All Songs by david

Sarva Srishtikkum Yejamaan Neere – சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே

Sarva Srishtikkum Yejamaan Neere
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியை காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மைப் போற்றிடுவோம்
என்றென்றும் பணீந்து தொழுவோம்

ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ ஆ– மேன்

வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தை என்றும் மாறா
இல்வாழிக்கை அழிந்து மறைந்துபோம்
விசுவாசி என்றும் நிலைய்ப்பான்

ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ ஆ– மேன்

கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே
அதை சாத்தான் தொடாமல் காப்பீரே

ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ ஆ– மேன்

எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இதயைத்தை உம்மிடம் படைக்கின்றோம்
ஏங்குகின்றோம் உம் ஆசீர்பெறவே –

ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ ஆ– மேன்

சபையின் அஸ்திபாரமும் நீரே
சபையின் தலையானவர் நீரே
சபையை போஷித்து பாதுகாத்தென்றும்
பார்த்துக் கொள்ள வருபவர் நீரே

ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா
ஆ-ஆ-ஆ ஆ– மேன்

Anaadhi Devan Un Adaikalame – அநாதி தேவன் உன் அடைக்கலமே

Anaadhi Devan Un Adaikalame
அநாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே

இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன் – மரண
பரியந்தம் நம்மை நடத்திடுவார்

காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார்

கானக பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீருற்றாய் மாற்றினாரே

கிருபை கூர்ந்து மனதுருகும்
தூய தேவ அன்பே
உன் சமாதானத்தின் உடன்படிக்கை தனை
உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார்

வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம்

ஆனந்தம் பாடி திரும்பியே வா
தூய தேவ பெலத்தால்
சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
சந்ததம் மகிழ்ச்சி அடைவாய்

Thuthi Geethame Padiye – துதி கீதமே பாடியே

Thuthi Geethame Padiye

வாழ்த்தி வணங்கிடுவோம்
ஜோதியின் தேவனாம்
இயேசுவைப் பணிந்திடுவோம்

1. தந்தைப் போல் நம்மைத் தாங்கியே
தோளில் ஏந்தி சுமந்தனரே
சேதம் ஏதும் அணுகிடாமல்
காத்த தேவனைத் துதித்திடுவோம்

2. காரிருள் போன்ற வேளையில்
பாரில் நம்மைத் தேற்றினாரே
நம்பினோரைத் தாங்கும் தேவன்
இன்றும் என்றுமாய் துதித்திடுவோம்

3. பஞ்சைப் போல் வெண்மை ஆகிட
பாவம் யாவும் நீக்கினாரே
சொந்த இரத்தம் சிந்தி நம்மை
மீட்ட தேவனைத் துதித்திடுவோம்

4. கட்டுகள் யாவும் அறுத்துமே
கண்ணீர் கவலை அகற்றினாரே
துதியின் ஆடை அருளிச் செய்த
தேவ தேவனைத் துதித்திடுவோம்

5. வானத்தில் இயேசு தோன்றிடுவார்
ஆயத்தமாகி ஏகிடுவோம்
அன்பர் இயேசு சாயல் அடைந்து
என்றும் மகிழ்ந்தே வாழ்த்திடுவோம்

Kirubai Poorinthenai – கிருபை புரிந்தெனை ஆள்

Kirubai Poorinthenai
கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்

1. திரு அருள் நீடுமெய்ஞ்ஞான திரித்து,
வரில்நரனாகிய மா துவின் வித்து! – கிருபை புரிந்தெனை

2. பண்ணின பபாவமெலாம் அகல்வித்து,
நிண்ணயமாய் மிகவுந் தயை வைத்து – கிருபை புரிந்தெனை

3. தந்திரவான்கடியின் சிறைமீட்டு,
எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு – கிருபை புரிந்தெனை

4. தீமை உறும் பல ஆசையை நீக்கிச்
சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி – கிருபை புரிந்தெனை

5. தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து
நல்வினையே செய் திராணி அளித்து – கிருபை புரிந்தெனை

6. அம்பரமீதுறை வானவர் போற்ற
கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த – கிருபை புரிந்தெனை

Kartharin Panthiyil Vaa – கர்த்தரின் பந்தியில் வா

கர்த்தரின் பந்தியில் வா – சகோதரா

கர்த்தரின் பந்தியில் வா

கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி – கர்த்தரின்

1. ஜீவ அப்பம் அல்லோ? – கிறிஸ்துவின் திருச் சரீரம் அல்லோ?

