Kirubaiyeinal Iratchithire – கிருபையினால் இரட்சித்தீரே

Kirubaiyeinal Iratchithire
கிருபையினால் இரட்சித்தீரே இயேசய்யா உம்
கிருபையை பாடுகிறோம் இயேசய்யா
கிருபை கிருபை கிருபை தேவ கிருபை
கிருபை கிருபை கிருபை தேவ கிருபை

1. பாவியான என்னை மீட்ட கிருபை
பரமன் என்னைப் பாடவைத்த கிருபை – 2

2. தாழ்விலிருந்து தூக்கியெடுத்த கிருபை
தயவுடனே அணைத்துக்கொண்ட கிருபை – 2

3. ஒன்றுமில்லா என்னை நினைத்த கிருபை
உருவாக்கி உயர்த்தின கிருபை – 2

4. தகுதியில்லா என்னை நேசித்த கிருபை
தகுதியான ஊழியம் தந்த கிருபை – 2

5. நான் நிற்பதும் நடப்பதும் உம் கிருபை
நான் நிர்மூலமாகாதிருப்பதும் கிருபை – 2

Jeevan Thanthu Anbu Kurnthu – ஜீவன் தந்து அன்பு கூர்ந்த

Jeevan Thanthu Anbu Kurnthu
ஜீவன் தந்து அன்பு கூர்ந்த தேவா என்
ஜீவனுள்ள நாள் வரை நன்றி – 2
இயேசுவே நன்றி – 4

1 . இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர்
இரட்சிப்பால் அலங்கரித்தீர் – 2
உம்பிள்ளையாய் மாற்றினீர்
உம்மோடு வைத்துக்கொண்டீர் – 2

2 . தேடிவந்த தெய்வம் நீரே – என்னை
தேற்றி நடத்துகிறீர் – 2
என்னைக் காக்கும் தெய்வம் நீரே
எனக்காக யாவையும் செய்வீர் – 2

3 . ஊழியம் செய்ய என்னை இன்னும்
உருவாக்கி மகிழ்கின்றீர் – 2
ஒருபோதும் கைவிட மாட்டீர்
ஒருநாளும் விலகிட மாட்டீர் – 2

4 . ஆவியின் அபிஷேகத்தால்
நிரப்பி நடத்துகிறீர் – 2
வாக்குத்தத்தம் செய்தவரே
வாக்கு மாறா வல்ல நேசரே – 2

Arathanai Thuthi Arathanai – ஆராதனை துதி ஆராதனை

Arathanai Thuthi Arathanai
ஆராதனை துதி ஆராதனை
ஆயுள் முழுவதும் ஆராதனை – 2
விடுதலை நாயகனே ஆராதனை
வெற்றி தருபவரே ஆராதனை – 2

1. கோலியாத்தை உந்தன் நாமத்தில்
முறியடிப்போம் அல்லேலூயா
நம்ம இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு
எங்கள் இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு

2. எரிகோ கோட்டை உந்தன் நாமத்தில்
தகர்த்திடுவோம் அல்லேலூயா
நம்ம இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு
எங்கள் இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு

3. சிறைக் கதவுகள் உந்தன் நாமத்தில்
திறந்தது அல்லேலூயா
நம்ம இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு
எங்கள் இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு

4. பெலவானை உந்தன் நாமத்தில்
முந்தி கட்டிடுவோம் அல்லேலூயா
நம்ம இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு
எங்கள் இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு

Karthar Periyavar Thuthiku – கர்த்தர் பெரியவர் துதிக்கு

Karthar Periyavar Thuthiku
கர்த்தர் பெரியவர் துதிக்குப் பாத்திரர்-2
கர்த்தர் என்றென்றும் நம்முடைய தேவன்-2
மரணபரியந்தம் நடத்துவார் நம்மை -2
கை விடார் – 4
1. அனுதினம் போஷித்து நடத்துவார்
அன்றாட தேவைகளைச் சந்திப்பார்-2

2. கரம்பிடித்து நம்மை நடத்துவார்
கன்மலைமேல் நம்மை நிறுத்துவார்-2

3. வழுவாமல் நம்மை காத்திடுவார் சொன்ன
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றுவார்- 2

4. நீதீயின் பாதையில் நடத்துவார்
நிழல்போல நம் வாழ்வில் தொடருவார்-2

Aabiragaamai Aasirvathitha – ஆபிரகாமை ஆசீர்வதித்த

Aabiragaamai Aasirvathitha
ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே

1. செல்வி மணமகள் – XXXXXம்
செல்வன் மணமகன் – YYYYYம் -ஆ…
என்றும் ஆசி பெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே
இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
இன்னிசை யெழுப்பி இங்கிதமாய் இனி
இணைந்து வாழவே!

