All Songs by Sam P. Chelladurai

Karthar Nallavar Rusitu – கர்த்தர் நல்லவர் ருசித்து

Karthar Nallavar Rusitu
கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்
யுத்தத்தில் வல்லவர் யோசித்து பாருங்கள்
கர்த்தர் பெரியவர் துதித்து பாடுங்கள்
அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் பெரியவர் -2

1. உன்னதமானவர் மறைவில் இருப்பவன்
சர்வ வல்லவர் நிழலில் தங்குவான் -2
அவர் சிறகுகளால் உன்னை மூடுவார்
அவர் செட்டையில் அடைக்கலம் புகுவாய் -2

2. வல்லமையானர் கரத்தில் இருப்பவன்
வாழ்வில் மேன்மையை அடைந்தே வாழுவான் -2
அவர் கிருபையினால் உன்னை நிரப்பிடுவார்
அவர் மகிமையில் தங்கிடுவாய் -2

3. பரிசுத்தமானவர் பாதத்தில் இருப்பவன்
பாரில் இயேசுவை பாடி போற்றுவான் -2
அவர் அன்பினால் உன்னை அணைத்திடுவார்
அவர் ஆறுதல் பெற்றிடுவாய் -2

Nallavar Neer Migavum – Naan Uyirodu Irukum – நான் உயிரோடு இருக்கும்

Nallavar Neer Migavum
நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
நான் உள்ளளவும் என் தேவனே
உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் – 2

எனக்காய் மரித்த என் தேவன் நீரே
உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்
கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று – 2

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

1. என்னை வாழவைக்க ஒப்புக்கொடுத்தீர் உம்மையே
வாதிக்கக் கொடுத்தீரே திரு உடலை எனக்காய் – 2

உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

2. பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே
பிரிக்கப்பட்டீரே என்னை இணைத்திடவே

உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

3. சாப முள்முடியை உம் சிரசினில் சுமந்தீரே
சாபமாய்த் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே

உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

4.எந்தன் அனைத்து தீமையும் உம்மேல் வந்ததால்
உந்தன் அனைத்து நன்மையும் என்மேல் வந்ததே

உந்தன் அன்பு பெரியதே – 4
ஈடிணையற்றதே
உந்தன் கிருபை பெரியதே – 4
கிருபையான இயேசுவே

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்
நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் – 2

Anbu Koorven Indru Ummil – அன்பு கூர்வேன் இன்று உம்மில்

Anbu Koorven Indru Ummil
அன்பு கூர்வேன் இன்று உம்மில்
அன்பு கூர்வேன் நான் ஆத்ம நேசரே
நேர்த்தியாய் என்னை மண்ணில்
காக்கும் உம் அன்பை எண்ணி
உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
கனம் பண்ணுவேன் உம் நாமமதை
நாளும் எனதுள்ளம்
நன்றி மிகுந்து பொங்க 2..

1. ஓ..! என் இதயம் என் ஆத்மா
என் சிந்தை உந்தன் சொந்தம்
கல்வாரி மேட்டின் மீதே
விலையீந்தீர் என்னை மீட்க
உயர்த்தி உம்மைத் துதிப்பேன்
கனம் பண்ணுவேன் உம் நாமமதை
நாளும் எனதுள்ளம்
நன்றி மிகுந்து பொங்க – ..அன்பு கூர்வேன்

Anbu koorven indru ummil
Anbu koorven naan aathma nesare
Nerthiyaai ennai mannil
Kaakkum um anbai yenni
Uyarthi ummami thuthipen
Ganam pannuven um naamamathai
Naalum enathullam
Nandri migunthu pongka

1. Ooh! En ethayam en aathmaa
En sinthai unthan sontham
Kalvari mettin meethe
Vilaiyinthir ennai meetka
Uyarthi ummami thuthipen
Ganam pannuven um naamamathai
Naalum enathullam
Nandri migunthu pongka