Song Category: Tamil

Amen Alleluia – ஆமென் அல்லேலூயா

Amen Alleluia
ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா,
ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா

தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்
துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! – ஆமென்

1. வெற்றிகொண்டார்ப் பரித்து – கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து – முறித்து
பத்ராசனக் கிறிஸ்து – மரித்து
பாடுபட்டுத்தரித்து முடித்தார் – ஆமென்

2. சாவின் கூர் ஒடிந்து – மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து – விழுந்து
ஜீவனே விடிந்து – தேவாலயத்
திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது – ஆமென்

3. வேதம் நிறைவேற்றி – மெய் தோற்றி
மீட்டுக் கரையேற்றி – பொய் மாற்றி
பாவிகளைத் தேற்றி – கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் – ஆமென்

Vaarum Naam Ellarum – வாரும் நாம் எல்லாரும்

Vaarum Naam Ellarum
வாரும் நாம் எல்லாரும் கூடி
மகிழ் கொண்டாடுவோம் – சற்றும்
மாசிலா நம் இயேசு நாதரை
வாழ்த்திப் பாடுவோம் ஆ!

1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத்
தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் – வாரும்

2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே
மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் – வாரும்

3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும்
நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் – வாரும்

4. மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே – இந்த
மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் – வாரும்

5. பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே – அவர்
பட்சம் வைத்துறும் தொழும் பரை ரட்சை செய்கிறார் – வாரும்

Vaarum Naam Ellaarum Kooti
Makil Kondaaduvom – Sattum
Maasilaa Naam Yesu Naatharai
Vaalththi Paaduvom Aa!

1. Thaarakam Atta Aelaikal Thalaikka Naayanaar – Inthath
Thaaranni Yilae Manudava Thaaram Aayinaar – Vaarum

2. Maa Pathaviyai Ilanthu Variyar Aana Naam – Angae
Maatchi Ura Vaenntiyae Avar Thaalchchi Aayinaar – Vaarum

3. Njaalamathil Avarkkinnai Nannpar Yaarular – Paarum
Nam Uyirai Metkavae Avar Tham Uyir Vittar – Vaarum

4. Maa Kotiya Saavaththin Valimai Neekkiyae – Intha
Manndalaththi Nintuyirth Thavar Vinndalanj Sentar – Vaarum

5. Paavikat Kaayp Paranidam Parinthu Vaenntiyae – Avar
Patcham Vaiththurum Tholum Parai Ratchamo Seykiraar – Vaarum

Anandame Jeya Jeya – ஆனந்தமே ஜெயா ஜெயா

Anandame Jeya Jeya
ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்

ஞானரட்சகர் நாதர் நமை – இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் – ஆனந்தமே

1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்
எங்கள் ரட்சகரேசு நமை – வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ் – ஆனந்தமே

2. முந்து வருட மதினில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல
தந்து நமக்குயிருடையுணவும் – வெகு
தயவுடன் இயேசு தற்காத்ததினால் – புகழ் – ஆனந்தமே

3. பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும்
தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை – இத்
தரை தனில் குறை தணித்தாற்றியதால் – புகழ் – ஆனந்தமே

Ennalume Thuthipai – எந்நாளுமே துதிப்பாய்

Ennalume Thuthipai
எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்
இந்நாள் வரையிலே உன்னாதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது- எந்நாளுமே

1. பாவங்கள் எத்தனையோ – நினையாதிருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மா தயவை நினைத்து – எந்நாளுமே

2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை
நித்தமுனை முடி சூட்டினதுமன்றி
நித்தியமாயுன் ஜீவனை மீட்டதால் – எந்நாளுமே

3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே பூர்த்தியாய்
நனமையாலுன் வாயை
உன் வயது கழுகைப்போல் பலங்கொண்டு
இன்னும் இளமை போலாகவே செய்ததால் – எந்நாளுமே

4. பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே சத்தியமேயிது – எந்நாளுமே

5. மன்னிப்பு மாட்சிமையாம் – மா தேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்
எண்ணுவாயோ கிழக்கும் மேற்கும் தூரமே
மண்ணில் உன்பாவன் அகன்றத் தூரமே – எந்நாளுமே

6. தந்தை தன பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ
தந்தை தன பிள்ளைகட்கு
எந்த வேளையும் அவரோடு தங்கினால்
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே – எந்நாளுமே