பாவ மனங் கல்லோ? – உனக்காய்ப் பகிரப்பட்ட தல்லோ?

தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ

தின்று அவருடன் என்றும் பிழைத்திட – கர்த்தரின்

2. தேவ அன்பைப் பாரு – கிறிஸ்துவின் சீஷர் குறை தீரு

பாவக் கேட்டைக் கூறு – ராப்போசன பந்திதனில் சேரு

சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்

தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே – கர்த்தரின்

3. அன்பின் விருந்தாமே – கர்த்தருடன் ஐக்யப் பந்தி யாமே

துன்பம் துயர் போமே .. இருதயம் சுத்த திடனாமே

இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு

ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா – கர்த்தரின்

Pinmari Peiyattum – பின்மாரி பெய்யட்டும்

Pinmari Peiyattum

பின்மாரி பெய்யட்டும்
பரிசுத்தமே வல்லமை

பின்மாரி பெய்யட்டும் பின்மாரி பெய்யட்டும்
பின்மாரி பெய்யட்டுமே இயேசுவே
கல்வாரி அன்பினை எல்லோரும் கண்டிட
பின்மாரி பெய்யட்டுமே இயேசுவே

1. ஆதிநாட்கள் தொட்டு ஆவியானவரின்
அற்புத சக்திகளை இயேசுவே
பாவிகளாயினும் நாங்களும் கண்டிட
ஊற்றியருளணுமேஇயேசுவே

2. உள்ளம் உடல் பொருள் பங்கம் பதர் இன்றி
சுட்டெரித்தாகணுமே இயேசுவே
ஏசாயா நாவினைத் தொட்டத் தழலுடன்
மேசியா நீர் வாருமே இயேசுவே

3. எண்ணற்ற தேவைகள் எனைச்சூழ நிற்கையில்
எந்தன் நிலை பாருமே இயேசுவே
எத்தனை வீழ்ச்சிகள் எத்தனை தோல்விகள்
எந்தன் நிலை மாற்றுமே இயேசுவே

4. தேசம் எங்கும் தேவ செய்தி முழங்கிட
ஊக்கம் அருளணுமே இயேசுவே
மரணபரியந்தம் உண்மையாய் விளங்க
இயேசு என்னில் வாருமே இயேசுவே

Pinmaari Peyyattum
Parisuththamae Vallamai

Pinmaari Peyyattum Pinmaari Peyyattum
Pinmaari Peyyattumae Yesuve
Kalvaari Anpinai Elloerum Kantita
Pinmaari Peyyattumae Yesuve

1. Aathinaatkal Thottu Aaviyaanavarin
Arputha Sakthikalai Yesuve
Paavikalaayinum Naankalum Kantita
Uurriyarulanumae Yesuve

2. Ullam Utal Porul Pankam Pathar Inri
Sutteriththaakanumae Yesuve
Aesaayaa Naavinaith Thottath Thazhalutan
Maesiyaa Neer Vaarumae .. Yesuve

3. Ennarra Thaevaikal Enaissuuzha Nirkaiyil
Enthan Nilai Paarumae .. Yesuve
Eththanai Veezhssikal Eththanai Thoelvikal
Enthan Nilai Maarrumae .. Yesuve

4. Thaesam Enkum Thaeva Seythi Muzhankita
Uukkam Arulanumae .. Yesuve
Maranapariyantham Unmaiyaay Vilanka
Yesuve Ennil Vaarumae .. Yesuve

Vaan Veliliyil – வான்வெளியில் தூதர்கள்

Vaan Veliliyil
ரிகமரி நிச ரிகமரி நிச
ரிகமரி நிச சநிதபம ப
ரிகமரி நிச ரிகமரி நிச
சநிதபம ப ரிகமரி நிச

வான்வெளியில் தூதர்கள்
பாடும் ஓசை கேட்டது
வான் உயர் எழும் மலைகளும்
பதிலாய் தாளம் போட்டது

ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம் (2)
பமரி கமரிரிச ரிச பமதப மரி தம
ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம்
பதம கமபரி கமபரி கமபம தப
மபதனிச கப மரி கம..

