Ottathai Odi – ஓட்டத்தை ஓடி முடிக்கணும்

Ottathai Odi
ஓட்டத்தை ஓடி முடிக்கணும்
ஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி, தங்கச்சி) நீ
கர்த்தரையே முன் வைத்து
கலங்காமல் மகிழ்வுடனே

ஒன்றையும் குறித்து கலங்காமல்
பிராணனை அருமையாய் எண்ணாமல் – 2
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்
பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் – 2

எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்
இன்னல் துன்பங்கள் எது வாந்தாலும் – 2
கண்ணீரோடும் தாழ்மையோடும்
கர்த்தர் பணி செய்து மடியணுமே – 2

கிராமம் கிராமமாய் செல்லணுமே
வீடு வீடாய் நுழையணுமே – 2
கிருபையின் நற்செய்தி சொல்லனுமே
ஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே – 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *