Song Category: Tamil

Kangalai Yeredupen – கண்களை ஏறெடுப்பேன்

Kangalai Yeredupen
கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்

விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து
எண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும்

1. காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்
காலைத் தள்ளாட வொட்டார்
வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்
காலையும் மாலையும் கன்னுரண்காதவர் – கண்

2. பக்தர் நிழல் அவரே – என்னை ஆதரித்திடும்
பக்தர் நிழல் அவரே
எக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாது
அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே – கண்

3. எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்து மாவையும் நாடோறும் காப்பவர் – கண்

Kaarirul En Nesa Deepame – காரிருளில் என் நேச தீபமே

Kaarirul En Nesa Deepame
1. காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்
வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்
நீர் தாங்கின் தூரக்காட்சி ஆசியேன்
ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமே

2. என் இஷ்டப்படி நடந்தேன், ஐயோ! முன்னாளிலே
ஒத்தாசை தேடவில்லை இப்போதோ நடத்துமேன்
உல்லாசம் நாடினேன் திகிலிலும்
வீம்பு கொண்டேன் அன்பாக மன்னியும்

3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர் இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும்
உதய நேரம் வரக் களிப்பேன்
மறைந்து போன நேசரைக் காண்பேன்

Rajan Thaveethuril – ராஜன் தாவீதூரிலுள்ள

Rajan Thaveethuril
1. ராஜன் தாவீதூரிலுள்ள
மாட்டுக் கொட்டில் ஒன்றிலே
கன்னி மாதா பாலன் தன்னை
முன்னணையில் வைத்தாரே
மாதா, மரியம்மாள்தான்
பாலன் இயேசு கிறிஸ்துதான்

2. வானம் விட்டுப் பூமி வந்தார்
மா கர்த்தாதி கர்த்தரே
அவர் வீடோ மாட்டுக் கொட்டில்
தொட்டிலோ முன்னணையே
ஏழையோடு ஏழையாய்
வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்

3. ஏழையான மாதாவுக்கு
பாலனாய்க் கீழ்ப்படிந்தார்
பாலிய பருவம் எல்லாம் அன்பாய்
பெற்றோருக்கு அடங்கினார்
அவர்போல் கீழ்ப்படிவோம்
சாந்தத்தோடு நடப்போம்

4. பாலர்க்கேற்ற பாதை காட்ட
பாலனாக வளர்ந்தார்
பலவீன மாந்தன் போல
துன்பம் துக்கம் சகித்தார்
இன்ப துன்ப நாளிலும்
துணை செய்வார் நமக்கும்

5. நம்மை மீட்ட நேசர் தம்மை
கண்ணால் கண்டு களிப்போம்
அவர் தாமே மோட்ச லோக
நாதர் என்று அறிவோம்
பாலரை அன்பாகவே
தம்மிடத்தில் சேர்ப்பாரே

6. மாட்டுத் தொழுவத்திலல்ல
தெய்வ ஆசனத்திலும்
ஏழைக் கோலமாக அல்ல
ராஜ கிரீடம் சூடியும்
மீட்பர் வீற்றிருக்கின்றார்
பாலர் சூழ்ந்து போற்றுவார்

Aadhi Thiru Vaarthai – ஆதித் திருவார்த்தை

Aadhi Thiru Vaarthai
ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலனாகப் பிறந்தார்
ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட
ஆதிரையோரையீடேற்றிட.

மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து,
மரிய கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்,
உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகி
மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
தாம், தாம் தன்னர வன்னர
தீம்; தீம், தீமையகற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம் பாடவே,
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட

1. ஆதாம் ஓதி ஏவினார்; ஆபிரகாம் விசுவாசவித்து,
யூதர் சிம்மாசனத்தாளுகை செங்கோல்
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார். – ஆதி

2. பூலோகப் பாவ விமோசனர், பூரண கிருபையின் வாசனர்
மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார். – ஆதி

3. அல்லேலுயா! சங்கீர்த்தனம் ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள், தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார். – ஆதி

Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா

Oppilla Thiru Ira
1. ஒப்பில்லா – திரு இரா
இதில்தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்
அன்பின் அதிசயமாம்

2. ஒப்பில்லா – திரு இரா
யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை
மீட்டு விண்ணுக்குயர்த்த தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்
எத்தனை தாழ்த்துகிறார்

