Song Tags: Theiveega Geethangal

Sathiyamullavarai – சத்தியமுள்ளவரை நான்

Sathiyamullavarai
சத்தியமுள்ளவரை நான் ஆராதிப்பேன்
நித்தியமானவரை நான் ஆராதிப்பேன்
சஞ்சலமும் தவிப்பும் என்னை விட்டு ஓடி போனதே
நித்திய மகிழ்ச்சி எந்தன் தலை மேலே வந்ததே

மகிழுவேன் நான் மகிழுவேன்
கர்த்தருக்குள் அனுதினமும் மகிழுவேன்
புகழுவேன் நான் புகழுவேன்
இயேசுவை அனுதினமும் புகழுவேன்

என்னால தாங்க முடியல
என்னால நடக்க முடியல
என்ற நிலைமை எனக்கு
இப்போ இல்ல இல்ல – காரணம்
கர்த்தர் என்னை ஏந்திகொண்டார்
கர்த்தர் என்னை சுமந்துகொண்டார்
கர்த்தர் என்னை தாங்கிகொண்டார்
கர்த்தர் என்னை தப்புவித்தார்

மகிழுவேன் நான் மகிழுவேன்
கர்த்தருக்குள் அனுதினமும் மகிழுவேன்
புகழுவேன் நான் புகழுவேன்
இயேசுவை அனுதினமும் புகழுவேன்

என்னால எதுவும் முடியல
என்னால ஒன்னும் முடியல
என்ற நிலைமை எனக்கு
இப்போ இல்ல இல்ல – காரணம்
என்னை பெலப்படுத்துகிற
இயேசு கிறிஸ்துவினால்
எல்லாமே செய்து முடிக்க
எனக்கவர் பெலன் கொடுத்தார்

மகிழுவேன் நான் மகிழுவேன்
கர்த்தருக்குள் அனுதினமும் மகிழுவேன்
புகழுவேன் நான் புகழுவேன்
இயேசுவை அனுதினமும் புகழுவேன்

என்னால கடக்க முடியல
என்னால தாண்ட முடியல
என்ற நிலைமை எனக்கு
இப்போ இல்ல இல்ல – காரணம்
கர்த்தர் என்னை தோளில் வைத்தார்
மலைகளை தாண்ட வைத்தார்
மான் கால்கள் போல என்னை
வேகமாய் ஓட வைத்தார்

மகிழுவேன் நான் மகிழுவேன்
கர்த்தருக்குள் அனுதினமும் மகிழுவேன்
புகழுவேன் நான் புகழுவேன்
இயேசுவை அனுதினமும் புகழுவேன்

Yesuvai Pol Oru – இயேசுவை போல் ஒரு

Yesuvai Pol Oru
இயேசுவை போல் ஒரு தெய்வத்தை நான் என்றும்
கண்டது இல்லையே இல்லையே

அற்புதம் செய்பவர் அதிசயம் காண்பிப்பார்
ஆலோசனை தந்து ஆச்சரியமாக்குவார்

உபத்திரவம் நீக்குவார் கதறலைக் கேட்பார்
பதிலை தந்து பரவசமாக்குவார்

வழியை காண்பித்தார் வாழ வைத்தார்
வாழ்வுக்கு தேவையான எல்லாமே தந்தார்

கைவிட மாட்டார் விலகிட மாட்டார்
மரணம் வரையில் கூடவே இருப்பார்
மரணத்திற்கு பின்னே அவரோடு வைப்பார்

சிலுவை சுமந்தவர் பாடுகள் ஏற்றவர்
எனக்காக மரித்து உயிரோடு எழுந்தவர்

Inthu Devanudaiya Pramanam – இது தேவனுடைய பிரமாணம்

Devanudaiya Pramanam
இது தேவனுடைய பிரமாணம்
உன்னை அதிசயங்கள் பார்க்க வைக்கும்
இது தேவனுடைய பிரமாணம்
உன்னை ஆச்சரியப்படுத்திவிடும்

1. தள்ளப்பட்ட கல்லே
மூலைக்கு தலைக்கல்லாம்
தள்ளப்பட்ட நீயும்
மூலைக்கு தலைக்கல்லே

இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

2. பாவங்களை தேவனிடம்
அறிக்கை செய்துவிட்டால்
இயேசு கிறிஸ்து இரத்தம்
உன்னை கழுவி சுத்தமாக்கும்

இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

3. எந்த இடம் ஆனாலும்
கர்த்தரை நீ உயர்த்தினால்
அந்த இடத்தில் வந்து
உன்னை கர்த்தர் ஆசீர்வதிப்பார்

இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

4. அள்ளி தூவும் விதையை
நீ கண்ணீரோடு விதைத்தால்
அறுவடை நாள் வந்துவிடும்
நீ கெம்பீரத்தோடு அறுப்பாய்

இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

5. கர்த்தர் மேலே உந்தன்
பாரத்தை வைத்தால்
நீதிமானின் காலை
தள்ளாட விடமாட்டார்

இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

6. நீ முழு இருதயத்தோடு
தேவனை விசுவாசி
தேவமகிமை உந்தன்
வாழ்வை வந்து மூடும்

இது தேவபிரமாணம் இது வேதபிரமாணம்
இது ஜீவபிரமாணம் இது மாறா பிரமாணம்

Unnatharai Unmaiyai Nesikiren – உன்னதரை உன்னதரை

Unnatharai Unmaiyai Nesikiren
உன்னதரை உன்னதரை
உண்மையாய் உண்மையாய்
நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
உள்ளத்திலே என் உள்ளத்திலே

1. என் வாழ்க்கையை மலர் போல
மாற்றினவரும் அவரே
நான் பூத்துக் குலுங்கிட
செய்பவரும் அவரே

பாடுவேன் நான் பாடுவேன்
பரம தேவனை உயர்த்திடுவேன்

2. நான் நம்பினதெல்லாமே
வீண் போக விடவில்லையே
நான் நம்பின ஒவ்வொன்றையும்
என் கர்த்தரே தந்தாரே

பாடுவேன் நான் பாடுவேன்
பரம தேவனை உயர்த்திடுவேன்

3. நான் கூனி குறுகாமல்
நான் குறைந்தும் போகாமல்
என் நடைகள் ஒவ்வொன்றையும்
ராஜ நடை போல் மாற்றினிரே

பாடுவேன் நான் பாடுவேன்
பரம தேவனை உயர்த்திடுவேன்

4. இனி யார் தான் எனக்கு உண்டு
என்று கேள்விகள் எழும்பினது
இனி நான் தான் உனக்கு உண்டு
என்று கர்த்தர் தேற்றினார்

பாடுவேன் நான் பாடுவேன்
பரம தேவனை உயர்த்திடுவேன்

En Aandavar En Ratchaga – என் ஆண்டவா என் ரட்சகா

En Aandavar En Ratchaga
என் ஆண்டவா என் ரட்சகா
என் மேய்ப்பரே என் மீட்பரே

நீரே வழியும் நீரே சத்தியம் நீரே ஜீவனுமாம் – எனக்கு

1. துக்கம் வந்து நெருக்கி
என்னை சூழ்ந்து கொள்ளும் நேரம்
உம் பக்கம் வந்து நிற்பேன்
என்னை மகிழ்ச்சி ஆக்குவீர்

2. சத்துரு கூட்டங்கள் நெருக்கி
என்னை சூழ்ந்து கொள்ளும் நேரம்
உம் சமூகம் வந்து சொல்வேன்
நீர் யுத்தம் செய்திடுவீர்

3. என் வாழ்வினில் வந்திடும் தடைகளால்
நான் முன்னேற முடியாத நேரம்
உம் சமூகம் வந்து துதிப்பேன்
என்னை முன்னேற செய்திடுவீர்

Ethuvum Ennai Setha Paduthathu – எதுவும் என்னை சேதப்படுத்தாது

Ethuvum Ennai Setha Paduthathu
எதுவும் என்னை சேதப்படுத்தாது
எதுவும் என்னை துக்கப்படுத்தாது -2

ஹல்லேலுயா ஹல்லேலுயா
ஹல்லேலுயா ஹல்லேலுயா -2

1. கூடார மறைவில் ஒளித்து வைத்து
என்னை அவர் காத்திடுவார் -2

2. புல்லுள்ள இடங்களில் என்னை அவர்
நடத்தி திருத்தி காத்திடுவார் -2

3. என் மனவிருப்பம் நிறைவேற செய்வார்
என்னை அவர் திருப்தியாக்குவார் -2

4. இவ்வுலக பாடுகளில் பரமனையே துதித்திடுவேன்
இவ்வுலக வேதனையில் என் தேவனையே தேடிடுவேன் -2

5. சர்ப்பங்கள் தேள்களின் வல்லமை ஜெயிப்பேன்
சத்துருவின் சகல வல்லமை முறிப்பேன் -2