Ennaalumae thudhippaai – ennaathumaavae, nee
Ennaalumae thudhippaai
Innaal varaiyilae unnadhanaar seidha
Ennillaa nanmaigal yaavum maravaadhu – Ennaalumae

1. Paavangal ethanaiyoa – ninaiyaa dhirundhaarun
Paavangal ethanaiyoa
Paazhaana noayai agatri gunamaakki
Paarinil vaitha magaa thayavai enni – Ennaalumae

2. Ethanaiyoa kirubai – unnuyirkku seidhaarae
Ethanaiyoa kirubai
Nithamunai mudi soottinadhumandri
Nithiyamaai un jeevanai meettadhaal – Ennaalumae

3. Nanmaiyaalun vaayai – niraithaarea poorthiyaai
Nanmaiyaalun vaayai
Un vayadhu kazhugaippoal balangondu
Oangu ilamaipoal aagave seidhadhaal – Ennaalumae

4. Boomikkum vaanathukkum – ulla dhooram poalavae
Boomikkum vaanathukkum
Saami bayamullavar mael avar arul
Saalavum thangumae sathiyamae idhu – Ennaalumae

5. Mannippu maatchmaiyaam – maadhaevan arulum
Mannippu maatchimaiyaam
Ennuvaayoa kizhakku maerkin thooramae
Mannil unpaavam agandrathooramae – Ennaalumae

6. Thandhaithan pillaikadku – thayavoadirangaanoa
Thandhaithan pillaikadku
Endha vaelaiyum avaroadu thanginaal
Sondham paaraattiyae thookki sumappaarae – Ennaalumae

Immattum Jeevan Thantha – இம்மட்டும் ஜீவன் தந்த

Immattum Jeevan Thantha
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
எண்ணமாய் ஸ்தோத்தரிப்போமாக

நம்மை ரட்சிக்க வந்து தம்மைப் பலியாய்த் தந்து
நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்

1. காலம் சொல் போல் கழியும் தண்ணீரைப் போல் வடியும்
கனாவைப் போலேயும் ஒழியும்
வாலிபமும் மறையும் சீலம் எல்லாம் குறையும்
மண்ணின் வாழ்வொன்றும் நிற்க மாட்டாது
கோலப் பதுமைக்கும் நீர்க்குமிழிக்கும் புகைக்குமே
கொண்ட உலகத்தில் அண்ட பரண் எமைக்
கண்டு கருணைகள் விண்டு தயவுடன் – இம்

2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்
பரம பாதையைத் தொடர்ந்தும்
வலிய தீமையை வென்றோம் நலியும் ஆசையைக் கொன்றோம்
வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம்
கலி என்றதெல்லாம் விண்டோம் கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்
காய்ந்த மனதொடு பாய்ந்து விழு கணம்
சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் – இம்

3. சன சேதம் வருவிக்கும் கேடுகட்கோர் முடிவு
தந்து நொறுக்கினதைக் கட்டிக்
கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக்
கண்ணோக்கி எல்லார் மேல் அன்றன்று
தினமும் அருள் உதிக்கச் செய்து தமது தேவ
சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்
மைந்தனால் எங்களை இந்த விநோதமாய் – இம்

Karaiyeri Umathandai – கரையேறி உமதண்டை

Karaiyeri Umathandai
1. கரையேறி உமதண்டை
நிற்கும்போது ரட்சகா
உதவாமல் பலனற்று
வெட்கப்பட்டுப் போவேனோ

ஆத்மா ஒன்றும் இரட்சிக்காமல்
வெட்கத்தோடு ஆண்டவா
வெறுங்கையனாக உம்மைக்
கண்டுகொள்ளல் ஆகுமா

2. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
வைத்திடாமல் சோம்பலாய்க்
காலங்கழித்தோர் அந்நாளில்
தூக்கிப்பார் நிர்ப்பந்தராய்

3. தேவரீர் கை தாங்க சற்றும்
சாவுக்கஞ்சிக் கலங்கேன்
ஆயினும் நான் பெலன் காண
உழைக்காமற் போயினேன்

4. வாணாள் எல்லாம் வீணாளாகச்
சென்று போயிற்றே ஐயோ
மோசம் போனேன் விட்ட நன்மை
அழுதாழும் வருமோ

