O Devanuke Magimai
ஓ! தேவனுக்கு மகிமை!
தூக்கியெடுத்தார்
என்னை தூக்கியெடுத்தார் இயேசு
தம் கரத்தை நீட்டி இரட்சித்தாரே
ஓ! தேவனுக்கு மகிமை!
நான் இயேசுவை நேசிக்கிறேன்
மேன்மேலும் நேசிக்கிறேன்
அக்கரையில் நான் நின்று அவரை
என்றென்றும் வாழ்த்துவேன்
Oh! Glory to God He has lifted me up
He has lifted me up I know
He stretched out His hand
And He lifted me up
And that’s why I love Him so
I love Him more and more (2)
And when I stand upon the other shore
I’ll praise Him more and more
Athikalayil Palanai Thedi
அதிகாலையில் பாலனை தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாட்டையும் குடில் நாடி
தேவ பாலனை பணிந்திட வாரீர்
வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்
1. அன்னைமா மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க — அதி
2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த மன்னவன் முன்னிலை நின்றே
தம் கந்தை குளிர்ந்திட போற்றும்
நல்ல காட்சியை கண்டிட வாரீர் — அதி
Ponnana Yesuvai Punniya
பொன்னான இயேசுவை
புண்ணிய நல் நேசரை
கொண்டு செல்வோம் பூலோகம் எங்கும்
அவர் ஒன்றே வழி என்றே கூருவோம்
தேவனே நம்மை நடத்திடுவார்
தேவை அறிந்து பயன்படுத்திடுவார்
1. அவர் எந்நாளும் நம்மோடு
இருப்பதினால் அலைகள் புயல்கள்
நம்மை அசைப்பதில்லை அஞ்சாமல் செல்வோம்
வஞ்சகனை வெல்வோம்
அரணான கோட்டைகளை பிடித்திடுவோம்
2. எலியா எலி சாமூலம் அற்புதம் செய்தார்
இந்த நாளில் உங்கள் மூலம் நிச்சயம் செய்வார்
எத்தனையோ நோய்கள்
அத்தனையும் போக்கும்
இயேசுவின் இரத்தத்தாலே ஜெயம் பெறுவோம்
3. காலமும் கடலலையும் காத்திருக்காது – இந்த
காலத்திலே உலகை கலக்கிடுவோம்
கல்லான நெஞ்சம் கரைந்திட செய்யும்
கனிவான கர்த்தர் பணி செய்திடுவோம்
Neer Indri Vazhvethu Iraiva
நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும்
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்
1. பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்
இயேசுவே நீர் பேசும் ஒருவார்த்தை போதும்
ஓராயிரம் ஜீவன் உயிர்வாழுமே
உம் வார்த்தையில் உண்டு அற்புதமே
2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள்ளும் ஜீவனை தந்தவர் நீர்
உமையன்றி அணுவேதும் அசையாதையா
உம் துணையின்றி உயிர்வாழ முடியாதையா
3. எத்தனை நன்மைகள் செய்தீரையா
அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேனையா
அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்
ஆயிரம் ஆண்டுகள் போதாதையா
Neerindri Vaazhvaedhu Iraivaa
Um Ninaivindri Magizhvaedhu Dhaevaa
Ulagathil Nooraandu Naan Vaazhndha Poadhum
Um Illathil Vaazhum Oru Naalae Poadhum