வழிநடத்தும் வல்ல தேவன்
உண்டு மகனே(ளே)
உன் வாழ்நாளெல்லாம் நடத்திடுவார்
கலங்கிடாதே
1. கல்லானாலும் முள்ளானாலும்
கர்த்தர் இயேசு நடத்திடுவார்
காடானாலும் மேடானாலும்
கர்த்தர் இயேசு சுமந்திடுவார்
அவர் கரம்பற்றிப் பிடிப்பாய்
அவரையே பின்பற்றி செல்வாய் – வழி
2. வியாதி வியாகுலமோ?
பசியோ நிர்வாணமோ?
நிந்தைகளோ? அவமானமோ?
நாயகன் இயேசு நடத்திடுவார்
அவர் கரம் பற்றிப் பிடிப்பாய்
அவரையே பின்பற்றி செல்வாய் – வழி
கன்மலையின் குரல் இதுவே
ஆண்டவர் இயேசுவின்
அருள்மொழி கூறிடுவேன் – நற்செய்தி
1. இயேசென்று சொன்னாலே
யார் என்று கேட்டிடும்-2
எண்ணற்ற மாந்தர்க்கு
நற்செய்தி யார் சொல்லுவார்?
என்னை நான் தருகின்றேன்
ஏற்றுக்கொள்ள மாதூயார் ஆ… ஆ…
பார்புகழ் போற்றும் எங்கள் இயேசு
தேவன் அன்பினையே – நற்செய்தி
2. அறிந்தும் அறியாமல்
தெரிந்தும் தெரியாமல்-2
வாழும் மாந்தர்க்கு
சத்தியத்தை யார் சொல்வார்
உன்னையே தந்திடுவாய்
எழும்பி நீ புறப்படுவாய்
பார் புகழ் போற்றும் இயேசுநாதன்
அன்பை என்றும் சொல் – நற்செய்தி
சிறகொடித்த பறவைப்போல
சிறையினிலே வாடினேன் நான்
விடுதலை நான் எப்போது
கலங்கியே நான் துடித்தேன் நான் – சிறகொடிந்த
1. உன் தகப்பன் மரித்திடுவான்
உன் மனைவி தவித்திடுவாள் (2)
உன் பிள்ளைகள் அநாதையாவார் – உன்
குடும்பம் சிதைந்துவிடும்
என்று சொல்லி சாத்தானே
குலைத்திடுவான் உன் அமைதியினை – சிறகொடிந்த
2. குழப்பங்களும் திகில் பயமும்
சூழ்ந்திடவே திகைத்தேன் நான்
என் தேவனே என் இயேசுவே
ஏன் என்னைக் கைவிட்டீர்
கதறினேன் நான் புலம்பினேன் நான்
ஆற்றிடவோ ஒருவரில்லை – சிறகொடிந்த
ஏன் ஏன் ஏன் இந்த சோதனை?
ஏன் ஏன் ஏன் இந்த வேதனை?
என்று கலங்கி தவித்து நிற்கும்
சூழ்நிலையோ?
எபிநேசர் இயேசு உன்னை தாங்கிடுவார்
உன் துக்கமெல்லாம் மாற்றிடுவார்
திகைத்திடுவார் (ய்)
உன் கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கலங்கிடாதே (2) – ஏன் ஏன் (2)
1. உலகத்திலே உபத்திரவம் வந்திடலாம்
ஆனாலும் நீ பலங்கொண்டு திடனாயிரு (2)
இந்த உலகத்தையே ஜெயித்துவிட்டார் சிலுவையிலே
அந்த நித்திய வாழ்வை உனக்காக தருவதற்காய் (2) – ஏன் ஏன் (2)
2. இமைப்பொழுது அவர் உன்னை கைவிடலாம்
ஆனாலும் நீ மனந்தளர்ந்து சோர்ந்திடாதே
உருக்கமான இரக்கத்தினால் இரங்கிடுவார்
தம் அரவணைக்கும் கரங்களினால் சேர்த்துக் கொள்வார் – ஏன் ஏன் (2)
Ullankaiel Varainthavare
உள்ளங்கையில் வரைந்தவரே
கண்மனிபோல் கப்பவரே
தாயின்கருவில் என்னை கன்டவரே
பேரைச் சொல்லி என்னை அழைத்தவரே } – 2
நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமே
பகலும் எந்தன் தாகம் தீத்திடுமே
1. இஸ்ரவேலரோடு சென்ற மேகஸ்தம்பமே
மகிமையின் மேகமாய் என்னோடு வருமே
இஸ்ரவேலரோடு சென்ற மேகசம்பமே
மகிமையின் மேகமாய் என்னோடு வருமே
கன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரே
கன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரே
சிலுவையில் என்னை கண்டவரே
சிலுவையில் என்னை கண்டவரே
நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமே
பகலும் எந்தன் தாகம் தீத்திடுமே – உள்ளங்கையில்