5. பக்தரே உற்சாகத்தோடு
எழும்பிப் பிரகாசிப்பீர்
ஆத்துமாக்கள் யேசுவண்டை
வந்துசேர உழைப்பீர்

Manthayil Sera Aadugale – மந்தையில் சேரா ஆடுகளே

Manthayil Sera Aadugale
மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே

அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு
நடத்திடுவார்

1. காடுகளில் பல நாடுகளில் என்
ஜனம் சிதறுண்டு சாகுவதா
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை

2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
எனை அங்கு கொண்டு செல்ல இங்கு ஆட்கள் உண்டு
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்

3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்

Ennai Undakiya En Devathi Devan – என்னை உண்டாக்கிய

Ennai Undakiya En Devathi Devan
என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவது மில்லை உறங்குவதுமில்லை (2)

1. என்மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்
சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்
பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே – என்னை

2. பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்
பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்
ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்
கேடகமும் துருகமும் பெலன் அவரே – என்னை

3. ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
ரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையே
வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலே
வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர் – என்னை

Manavalan Karthar Yesu – மணவாளன் கர்த்தர் இயேசு

Manavalan Karthar Yesu
மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே
மணவாட்டி சந்திக்க ஆயத்தம்தானா?

பிரியமே நீ ரூபவதி
எழுந்து வா உன் நேசரைச் சந்திக்கவே – மணவாளன்

1. குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே
காட்டுப்புறா சப்தம் நம் தேசம் நிறையுதே
அத்திமரம் காய்காய்க்க காலம் வந்தததே
திராட்சைக் கோடி பூ பூத்து வாசம் பெருகுதே – என் பிரியமே

2. மாரிக்காலம் சென்றது மழையும் வந்தது
பூமியிலே புஷ்பங்கள் பூத்துக் குலுங்குதே
கன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவே
கர்த்தர் இயேசு வரும் நாளை சொல்லிப் பாடிடு – என் பிரியமே

3. சாரோனின் ரோஜாவாம் கர்த்தர் இயேசு
பள்ளத்தாக்கின் லீலியாம் பரமன் இயேசு
தாகம் தீர்க்கும் ஜீவ நதி கர்த்தர் இயேசு
பாவம் போக்கும் பரிகாரி பரமன் இயேசு – என் பிரியமே

Elunthar Iraivan – எழுந்தார் இறைவன்

Elunthar Iraivan
எழுந்தார் இறைவன் – ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்

1. சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க – இப்
பூவின் மீதுசபை செழிக்க – எழுந்தார்

2. செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்
நித்திய ஜீவனை அளிக்கத் – தேவ
பக்தர் யாவரும் களிக்க – எழுந்தார்

3. விழுந்தவரைக் கரையேற்றப் – பாவத்
தழுந்து மனுக்குலத்தை மாற்ற – விண்ணுக்
கெழுந்து நாம் அவரையே போற்ற – எழுந்தார்

4. கருதிய காரியம் வாய்க்கத் – தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்
இரு திறத்தாரையும் சேர்க்க – எழுந்தார்

5. ஏதுந் தீவினை செய்யாத் தூயன் – எப்
போதுமே நன்மைபுரி நேயன் – தப்
பாது காத்திடும் நல்லாயன் – எழுந்தார்

Elunthaar Iraivan – Jeyamae Jeyamenavae
Elunthaar Iraivan

Chorus

1. Saavin Payangaraththai Olikkak – Ketta
Aaviyin Vallamaiyai Alikka – Ip
Poovinmeethu Sapai Selikka – Elunthaar

2. Seththavar Meenndumae Pilaikka – Uyar
Niththiya Jeevanai Alikkath – Deva
Pakthar Yaavarum Kalikka — Elunthaar

3. Vilunthavarai Karaiyaetta – Paavath
Thelunthu Manukkulaththai Maatta – Vinnnuk
Kelunthu Naam Avaraiyae Potta – Elunthaar

4. Karuthiya Kaariyam Vaaykkath – Thaeva
Suruthi Molikalellaam Kaakka – Nam
Iru Thiraththaaraiyum Serkka – Elunthaar

5. Yethuthivenai Seiyathuvan – Ep
Pothumae Nanmaipuri Noyan – Thap
Pakathidum Nallayan – Elunthaar