Manavalan Yesu Varapogirar – மணவாளன் இயேசு வரப்போகிறார்

Manavalan Yesu Varapogirar
மணவாளன் இயேசு வரப்போகிறார்
மணவாட்டி சபையே நீ ஆயத்தப்படு
ஆயத்தப்படு , ஆயத்தப்படு
மணவாட்டி சபையே நீ ஆயத்தப்படு – 2

1. இனி காலம் செல்லாது
இனியும் தாமதம் ஏன்
மெய்யாக இயேசு வரப்போகிறார்
மெய்வாழ்வு உனக்கவர் தருகிறார் – 2

2. நீ ஆயத்தமாயிருந்தால் – நாம்
அவரோடு சென்றிடலாம்
ஒரு நொடிப் பொழுதினிலே – நாம்
மறுரூபமாகிடுவோம் – 2

3. தேவ நியாயத்தீர்ப்பு முதலில்
சபையிலே தான் தொடங்கும்
பரிசுத்த வாழ்வு தினம் வாழ்ந்தால்
பரலோகம் சென்றிடலாம் – 2

Nirambi Valiyum Pathiramaai – நிரம்பி வழியும் பாத்திரமாய்

Nirambi Valiyum Pathiramaai
நிரம்பி வழியும் பாத்திரமாய்
என்னை மாற்றும் – 4
நிரப்பும் தேவா உமது ஆவியால்
நிரப்பும் தேவா உமது வல்லமையால்

1. ஜீவத்தண்ணீரை ஊற்றிடும் என்
தாகத்தை நீரே தீர்த்திடும் – 2

2. மகிமையால் என்னை நிரப்பிடும்
மறுரூபமாக்கி நடத்திடும் – 2

3. அபிஷேகத்தால் நிரப்பிடும்
அக்கினியாய் என்னை மாற்றிடும் – 2

4. வரங்களை நீர் தந்திடும்
வல்லமையாய் ஊழியம் செய்யணும் – 2

Yesuve Ummai Pola – இயேசுவே உம்மைப் போல

Yesuve Ummai Pola
இயேசுவே உம்மைப் போல
நல்ல தெய்வம் இல்லையே
இயேசுவே உம்மைப் போல
வல்ல தெய்வம் இல்லையே – 2

1. உம்மைப் போல் என்னைக் காத்திட ஒருவரில்லை
உம்மைப் போல் என்னை தாங்கிட யாருமில்லை
நீர்தான் என் துணையாளரே
நீர்தான் என் மணவாளரே – 2

2. உம்மைப் போல் என்னை நடத்திட ஒருவரில்லை
உம்மைப் போல் என்னைத் தேற்றிட யாருமில்லை
நீர்தான் என் நல்மேய்ப்பரே
நீர்தான் என் எஜமானரே – 2

3. உம்மைப் போல் என்னை நேசிக்க ஒருவரில்லை
உம்மைப் போல் என்னை அணைத்திட யாருமில்லை
நீர்தான் என் நல்நேசரே
நீர்தான் என் நல்நண்பரே – 2

Orundrum Illai Naan – ஒன்றுமில்லை நான்

Orundrum Illai Naan
ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை
என்னில் ஏதுமில்லை
ஏனோ என்னைத்தேடி வந்தீர்
உம் அன்பு பெரியது

1. பாவத்தில் மூழ்கியிருந்தேன்
சாபத்தில் வாழ்ந்து வந்தேன் – 2
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே – 2

2. ஒன்றுக்கும் உதவாதென்னை
உருவாக்கி உயர்த்துகிறீர் – 2
அன்பே என்றீர் மகனே என்றீர்
ஆவியை ஊற்றிவிட்டீர் – 2

3. உம் அன்பை சொல்லிடவே
அழைத்தீரே உம் சேவைக்கு – 2
அனுதினம் நினைத்து ஆகாரம் தந்து
அடைக்கலமானீரைய்யா – 2

Kirubaiyeinal Iratchithire – கிருபையினால் இரட்சித்தீரே

Kirubaiyeinal Iratchithire
கிருபையினால் இரட்சித்தீரே இயேசய்யா உம்
கிருபையை பாடுகிறோம் இயேசய்யா
கிருபை கிருபை கிருபை தேவ கிருபை
கிருபை கிருபை கிருபை தேவ கிருபை

1. பாவியான என்னை மீட்ட கிருபை
பரமன் என்னைப் பாடவைத்த கிருபை – 2

2. தாழ்விலிருந்து தூக்கியெடுத்த கிருபை
தயவுடனே அணைத்துக்கொண்ட கிருபை – 2

3. ஒன்றுமில்லா என்னை நினைத்த கிருபை
உருவாக்கி உயர்த்தின கிருபை – 2

4. தகுதியில்லா என்னை நேசித்த கிருபை
தகுதியான ஊழியம் தந்த கிருபை – 2

5. நான் நிற்பதும் நடப்பதும் உம் கிருபை
நான் நிர்மூலமாகாதிருப்பதும் கிருபை – 2

Jeevan Thanthu Anbu Kurnthu – ஜீவன் தந்து அன்பு கூர்ந்த

Jeevan Thanthu Anbu Kurnthu
ஜீவன் தந்து அன்பு கூர்ந்த தேவா என்
ஜீவனுள்ள நாள் வரை நன்றி – 2
இயேசுவே நன்றி – 4

