Song Category: Tamil

Vazhi Nadathum Valla Devan Undu – வழிநடத்தும் வல்ல தேவன் உண்டு

Vazhi Nadathum Valla Devan

வழிநடத்தும் வல்ல தேவன்
உண்டு மகனே(ளே)
உன் வாழ்நாளெல்லாம் நடத்திடுவார்
கலங்கிடாதே

1. கல்லானாலும் முள்ளானாலும்
கர்த்தர் இயேசு நடத்திடுவார்
காடானாலும் மேடானாலும்
கர்த்தர் இயேசு சுமந்திடுவார்
அவர் கரம்பற்றிப் பிடிப்பாய்
அவரையே பின்பற்றி செல்வாய் – வழி

2. வியாதி வியாகுலமோ?
பசியோ நிர்வாணமோ?
நிந்தைகளோ? அவமானமோ?
நாயகன் இயேசு நடத்திடுவார்
அவர் கரம் பற்றிப் பிடிப்பாய்
அவரையே பின்பற்றி செல்வாய் – வழி

Ummaiyandri Yaarundu – உம்மையன்றி யாருண்டு

Ummaiyandri Yaarundu

உம்மையன்றி யாருண்டு
உலகினில் எனக்கு
உயிருள்ள இயேசுவே
உதவிட வாருமே – உம்மையன்றி

உலகமும் மாயை ஐயா
உற்றாரும் மாயை ஐயா
செல்வமும் மாயை ஐயா
செல்வாக்கும் மாயை ஐயா-2

நீரே என் கோட்டையே
நீரே என் துருகமே
நீரே என் தஞ்சமே
நீரே என் கன்மலையே – உம்மையன்றி

பணமும், பதவிகளும்
படிப்பும், பட்டங்களும்
பதவியும், பந்தங்களும்
நிலையற்ற தல்லவே-2

நீரே என் கோட்டையே
நீரே என் துருகமே
நீரே என் தஞ்சமே
நீரே என் கன்மலை – உம்மையன்றி

Anbe Thooya Anbe – அன்பே தூய அன்பே

Anbe Thooya Anbe

அன்பே தூய அன்பே
உந்தன் மறுபெயர் இயேசுவோ
உந்தன் நீளம், உந்தன் அகலம்
உந்தன் ஆழம், உந்தன் உயரம்
அதை அளவிட முடியாதய்யா
அதை இயேசுவே தருவாரய்யா – அன்பே

1. உலகம் உன்னை வெறுத்திட்டாலும்
உற்றார் உன்னை பகைத்திட்டாலும்
அவர் அன்பென்றும் வெறுக்காதையா
அந்த அன்பொன்றே அழியாதைய்யா – அன்பே

2. சகலமும் அன்பு சகிக்கும்
சகலமும் அந்த அன்பு தாங்கும்
அந்த அன்பொன்றே மேலானது
அந்த அன்பையே நாடிடுவோம் (வாய்) – அன்பே

Thuthippen Thuthippen – துதிப்பேன் துதிப்பேன்

Thuthippen Thuthippen

துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டிருப்பேன்
போற்றுவேன் புகழுவேன்
வாழ்த்துவேன் வணங்குவேன்
வல்லவர் இயேசுவே – துதிப்பேன்

1. சூரியனே சந்திரனே
வான்வெளி நட்சத்திரமே
இயேசுவை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அவர் அன்பு என்றும் மாறாதது – துதிப்பேன்

2. மலைகளே குன்றுகளே
மலர்களே மச்சங்களே
இயேசுவைத் துதியுங்கள்
அற்புதர் அற்புதரே அவர்
அதிசயமானவரே – துதிப்பேன்

3. வாலிபரே கன்னியரே
பிள்ளைகளே பெரியவரே
இயேசுவைத் துதியுங்கள்
கர்த்தாதி கர்த்தர் இவரே – இவர்
ராஜாதி ராஜன் தானே – துதிப்பேன்

Kanmalaiyin Kural Ithuve – கன்மலையின் குரல் இதுவே

Kanmalaiyin Kural Ithuve

கன்மலையின் குரல் இதுவே
ஆண்டவர் இயேசுவின்
அருள்மொழி கூறிடுவேன் – நற்செய்தி

1. இயேசென்று சொன்னாலே
யார் என்று கேட்டிடும்-2
எண்ணற்ற மாந்தர்க்கு
நற்செய்தி யார் சொல்லுவார்?
என்னை நான் தருகின்றேன்
ஏற்றுக்கொள்ள மாதூயார் ஆ… ஆ…
பார்புகழ் போற்றும் எங்கள் இயேசு
தேவன் அன்பினையே – நற்செய்தி

