Vanandira Vallvu
வனாந்திர வாழ்வு அது வசந்தமாகும்
பாழான உன் வாழ்வு அது பயிர்நிலமாகும்-2
மாற்றுவார் இயேசு மாற்றுவார்
உன் வாழ்வை மாற்றுவார்
தேற்றுவார் இயேசு தேற்றுவார்
உன்னை ஆற்றித் தேற்றுவார் – 2
1. அன்று ஆகாரைக் கண்டவர்
இன்று உன்னையும் காண்கிறார்
தாகத்தை தீர்த்தவர் – உன்
ஏக்கத்தை தீர்ப்பாரே – 2
2. யாபேசின் ஜெபம் கேட்டவர்
இன்று உன் ஜெபம் கேட்பாரே
துக்கமெல்லாமே
சந்தோஷமாய் மாறுமே – 2
3. அன்று அன்னாளை நினைத்தவர்
இன்று உன்னையும் நினைப்பாரே
புலம்பல்கள் எல்லாமே
ஆனந்தக் களிப்பாய் மாறுமே – 2
Peruga Panuven Enru
பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்
மிகவும் திரளாய் பெருகச் செய்திடுவார்
வலப்புறத்திலும் இடப்புறத்திலும்
இடங்கொண்டு நீ பெருகுவாய்
Puviaalum Mannavan
புவி ஆளும் மன்னவன்
புல் மேடையில் தவழ்கிறார்
பார் மீட்டிடும் கதிரவன்
கந்தை துணிகளில் தவழ்கிறார்
வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள்
கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள்
1. நமக்கொரு பாலகன் உலகில் வந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால)
கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும்
ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் – புவி
2. ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவே
யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி)
அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதே
ஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே – புவி
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்
பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – சீர் இயேசு
ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு – சீர் இயேசு
மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு – சீர் இயேசு
பத்து லட்சணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு – சீர் இயேசு
Seer Yesu Naathanukku Jeyamangalam Aathi
Thiriyeka Naathanukku Subamangalam