai Seiyum Neram
Appavin Sandhosha Neram (2)

O Devanuke Magimai – ஓ தேவனுக்கு மகிமை

O Devanuke Magimai
ஓ! தேவனுக்கு மகிமை!
தூக்கியெடுத்தார்

என்னை தூக்கியெடுத்தார் இயேசு

தம் கரத்தை நீட்டி இரட்சித்தாரே
ஓ! தேவனுக்கு மகிமை!

நான் இயேசுவை நேசிக்கிறேன்
மேன்மேலும் நேசிக்கிறேன்
அக்கரையில் நான் நின்று அவரை
என்றென்றும் வாழ்த்துவேன்

Oh! Glory to God He has lifted me up
He has lifted me up I know
He stretched out His hand
And He lifted me up
And that’s why I love Him so
I love Him more and more (2)
And when I stand upon the other shore
I’ll praise Him more and more