3. ஒப்பில்லா – திரு இரா
ஜென்மித்தார் மேசியா
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்

Kel Jenmitha – கேள் ஜென்மித்த ராயர்க்கே

Kel Jenmitha
1. கேள் ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே
அவர் பாவ நாசகர்
சமாதான காரணர்
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர் போல் கெம்பீரித்து
பெத்லேகேமில் கூடுங்கள்
ஜென்ம செய்தி கூறுங்கள்

கேள் ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே

2. வானோர் போற்றும் கிறிஸ்துவே
லோகம் ஆளும் நாதரே
ஏற்ற காலம் தோன்றினீர்
கன்னியிடம் பிறந்தீர்
வாழ்க நர தெய்வமே
அருள் அவதாரமே
நீர் இம்மானுவேல் அன்பாய்
பாரில் வந்தீர் மாந்தனாய்

3. வாழ்க சாந்த பிரபுவே
வாழ்க நீதி சூரியனே
மீட்பராக வந்தவர்
ஒளி ஜீவன் தந்தவர்
மகிமையை வெறுத்து
ஏழைக்கோலம் எடுத்து
சாவை வெல்லப் பிறந்தீர்
மறு ஜென்மம் அளித்தீர்

Rakalam Bethlehem – ராக்காலம் பெத்லேம்

Rakalam Bethlehem
1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்

2. அவர்கள் அச்சங் கொள்ளவும்
விண் தூதன் திகில் ஏன்
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்

3. தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்

4. இதுங்கள் அடையாளமாம்
முன்னணை மீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்

5. என்றுரைத்தான் அக்ஷணமே
விண்ணோரம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்

6. மா உன்னதத்தில் ஆண்டவா
நீர் மேன்மை அடைவீர்
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்

Aarivar Aaraaro – ஆர் இவர் ஆராரோ

Aarivar Aaraaro
ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ?

1. பாருருவாகுமுன்னே – இருந்த
பரப்பொருள் தானிவரோ?
சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்
சிருஷ்டித்த மாவலரோ? – ஆர்

2. மேசியா இவர்தானோ? – நம்மை
மேய்த்திடும் நரர்கோனோ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி
அன்புள்ள மனசானோ? – ஆர்

3. தித்திக்குந் தீங்கனியோ? – நமது
தேவனின் கண்மணியோ?
மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய
மேவிய விண் ஒளியோ? – ஆர்

4. பட்டத்துத் துரைமகனோ? – நம்மை
பண்புடன் ஆள்பவனோ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக்
காட்டிடுந் தாயகனோ? – ஆர்

5. ஜீவனின் அப்பமோதான்? – தாகம்
தீர்த்திடும் பானமோதான்?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல
மானவர் இவர்தானோ? – ஆர்

Ah Ambara Umbara – ஆ அம்பர உம்பர

Ah Ambara Umbara
ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ!

1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவ
அச்சய சச்சிதா – ரட்சகனாகிய
உச்சிதவரனே! – ஆ!

2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்று
அல்லிராவினில் வெல்லையடியினில்
புல்லணையிற் பிறந்தார் – ஆ!

3. ஞானியர் தேட வானவர் பாட – மிக
நன்னய உன்னத – பன்னரு மேசையா
இந்நிலம் பிறந்தார் – ஆ!

4. கோனவர் நாட, தானவர் கொண்டாட – என்று
கோத்திரர் தோத்திரஞ் – சாற்றிடவே யூத
கோத்திரன் பிறந்தார் – ஆ!

5. விண்ணுடு தோண, மன்னவர் பேண – ஏரோது
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார் – ஆ!

Aathuma Kartharai Thuthikkirathe – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

Aathuma Kartharai Thuthikkirathe
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே – என்றன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ!

நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே
எந்தன் பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே – இதோ!

1.அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை
அனைவரும் பாக்கிய மென்பாரே
முடிவில்லா மகிமை செய்தாரே – பல
முடையவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! – ஆத்துமா

2.பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் – நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார்
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை
உகந்தவர் தாழ்த்திடில் உயர்த்துகின்றார் – இதோ! – ஆத்துமா

3.முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல் – அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால்
நட்புடன் நினை வொடு நல்லிஸரேல் – அவன்
நலம்பெற ஆதரித் தார்மறவேல் – இதோ! – ஆத்துமா