மேப்பப்பர்களின் ஆனந்தம்
மேன் மேலும் சந்தோஷம்
ஓயா இன்பப் பாடல்கள்
ஒலிக்கிறதேன் கூறுங்கள்

ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம் (2)
தபகம பரி ரிகம பரிநி நிச தசகம
பம ரித பமரி சரிகமபத தமப
தமப பதநி சச சச சநி கமபரிகம..

பெத்லகேமுக்கு வாருங்கள்
பேறுபெற்றோராய் நில்லுங்கள்
நம்முடன் வாழ வந்துள்ள கடவுளை
குழந்தையாய் காணுங்கள்

ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம் (2)
சநி நிச கநி பத நிதபம ரிக மபரி
கமரி சப மபகரி மபதநிசகரிச
ரிரி சநி சநிச தபமரிக கப
சரிகப கமரிக மப தநி

ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம் (3)

Ottathai Odi – ஓட்டத்தை ஓடி முடிக்கணும்

Ottathai Odi
ஓட்டத்தை ஓடி முடிக்கணும்
ஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி, தங்கச்சி) நீ
கர்த்தரையே முன் வைத்து
கலங்காமல் மகிழ்வுடனே

ஒன்றையும் குறித்து கலங்காமல்
பிராணனை அருமையாய் எண்ணாமல் – 2
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்
பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் – 2

எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்
இன்னல் துன்பங்கள் எது வாந்தாலும் – 2
கண்ணீரோடும் தாழ்மையோடும்
கர்த்தர் பணி செய்து மடியணுமே – 2

கிராமம் கிராமமாய் செல்லணுமே
வீடு வீடாய் நுழையணுமே – 2
கிருபையின் நற்செய்தி சொல்லனுமே
ஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே – 2

Vaaikaalgal Orathilae – வாய்க்கால்கள் ஓரத்திலே

Vaaikaalgal Orathilae
வாய்க்கால்கள் ஓரத்திலே
நடப்பட்ட மரம் நானே
என் வேர்கள் தண்ணீருக்குள்

இலையுதிரா மரம் நான் – 2

செய்வதெல்லாம் வாய்க்கும்
வெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2
பசுமை எப்போதுமே
தப்பாமல் கனி கொடுப்பே-2

எப்போதும் பசுமை
தப்பாமல் கனிகள் – 2

கர்த்தரின் திரு வேதத்தில்
இன்பம் தினம் காண்பேன் – 2
இரவு பகல் எப்போதும் (நான்)
தியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும்

நீதிமான் செல்லும் வழிகள்
கர்த்தரோ தினம் பார்க்கிறார் – 2
துன்மார்க்கர் பாதையெல்லாம்
அழிவில்தான் முடியும் – 2 -எப்போதும்

துன்மார்க்கர் ஆலோசனை
கேளாமல் வாழ்ந்திருப்பேன் – 2
பொல்லாரின் சொற்கள்படி
நடவாமல் தினம் வாழ்வேன் – 2 -எப்போதும்

Marakkappaduvathillai Nee – மறக்கப்படுவதில்லை நீ

Marakkappaduvathillai Nee

மறக்கப்படுவதில்லை நீ
என்னால் மறக்கப்படுவதில்லை – 2

கலங்காதே என் மகனே(மகளே)
கைவிட நான் மனிதனல்ல – 2
தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை – 2
என் கண்முன்னே நீதானே
உன்னை நான் உருவாக்கினேன் – 2 -கலங்காதே

உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன்
எதிர்கால பயம் வேண்டாம் – 2
உன் ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – 2

மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்
விலகாது என் கிருபை – 2
விலை கொடுத்து வாங்கி உள்ளேன் – உன்னை
எனக்கே நீ சொந்தம் – 2

ஏசேக்கு சித்னா முடிந்து போனது
ரெகோபோத் தொடங்கிவிட்டது – 2
நீ பலுகி பெருகிடுவாய்
நீ குறுகி போவதில்லை – 2