2. அறிந்தும் அறியாமல்
தெரிந்தும் தெரியாமல்-2
வாழும் மாந்தர்க்கு
சத்தியத்தை யார் சொல்வார்
உன்னையே தந்திடுவாய்
எழும்பி நீ புறப்படுவாய்
பார் புகழ் போற்றும் இயேசுநாதன்
அன்பை என்றும் சொல் – நற்செய்தி

Neethiman Selithu Vaalvan – நீதிமான் செழித்து வாழ்வான்

Neethiman Selithu Vaalvan
நீதிமான் செழித்து வாழ்வான்
நீதிமான் பனையைப் போல
செழித்து வாழ்வான்
லீபனோனின் கேதுருவாய்
வளருவான் (2)

1. தீமையை வெறுத்திடுங்கள்
நன்மையே செய்திடுங்கள்
கர்த்தர் நம்மோடிருப்பார் – நம்மை
செழிப்படைய செய்வார் – நீதி

2. கலங்கிடாதிருங்கள்
கண்ணீர் விடாதிருங்கள்
கர்த்தரின் சாட்சிகளாய் – நம்மை
செழிப்படைய செய்வார் – நீதி

3. சிறுமைப்பட்ட நாட்கள்
துன்பத்தின் வருடங்கள்
சரியாய் மகிழ்ச்சியாக்குவார் – நம்மை
செழிப்படையச் செய்வார் – நீதி

4. ஆகாரத்தை தண்ணீரில் போடு
அநேக நாள் பிறகு அதின் பலனை
களிகூர்ந்து காணச் செய்வார் – நம்மை
செழிப்படையச் செய்வார் – நீதி

Karthar Periyavar – கர்த்தர் பெரியவர்

Karthar Periyavar

கர்த்தர் பெரியவர் – நம் அப்பா பெரியவர்
தேவன் பெரியவர் நம் இயேசு பெரியவர்

1. அன்னாளைப் போல கர்த்தரிடம்
இருதயத்தை ஊற்றிவிடுங்கள்
அன்னாளை நினைத்த பெரியவர்
நம்மையும் நினைத்திடுவார்

2. சாலமோனைப் போல கர்த்தரிடம்
ஞானத்தை(யே) கேளுங்கள்
அந்த ஞானத்தை தந்த பெரியவர்
நமக்கு நிச்சமாய் தந்திடுவார்

3. எலியாவைப் போல கர்த்தருக்காய்
பெருங்காரியம் செய்திடுங்கள் – அன்று
எலிசாவை நடத்திய தேவனே
இன்று நம்மையும் நடத்துவார்

Siragoditha Paravai – சிறகொடித்த பறவை

Siragoditha Paravai

சிறகொடித்த பறவைப்போல
சிறையினிலே வாடினேன் நான்
விடுதலை நான் எப்போது
கலங்கியே நான் துடித்தேன் நான் – சிறகொடிந்த

1. உன் தகப்பன் மரித்திடுவான்
உன் மனைவி தவித்திடுவாள் (2)
உன் பிள்ளைகள் அநாதையாவார் – உன்
குடும்பம் சிதைந்துவிடும்
என்று சொல்லி சாத்தானே
குலைத்திடுவான் உன் அமைதியினை – சிறகொடிந்த

2. குழப்பங்களும் திகில் பயமும்
சூழ்ந்திடவே திகைத்தேன் நான்
என் தேவனே என் இயேசுவே
ஏன் என்னைக் கைவிட்டீர்
கதறினேன் நான் புலம்பினேன் நான்
ஆற்றிடவோ ஒருவரில்லை – சிறகொடிந்த

Yen Intha Sothanai – ஏன் இந்த சோதனை?