1 . இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர்
இரட்சிப்பால் அலங்கரித்தீர் – 2
உம்பிள்ளையாய் மாற்றினீர்
உம்மோடு வைத்துக்கொண்டீர் – 2

2 . தேடிவந்த தெய்வம் நீரே – என்னை
தேற்றி நடத்துகிறீர் – 2
என்னைக் காக்கும் தெய்வம் நீரே
எனக்காக யாவையும் செய்வீர் – 2

3 . ஊழியம் செய்ய என்னை இன்னும்
உருவாக்கி மகிழ்கின்றீர் – 2
ஒருபோதும் கைவிட மாட்டீர்
ஒருநாளும் விலகிட மாட்டீர் – 2

4 . ஆவியின் அபிஷேகத்தால்
நிரப்பி நடத்துகிறீர் – 2
வாக்குத்தத்தம் செய்தவரே
வாக்கு மாறா வல்ல நேசரே – 2

Arathanai Thuthi Arathanai – ஆராதனை துதி ஆராதனை

Arathanai Thuthi Arathanai
ஆராதனை துதி ஆராதனை
ஆயுள் முழுவதும் ஆராதனை – 2
விடுதலை நாயகனே ஆராதனை
வெற்றி தருபவரே ஆராதனை – 2

1. கோலியாத்தை உந்தன் நாமத்தில்
முறியடிப்போம் அல்லேலூயா
நம்ம இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு
எங்கள் இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு

2. எரிகோ கோட்டை உந்தன் நாமத்தில்
தகர்த்திடுவோம் அல்லேலூயா
நம்ம இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு
எங்கள் இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு

3. சிறைக் கதவுகள் உந்தன் நாமத்தில்
திறந்தது அல்லேலூயா
நம்ம இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு
எங்கள் இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு

4. பெலவானை உந்தன் நாமத்தில்
முந்தி கட்டிடுவோம் அல்லேலூயா
நம்ம இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு
எங்கள் இயேசுவின் நாமத்திலே
எந்நாளும் வெற்றி உண்டு

Karthar Periyavar Thuthiku – கர்த்தர் பெரியவர் துதிக்கு

Karthar Periyavar Thuthiku
கர்த்தர் பெரியவர் துதிக்குப் பாத்திரர்-2
கர்த்தர் என்றென்றும் நம்முடைய தேவன்-2
மரணபரியந்தம் நடத்துவார் நம்மை -2
கை விடார் – 4
1. அனுதினம் போஷித்து நடத்துவார்
அன்றாட தேவைகளைச் சந்திப்பார்-2

2. கரம்பிடித்து நம்மை நடத்துவார்
கன்மலைமேல் நம்மை நிறுத்துவார்-2

3. வழுவாமல் நம்மை காத்திடுவார் சொன்ன
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றுவார்- 2

4. நீதீயின் பாதையில் நடத்துவார்
நிழல்போல நம் வாழ்வில் தொடருவார்-2

Aabiragaamai Aasirvathitha – ஆபிரகாமை ஆசீர்வதித்த

Aabiragaamai Aasirvathitha
ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே

1. செல்வி மணமகள் – XXXXXம்
செல்வன் மணமகன் – YYYYYம் -ஆ…
என்றும் ஆசி பெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே
இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
இன்னிசை யெழுப்பி இங்கிதமாய் இனி
இணைந்து வாழவே!

2. கண்ணின் மணிபோல் கணவனும்
இல்லத்தின் விளக்கெனக் காரிகையும் – ஆ…
என்றும் ஆசிப்பெற்று இனிது வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்
இன்னிசை எழப்பி இங்கிதமாயென்றும்
இணைந்து வாழவே (2)

3. அன்பும் அறனும் அங்கு ஓங்குமெனின்
பண்பும் பயனும் உண்டாமே ஆ… ஆ…
இன்பமாக எந்நாளும் அங்ஙனமென்றும் வாழவே
வாழவே! வாழவே!! வாழவே!!!
என்றுமிதே இன்பம் கொண்டிவர் வாழவே
நற்புகழடைந்து நண்பருடன் சுற்றம்
நயந்து வாழவே இணைந்து வாழவே

Vanandira Vallvu – வனாந்திர வாழ்வு அது

Vanandira Vallvu
வனாந்திர வாழ்வு அது வசந்தமாகும்
பாழான உன் வாழ்வு அது பயிர்நிலமாகும்-2
மாற்றுவார் இயேசு மாற்றுவார்
உன் வாழ்வை மாற்றுவார்
தேற்றுவார் இயேசு தேற்றுவார்
உன்னை ஆற்றித் தேற்றுவார் – 2

1. அன்று ஆகாரைக் கண்டவர்
இன்று உன்னையும் காண்கிறார்
தாகத்தை தீர்த்தவர் – உன்
ஏக்கத்தை தீர்ப்பாரே – 2

2. யாபேசின் ஜெபம் கேட்டவர்
இன்று உன் ஜெபம் கேட்பாரே
துக்கமெல்லாமே
சந்தோஷமாய் மாறுமே – 2

3. அன்று அன்னாளை நினைத்தவர்
இன்று உன்னையும் நினைப்பாரே
புலம்பல்கள் எல்லாமே
ஆனந்தக் களிப்பாய் மாறுமே – 2

4. ஆடுகள் மேய்த்த தாவீதை
அரசனாய் மாற்றினீர்
உயர்த்தி வைப்பவர்
கனப்படுத்தி மகிழ்வாரே