2. கண்ணின் மணிபோல் கணவனும்
இல்லத்தின் விளக்கெனக் காரிகையும் – ஆ…
என்றும் ஆசிப்பெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
இன்னிசை எழப்பி இங்கிதமாயென்றும்
இணைந்து வாழவே (2)

3. அன்பும் அறனும் அங்கு ஓங்குமெனின்
பண்பும் பயனும் உண்டாமே ஆ… ஆ…
இன்பமாக எந்நாளும் அங்ஙனமென்றும் வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
என்றுமிதே இன்பம் கொண்டிவர் வாழவே
நற்புகழடைந்து நண்பருடன் சுற்றம்
நயந்து வாழவே இணைந்து வாழவே

Vanandira Vallvu – வனாந்திர வாழ்வு அது

Vanandira Vallvu
வனாந்திர வாழ்வு அது வசந்தமாகும்
பாழான உன் வாழ்வு அது பயிர்நிலமாகும்-2
மாற்றுவார் இயேசு மாற்றுவார்
உன் வாழ்வை மாற்றுவார்
தேற்றுவார் இயேசு தேற்றுவார்
உன்னை ஆற்றித் தேற்றுவார் – 2

1. அன்று ஆகாரைக் கண்டவர்
இன்று உன்னையும் காண்கிறார்
தாகத்தை தீர்த்தவர் – உன்
ஏக்கத்தை தீர்ப்பாரே – 2

2. யாபேசின் ஜெபம் கேட்டவர்
இன்று உன் ஜெபம் கேட்பாரே
துக்கமெல்லாமே
சந்தோஷமாய் மாறுமே – 2

3. அன்று அன்னாளை நினைத்தவர்
இன்று உன்னையும் நினைப்பாரே
புலம்பல்கள் எல்லாமே
ஆனந்தக் களிப்பாய் மாறுமே – 2

4. ஆடுகள் மேய்த்த தாவீதை
அரசனாய் மாற்றினீர்
உயர்த்தி வைப்பவர்
கனப்படுத்தி மகிழ்வாரே

Nandri Solli Paduven Nathan – நன்றி சொல்லி பாடுவேன்

Nandri Solli Paduven Nathan

நன்றி சொல்லி பாடுவேன்
நாதன் இயேசுவின் நாமத்தையே
நன்றியால் என் உள்ளம் நிறைந்தே
நாதன் இயேசுவைப் போற்றிடுவேன்

நல்லவரே வல்லவரே
நன்மைகள் என் வாழ்வில் செய்பவரே

1. கடந்த நாட்கள் முழுவதும் என்னை
கண்ணின் மணி போல் காத்தாரே
கரத்தைப் பிடித்துக் கைவிடாமல்
கனிவாய் என்னை நடத்தினாரே

2. எரிகோ போன்ற எதிர்ப்புகள் எனக்கு
எதிராய் வந்து எழும்பினாலும்
சேனையின் கர்த்தர் என் முன்னே
செல்கிறார் என்று பயப்படேனே

3. துன்பங்கள் எந்தன் வாழ்வினிலே
சூழ்ந்து என்னை நெருக்கினாலும்
கன்மலை தேவன் என்னோடு இருக்க
கவலையில்லை என் வாழ்விலே

4. மேகங்கள் மீது மன்னவன் இயேசு
வேகம் வருவார் ஆனந்தமே
கண்ணீர் துடைந்து பலனைக் கொடுக்க
கர்த்தாதி கர்த்தர் வருகின்றாரே

Peruga Panuven Enru – பெருகப்பண்ணுவேன் என்று

Peruga Panuven Enru
பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்
மிகவும் திரளாய் பெருகச் செய்திடுவார்
வலப்புறத்திலும் இடப்புறத்திலும்
இடங்கொண்டு நீ பெருகுவாய்

ஆபிரகாமை பெருகச் செய்தவர்
உன்னையும் திராளாய் பெருகச் செய்திடுவார்

நீ மடிந்து போவதில்லை
நீ குறைந்து போவதில்லை

1. ஆத்துமாக்களை ஆயிரமாயிரமாய்
சபைகளில் திரளாய் பெருகச் செய்திடுவார்

2. நிச்சயமாய் உன்னை ஆசீர்வதித்து
பெருகவே பெருகச் செய்திடுவார்

3. மனிதரை ஜனங்களை மிருகஜீவங்களை
கர்ப்பத்தின் கனியை பெருகச் செய்திடுவார்

Puviaalum Mannavan – புவி ஆளும் மன்னவன்

Puviaalum Mannavan
புவி ஆளும் மன்னவன்
புல் மேடையில் தவழ்கிறார்
பார் மீட்டிடும் கதிரவன்
கந்தை துணிகளில் தவழ்கிறார்

வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள்
கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள்

1. நமக்கொரு பாலகன் உலகில் வந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால)
கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும்
ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் – புவி

2. ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவே
யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி)
அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதே
ஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே – புவி

Potri Paadukindren – போற்றி பாடுகின்றேன்

Potri Paadukindren

போற்றி பாடுகின்றேன் நான் – தேவா
உந்தன் நாமத்தை – தேவா
உந்தன் நாமமே உயர்ந்த நாமமே

மகிமை செலுத்துகிறேன் – தேவா
உந்தன் நாமத்தை – தேவா
உந்தன் நாமமே உயர்ந்த நாமமே

Potri Paadugindraen Naan… Deva
Undhan Naamathi… Deva
Undhan Naamamae Uyarndha Naamamae
Magimai Seluthugiraen Deva
Undhan Naamathai Deva
Undhan Naamamae Uyarndha Naamamae