Yen Intha Sothanai

ஏன் ஏன் ஏன் இந்த சோதனை?
ஏன் ஏன் ஏன் இந்த வேதனை?
என்று கலங்கி தவித்து நிற்கும்
சூழ்நிலையோ?
எபிநேசர் இயேசு உன்னை தாங்கிடுவார்
உன் துக்கமெல்லாம் மாற்றிடுவார்
திகைத்திடுவார் (ய்)
உன் கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கலங்கிடாதே (2) – ஏன் ஏன் (2)

1. உலகத்திலே உபத்திரவம் வந்திடலாம்
ஆனாலும் நீ பலங்கொண்டு திடனாயிரு (2)
இந்த உலகத்தையே ஜெயித்துவிட்டார் சிலுவையிலே
அந்த நித்திய வாழ்வை உனக்காக தருவதற்காய் (2) – ஏன் ஏன் (2)

2. இமைப்பொழுது அவர் உன்னை கைவிடலாம்
ஆனாலும் நீ மனந்தளர்ந்து சோர்ந்திடாதே
உருக்கமான இரக்கத்தினால் இரங்கிடுவார்
தம் அரவணைக்கும் கரங்களினால் சேர்த்துக் கொள்வார் – ஏன் ஏன் (2)

Ullankaiel Varainthavare – உள்ளங்கையில் வரைந்தவரே

Ullankaiel Varainthavare
உள்ளங்கையில் வரைந்தவரே
கண்மனிபோல் கப்பவரே
தாயின்கருவில் என்னை கன்டவரே
பேரைச் சொல்லி என்னை அழைத்தவரே } – 2

நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமே
பகலும் எந்தன் தாகம் தீத்திடுமே

1. இஸ்ரவேலரோடு சென்ற மேகஸ்தம்பமே
மகிமையின் மேகமாய் என்னோடு வருமே
இஸ்ரவேலரோடு சென்ற மேகசம்பமே
மகிமையின் மேகமாய் என்னோடு வருமே

கன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரே
கன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரே
சிலுவையில் என்னை கண்டவரே
சிலுவையில் என்னை கண்டவரே

நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமே
பகலும் எந்தன் தாகம் தீத்திடுமே – உள்ளங்கையில்

2. உம்மாலே சேனைக்குள் பாய்ந்துடுவேன்
உம்மாலே மதிலையும் நான் தாண்டிடுவேன்
உம்மாலே சேனைக்குள் பாய்ந்துடுவேன்
உம்மாலே மதிலையும் நான் தாண்டிடுவேன்
அழுகையின் பள்ளத்தாக்கில் உருவ நடந்திடுவேன்
அழுகையின் பள்ளத்தாக்கில் உருவ நடந்திடுவேன்

பெலனான எந்தன் கர்த்தாவே
பெலனான எந்தன் கர்த்தாவே

நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
நீர் என்னோடு வராவிட்டால்
நான் எங்கே செல்லுவேன்
ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமே
பகலும் எந்தன் தாகம் தீத்திடுமே – உள்ளங்கையில்

Ullankaiel Varainthavare
Ullangaiyil Varainthavarae
Kanmanipol Kappavarae
Thaayinkaruvil Ennai Kandavarae
Peiyarai Solli Ennai Alaithavarae } – 2

Neer Ennodu Varaavittal
Naan Engae Selluvaen
Neer Ennodu Varaavittal
Naan Engae Selluvaen
Jeeva Natheiyaai Ennil Paayinthidumae
Pakalum Enthan Thaakam Theethidumae

1. Isravaelarodu Senta Megasthambamae
Makinamayin Megamaai Ennodu Varumae
Isravaelarodu Senta Megasthambamae
Makinamayin Megamaai Ennodu Varumae

Kanmalai Pilanthu Thaakam Theertha Nesarae
Kanmalai Pilanthu Thaakam Theertha Nesarae
Siluvaiyil Ennai Kanndavarae
Siluvaiyil Ennai Kanndavarae

Neer Ennodu Varaavittal
Naan Engae Selluvaen
Neer Ennodu Varaavittal
Naan Engae Selluvaen
Jeeva Natheeiyaai Ennil Paaynthidumae
Pakalum Enthan Thaakam Theerthidumae – Ullangaiyil

2. Ummaalae Senaikul Paainthuduvaen
Ummaalae Mathilaiyum Naan Thaanndiduvaen
Ummaalae Senaikul Paainthuduvaen
Ummaalae Mathilaiyum Naan Thaanndiduvaen
Alukaiyin Pallathaakil Uruva Nadanthiduvaen
Alukaiyin Pallathaakil Uruva Nadanthiduvaen

Pelanaana Enthan Karththaavae
Pelanaana Enthan Karththaavae

Neer Ennodu Varaavittal
Naan Engae Selluvaen
Neer Ennodu Varaavittal
Naan Engae Selluvaen
Jeeva Natheeyaay Ennil Paaynthidumae
Pakalum Enthan Thaakam Theeththidumae – Ullangaiyil